சிறுகதை

Saturday, June 15, 2013

பொன்வண்டு

"உங்கள் தோட்டத்தில் விளைவது சூரிய காந்தி... நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் சூரிய காந்தி...!!!"

தட்டென்று தலையில் ஒரு அடி....

" டெபாசிட் கிடைக்குமான்னு தெரில... இதுல இவன் வேற....."

"மைக்ல பேசிக்கலாம்னு சொல்லி தானே கூட்டி வந்த...."

"டேய் மைக்க ஆப் பண்ணுடா...."

"போ எனக்கு மைக்கும் வேணாம் ஒன்னும் வேணாம்.. என்ன வீட்ல கொண்டு போய் விடு....."

அழ ஆரம்பித்தான்..... மைக் வழியாக ஒழி பெருக்கப்பட்டு "ஊ... ஊ....ம்ம்ம்..."
என்று சுற்றி இருந்த மலைகளில் எதிரொலித்தது.

"மல மேல போரம்டா.... ஆனயெல்லாம் இருக்கும்..... அருவில குளிக்கலாம்.... பலா பழம் சாப்பிடலாம்..... மைக்ல நீயும் பேசலாம்...." அசை கூறி கூப்பிட்ட சித்தப்பாவை முறைத்து கொண்டு வந்தான். இத்தனை ஆசை கூறியும் தன்னைவிட 4 வயது மூத்த அண்ணன் ஏன் வரவில்லை என்று புரிந்துகொண்டான்.

அவர் அவனை கண்டுகொள்ளவில்லை..... மக்களுக்கு எதிர்காலத்தில் செய்ய போகும் திட்டங்களை அடுக்கி கொண்டிருந்தார்.......!!!

ஜன்னலில் சாய்ந்து அழுது முடித்திருந்த அவனது கண்களின் மிச்ச கண்ணீர் காற்றில் அடித்து செல்லப்பட்டது...... அதை இடுகட்ட ஒரு மழைத்துளி அவனது கன்னத்தில் வந்து அமர்ந்தது..!!!

மலையையும் மழையையும் ரசிக்கும் வயது அவனுக்கு இல்லை...
"ரேவதி கூடவாது   பல்லாங்குழி விளையாண்டுகிட்டு இருந்துருகல்லம்..."
எண்ணி கொண்டே பெரு மூச்சு விட்டான்.

அந்த மகிந்திரா வேன்னில் அவன் அவனது சித்தப்பா உட்பட இன்னும் இரண்டு பேர்... ஒரு கட்டு போஸ்டர்.... ஓட்டுவதற்கு பசை..... நைட்டில் எரியவிட.. சூரிய காந்தி வடிவில் அமைக்க பட்ட சீரியல் லைட், முன்னாள் கட்ட பட்ட இரண்டு குழாய் ஸ்பீக்கர்..!!.

மலை ரோட்டில் வேன் விரைந்து கொண்டிருந்தது..!!!

அவனும் எத்தனை நேரம் தான் மரங்களையும்... பறவைகளையும்.....மறைந்து மறைந்து மீண்டும் வரும் மனிதர்களையும் பார்த்துக்கொண்டிருப்பான்.

சிறிது நேரத்தில் ஒரு கிராமத்தில் வண்டி நின்றது... அச்சடித்த காகிதங்களை கையில் எடுத்துகொண்டு..வீடு வீடாக கொடுக்க அனைவரும் கிளம்பினர்.... அவன் ஜன்னலை பிடித்துக்கொண்டு கோபமாக அமர்திருந்தான்....!!!

"இங்கயே உட்காந்திரு.. எங்கயும் போக கூடாது..... வண்டில நெறையா சாமான் இருக்கு...." பதில் எதிர் பார்க்காமால் விரைந்தார்.

கா...ன்னு.....குடி..... கண்ணுகுடி.... எழுத்துக்கூட்டி எதிரில் எழுதிருந்த எழுத்துகளை படித்தான்.

சுற்றும் முற்றும் பார்த்த அவனது கண்களில் அந்த மைக் தென்பட்டது.... சந்தோசம் தொற்றி கொண்டது... அதை எடுக்க தாவி குதித்தான்....பச்சக் என்று சத்தம்.

போஸ்டர் ஓட்ட கொண்டுவந்திருந்த பசை டப்பாவில் காலை விட்டுவிட்டான். வீட்டிலேயே கிண்டிய பசை...
" தொடாதே.... ஒட்டுச்சுனா..தோல உரிச்சு தான் எடுக்கணும்..."
நேற்று அப்பாயி சொன்னது பொறி தட்டியது.

காலை வெளியே எடுக்கவே சிரமப்பட வேண்டியதாயிற்று... எடுத்து காலை பச்சேக்கென தரையில் வைக்க தரையில் ஒட்டிக்கொண்டது....சிரமப்பட்டு எடுத்து..நொண்டி அடித்துக்கொண்டே வெளியே வந்தான்..... வெளியில் சில சிறுவர்கள் நாடு பிரித்து விளையாடி கொண்டிருக்க..... அவர்கள் பக்கத்திலிருந்த குழாயை நோக்கி பயணத்தை ஆரம்பித்தான்....நொண்டி நொண்டி இவன் வருவதை பார்த்த அந்த சிறுவர்கள் இவனுடன் விளையாட துவங்கினர்.... சுற்றி வளைத்து.. நக்கலடித்து.... ஒருவன் இவனை தள்ளியே விட்டுவிட்டான்.

ஒற்றை காலை வைத்து அவனால் எழ முடியாவில்லை... இதற்கு மேல் பொறுக்காவும் முடியவில்லை ..இருகால்களையும்..தரையில் ஊனி எழுந்து அவர்களை விரட்டி விட்டு... குழாய் அருகில் சென்றான்.
 குழாயில் தண்ணீர் வரவில்லை... அந்த பசங்கள் இவனை சுற்றி கொள்ள.....கண்கள் பொத்துக்கொண்டது.

"டேய் இந்தா.... ஓடுங்கடா...ஒருத்தன் மாட்டிடகூடாதே " ஒரு நடுத்தர வயதுடைய பெண் வந்தாள்.

"யே தம்பி என்ன வெளியூரா..."

"ஆமாக்கா ....மணப்பறை "

"என்ன கால் பூர பச..."

"வேன்ல இருந்துச்சு தெரியாம கால வுட்டுட்டேன்..."

"அய்யோ... வேன்லன்னா கணேஷு கூடவா வந்த..."

"ஆமா எ சித்தப்பா..."

"அட முருகே பையான நீ...!"

"முருகேசன்...."

சிரித்தாள்.... "நாங்க முருகேன்னு கூப்புடுவோம்...."

அவன் காலை தூக்கி கொண்டே பேசிகொண்டிருந்தான்
"வா வா...தண்ணி தாரேன்...." அருகில் இருந்த வீடிற்கு கூட்டி சென்றாள்

"நில்லு தண்ணி கொண்டாறேன்.."

உள்ளே போனாள்..."ஏ முத்து.. அந்த பெரிய சொம்பு எங்கடி....."

"கொள்ளேல இருக்குமா..." ஒரு சிறு பெண்ணின் குரல்.

அந்த சிறுமி தண்ணி கொண்டுவந்தாள்.. ரெட்டை சடை...பாவாடை சட்டை..... இவன் காலை பார்தததும் சிரித்தாள்.. சிரிப்பை அடக்கி கொண்டு

"இந்தாங்க....." என்றாள்

அவனது எட்டு வருட வாழ்வில் முதன் முறையாக ங்க போட்டு அளித்த ஒருத்தி.

அதை வாங்கி ஊற்றினான்.. அவள் "ஐயோ..!" என்றாள்

"என்ன..."

"அப்படியே ஊத்தினா பச எப்படி போகும் கையாள தேச்சு கழுவுங்க..."

ஒரு கையில் சொம்பை வைத்து கொண்டுஒரு கையில் தேய்க்க அவன் சிரமப்பட..
"கொடுங்க..."
அவள் வாங்கி ஊற்றினாள்.... நன்றாக கழுவ நான்கு சோம்பு தேவை பட்டது.
அதற்குள்  அவள் அன்னை காப்பி போட்டு வந்து
"இந்தா காப்பி தண்ணி..." என்றாள்

"இல்ல வேணா....."

"எல்லாம் சொந்தகாரங்கதான் குடி.." அவனுக்கு புரியவில்லை
இருந்தும் "சித்தப்பா திட்டுவாரு...."

"நல்ல சித்தப்பா... அவரே மத்தியானம் இங்க தான் சாப்பிட வருவாரு..குடி...."

"ஊர்ல இருந்து லீவுக்கு வந்தியா...."

"ஆமா ஆனுவல் லீவு.."

"தாத்தா நல்லாருக்க...."

"அது எங்காயாவது ஊர் சுத்தி கிட்டே இருக்கு.. வீட்ல இருக்கறதே இல்ல...."

"உனக்கு என்ன பிடிக்கும்..கோழி அடிக்கவா...."

"இல்ல வேணா வேணா.... ஒன்னும் வேணாம்...."

"பச்ச்.... சேரி நா கோழி அடிச்சு கொழம்பு வக்கிறேன்.. மத்தியானம் சாப்டுட்டு போ..." என்றவள் தொடர்ந்து

"எ முத்து தம்பி கூட விளையாண்டுட்டு இரு நா இந்த செல்லா வீடு வரைக்கும் போயிட்டு வாரேன்..." என்று கிளம்பினாள்.

முத்து கதவை பிடித்துக்கொண்டே அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் ..
அவள் அம்மா கேட்காத கேள்வி ஒன்றை கேட்டாள்
"உங்க பேரு என்ன....?"
"சுந்தர்...."
"உங்க பேரு...."
"முத்து ...."
"முழு பேரு...."
"ஹ்ம்ம் வேணாம் நல்லாருக்காது.. முத்துனே வச்சுக்கோங்க..."
"பரவால சொல்லு....."
உள்ளே ஓடி விட்டாள்.. கேக்காமயே இருந்துருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு.

சிறுது நேரத்தில் வெளியே வந்தாள் ..... கையில் நுங்கினால் செய்யப்பட்ட dumbells... ஒரு கவட்டை குச்சி....அதன் ஒரு நுனியில் மற்றொரு நுங்கு...
"என்ன இது...."வியப்புடன் கேட்டான்
"ஹா.. இது நுங்கு வண்டி..... இது ஸ்டியரிங்....."
"என்ன விளையாடுவ...."
"வண்டி ஓட்டி... இதோ அந்த மலை உச்சில ஒரு பெருமாள் இருக்காரு...... அந்த பெருமாள் கோயில் வரைக்கும் வண்டிலேயே போலாம்... வரியா...?"
"ஹ்ம்ம் போலாமே..."
 மேடு பள்ளங்களில் ஏறி... கற்களில் லேசாய் தடம் பொரண்டு.... சற்று தூரத்தில் இருந்த மரம் வரைக்கும் ஓட்டி சென்றாள்.. அவள் தோள்களில் கை வைத்துக்கொண்டு அவனும் பின்னே ஓடினான்.

"என்ன நினுட்ட...."
"doubles அடுச்சென்லா அதா ரெஸ்ட் எடுக்குறேன்... ஜூஸ் குடிகிரியா..."
"ஜூஸ்சா என்ன ஜூஸ் வச்சுருக்க....."
"நில்லுப்பா எடுக்குறேன்"
ஹோடேலில் உப்பு வைத்திருக்கும் குட்டி கோக் பாட்டில் ஒன்றை எடுத்தாள்...
"எ ஒன்னு தாப்பா இருக்கு.... பாதி பாதி குடிக்காலாம்...."
காலியான பாட்டிலை அவள் வாயில் கொஞ்சம் ஊற்றி அவனிடம் தந்தாள்....
அவனும் கொஞ்சம் ஊற்றி கொண்டான்....
"எ எனக்கு இன்னும் tired- ஆ இருக்குப்பா நீ ஓட்றியா...."
அவனுக்கு சந்தோசம் தாளவில்லை....ஆசையாய் வாங்கி ஓட்டினான்.
"டுர்ர்ர்ர்ர்...."
ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும்.... அவள் சொல்லிகொடுக்க சொல்லிகொடுக்க நன்றாக பழகிவிட்டன்...!!!

"ஹே நிப்பாட்டு நிப்பாட்டு....."
"எ முத்து என்னாச்சு...."
"இதா இந்த வேப்ப மரம் தான் பெருமாள் கோவில்.. வண்டிய பஸ் ஸ்டான்ட் குள்ள விடு...."
"கோவில் மல உச்சிலல இருக்கு....."
"பச்ச் நம்மக்கு இதுதான்ப்பா கோவில்...வண்டி உள்ள விடு....."
 வண்டியை மரத்தில் சாய்த்து நிப்பாட்டினான்... இருவரும் அந்த மரத்தடியில் அமர்ந்தனர்.
"முத்து நீ அந்த மல உச்சிக்கு போயிருக்கியா..."
"ஹ்ம்ம் நெறையா தடவ....."
"மேல என்ன யான இருக்குமா....?"
"யான சிங்கம் புலி எல்லாம் இருக்கும்... மயில் இருக்கு...மான் இருக்கு..முயல் இருக்கு...."
"நீ எல்லாம் பாத்துருக்கியா....."
"ஹ்ம்ம் பாத்துருக்கேன்...."
"எனக்கும் அதெல்லாம் பாக்கணும்னு அசையா இருக்கு...வண்டி எடுத்துட்டு  போலாமா "
"அட நில்லுப்பா இன்னும் டிக்கெட்டே சேரல....."
"பச்ச்..." அவனது முகம் வாடி விட்டது.
"தனியால்லாம் பாக்க கூடாது. எங்க அப்பா வரட்டும் போலாம்...."
"இப்போ போலாம்...ப்ளீஸ் ப்பா... ப்ளீஸ் ப்பா "
அவள் சற்று யோசித்தாள்
"ஆங் ஒன்னு இருக்கு சுந்தர் வா காட்டுறேன்....."
"ஐ என்ன என்ன சொல்லு..."
"சொல்லமாட்டேன்... வா காட்டுறேன்....."
"என்னப்பா சொல்லேன்...."
"ஹ்ம்ம்ஹ்ம்ம் வா...வண்டிய எடு ரைட்...ரைட்.."
தடக் தடக் என்று மெதுவாக கிளம்பி வேகத்தை கிளப்பியது நுங்கு எக்ஸ்பிரஸ்.
"முத்து முத்து என்னன்னு சொல்லேன்பா..."
"ஷ்ஷ்ஷ் வா காமிக்கறேன்..."
வண்டியை உருட்டி கொண்டு இருவரும் ஓடிக்கொண்டிருந்தனர்....
" நீயே கண்டுபுடி பாப்போம்...."
"மானா...."
"ஹ்ம்ம்ஹ்ம்ம்...." ஓடிக்கொண்டே தலையை ஆடினாள்... ரெட்டை சடையும் சேர்ந்து ஆடியது
"முயலா....."
"ப்ச்ச் இல்லப்பா...."
"புலியா......"
சிரித்தாள்...
"லூசாப்பா நீ.... வீட்டுக்கு தானே போயிட்டு இருக்கோம்.. அங்க போய் புலி இருக்குமா லூசு...."
"நீயே சொல்லேன்...."
 வீடு வந்துவிட்டது.... வண்டியை அப்படியே போட்டுவிட்டு அவன் கைகளை ஒரு கையில் பற்றி உள்ளே ஓடினாள்.....

சிறு திண்ணை.. திண்ணையை தாண்டி நீளமாய் ஒரு அறை.. ஒரு மூலையில் அடுப்பு.... அறையில் நாலு அடி நடந்தால் கொல்லை.....

"ஹே என்ன வீட்டுக்குள்ள போற.... பொய் தானே சொன்ன ஒன்னும் இல்லேல...."

அவள்  சொல்லமால்..... ஒரு மூலையில் இருந்த அவளது பள்ளி பையை திறந்து....உள்ளிருந்து ரெட் கலர் geometry பாக்ஸ்சை எடுத்தாள்.....

சுந்தர் பலத்த ஏமாற்றத்தில் இருந்தான்... அவள் பரவசமாய் இருந்தாள்....
வா வா என்று சைகை செய்தாள்.. அவனும் போய் அவள் அருகில் அமர்ந்தான்...

"என்ன உன் geometry பாக்ஸ்ச காமிக்கதான் கூப்டியா..."

இல்லை என்று தலை ஆட்டி... திறந்து காமித்தாள்...

 இது  போல் அவன் பார்த்ததேதில்லை...உள்ளே சில இலைகள் நடுவே பெரிதாய், சிகப்பு கலரில் தலை மட்டும் மயில் தொகை போல் தகதகவென மின்னும் ஒரு வண்டு...!!!

கொஞ்சம் பெரிய வண்டை பார்த்தாலே பயபடும் இவனுக்கு ஏனோ இதை பார்த்து பயமில்லை.... பசு போல் சாந்தமாக பாக்ஸ்சுக்குள் நடை பயின்று கொண்டிருந்தது....அதன் தலையில் ஒரு  கயிறு கட்ட பட்டிருந்தது....!!!

"என்னவண்ட போய் பாக்ஸ் குள்ள வச்சுருக்க..... என்ன இது..."

"இது பொன்வண்டு...... கெடக்கவே கெடைக்காது..... கெடக்கிரதுக்கு ரொம்ப கொடுத்து வசுருக்கணும்....இத பாக்ஸ்குள்ள வச்சு வளத்தா முட்ட போடும்.... அப்புறம் குட்டி வரும்.... அந்த முட்டை வச்சு நம்ம எதனாச்சும் வேண்டுனா அது நடக்கும் தெரியுமா....."

தலை ஆட்டி ஆட்டி இலைகளை சாப்பிட்டு கொண்டிருந்தது அது..... அவள் அதன் மயில் தலையை தடவி கொடுத்தாள்....
"பாத்து முத்து கடிச்சுட போகுது...."
" சுந்தர்.. நீ வேணா தொட்டு பாரேன்...."

கைகள் நடுங்கி கொண்டே ஒத்தை விரலால்தொட போனான்....

"வாணி... அந்த பய சுந்தர் இருக்கானா...."

டக்கென்று கைகளை சுருக்கி கொண்டான்...
"அய்யோ சித்தப்பா வந்துட்டாரு..."
அவர் வாணியுடன் ஏதோ பேசி கொண்டிருக்க....
இவர்கள் பிரிவுக்கு ஆயத்தமானார்கள் "சேரி நா வரேன் முத்து.. அடுத்த லீவுக்கு பாக்காலாம்...."
அவள் முகமும் லேசாய் வடித்தான் போய்விட்டது....
"டேய் வரியா இல்லையா...."
இதற்குமேல் இருக்க முடியாதவனாய் "வரேன்.." என்று சொல்லிவிட்டு வெளியே ஓடினான்....

"வரேன் சித்தப்பா....."
"உன்ன என்ன சொன்னேன்.. வேன்ல தானே இருக்க சொன்னேன்.... எங்கெல்லாம் தேட்றது... இங்க தேர்தல் வேல பக்க வந்தோமா இல்ல உன்ன பாக்க வந்தோமா...வந்து தொலை..." கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்.

"கணேசு....புள்ளைக்கு தான் கோழி குழம்பு பண்ணிருக்கேன்.. சாப்டுட்டு போட்டும் விடேன்..." என்றாள் முத்துவின் தாய்.

"ஆமா சித்தப்பா நா சாப்ட்டுட்டு இங்க இருக்கேன் .. போமோது கூட்டி போயேன்..." அவன் சாப்பாடிர்காக சொல்லவில்லை...

"இப்போ முடியாது வாணி...." என்றவர் சுந்தரை பார்த்து "ஆயிரத்தெட்டு வேல கெடக்கு..இதுல உங்கள வேற வந்து பிக்கு அப்பு பண்ணணுமாக்கும்... இப்பயே அப்பன மாறி சோறு சோறுன்னுட்டு.... " இழுதுக்குகொண்டு சென்றார்.

சுந்தர் வீட்டை திரும்பி பார்த்தான்... முத்து கதவில்சாய்ந்து கொண்டு இவனை பார்த்துக்கொண்டிருந்தாள்... இவன் பார்த்ததும் உள்ளே ஓடிவிட்டாள்.... இவனுக்கு கண் கலங்கியது.

சித்தப்பாவின் கையை உதறிவிட்டு.... தலையை தொங்க போட்டுக்கொண்டு நடந்தான். கடவுள் வாழ்கையில் பிரிவை ஏற்று கொள்ளவேண்டும் என்ற பாடத்தை அன்று அவனுக்கு வழங்கினார்.

கொலுசு சத்தம் கேட்டது... அவள்தான்.... இந்தா என்று கையில் திணித்தாள் சின்ன பேப்பர் டப்பா ...அதனுள் பொன்வண்டு....

"என்ன முத்து... கேடக்கவே கேடக்காதுன்ன.. எங்கிட்ட கொடுக்குற....."

"நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி சுந்தர் அதான்.... உனக்கு தான் இது வச்சுக்கோ...."
 எதிர் பார்க்காமல் ஓடி போய் மீண்டும் கதவை பற்றிகொண்டாள்.

"முட்ட போட போது.. பாத்து...." கத்தினாள்.

அவள் மறையும் வரை அவளுக்கு டாட்டா காட்டி கொண்டே வந்தான்.... மறந்த பிறகும் சிறிது நேரம் கையை அசைத்து கொண்டிருந்தான்.

டப்பா வைத்திருந்த கையில் சொரசொர வென்று உணர்ந்தான்..... கால்களை அவன் விரல்களில் வைத்துக்கொண்டு பொன்வண்டு வெளியே எட்டி பார்த்துகொண்டிருந்தது.....!!!

"ஆ...." கத்திக்கொண்டே எழுந்து நின்றான்....
"டேய் என்ன டா.....ஏன் கத்துனா.."  அவன் கையில் இருந்த டப்பாவை பிடுங்கினார்...
"இல்ல சித்தப்பா வண்டு...அதை காமித்தான்...."
முகத்தை சுளித்தார்....... அது அவர் கையிலும் கால் பதிக்க
"ஆ...!"
வீசிவிட்டார்...!!

சுந்தர் பதறிவிட்டான்.... டப்பா நசுங்கிவிட்டது.... நல்லவேளை பொன்வண்டிற்கு  ஒன்றும் ஆகவில்லை..... கயிற்றின் ஒரு நுனியை பிடித்துக்கொண்டு தள்ளி அமர்ந்து அதை பார்த்துக்கொண்டிருந்தான்.... அது அமைதியாய் எதை நோக்கியோ நகர்ந்து கொண்டிருந்தது...!!!

ரெண்டு தெரு தள்ளி வண்டியை நிப்பாட்டினார்.... அங்கு இருந்த பெட்டி கடை..ஒன்றில்  கோழி பிரியாணி ரெடி என்று chalkபீஸ்சால் எழுதப்படிருந்தது.... அங்கு ஒரு பொட்டலத்தை வாங்கி அவனுக்கு தந்தார்...
"இந்தா  இத சாப்ட்டுட்டு இங்கயே இரு.. வந்தறேன்...."
"இதே ஊர்ல தானே இருக்க.. அப்புறம் ஏன் என்ன .கூடி வந்த... நா அங்கேயே இருந்துருப்பென்ல..."
"ந்தா... ஒவ்வோருதடவையும் ஒன்ன தேடி வந்துகிட்டு இருக்க முடியாது... ஒழுங்கா வேன்லயே உட்காதிருக்கணும் புரியுதா..."
அதட்டிவிட்டு சென்றுவிட்டார்.

பிரியாணி சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே வேலையே காமிக்க தொடங்கியது..!! வேனுக்குள் அதற்குமேல் அவனால் உட்கார முடியவில்லை.... பொன்வண்டை கயிற்றின் நுனியில் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கவிட்டவாறே இறங்கி ஓட துவங்கினான்.

பொன்வண்டு titanic heroine போல் கைகளையும் கால்களையும் நீட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருந்தது.வசதியாக ஒரு இடம் தென்ப்பட்டது.... ஆனால் இந்த வண்டு... இதை என்ன செய்வது... இதை ஒருகையில் வைத்துக்கொண்டு... எப்படி..?! சத்தியாமாய் அவனால் இதற்க்கு மேல் முடியவில்லை.... பிரியாணி வாங்கி கொடுத்த சித்தப்பாவை திட்டிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தான்....

அப்போது அருகே ஒரு மளிகை கடை வந்தது.... அதில் போய் "அண்ணே...எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண்றீங்களா...."
"என்ன தம்பி சொல்லு..."
"இல்ல எனக்கு ஒரு  முக்கியமான வேல.... கண்டிப்பா போகணும்.... நா வர வரைக்கும் இந்த பொன்வண்டை கொஞ்சம் பாத்துகுரீங்களா...."
அவர் அதை பார்த்தார்.... ஏதும் சொல்லவில்லை "சேரி கொடு..."
மறுநொடி ஓட துவங்கினான்.... மீண்டும் ஓடிவந்து.."அண்ணே ஒரு முக்கியமான விஷயம்... வண்டு முட்ட போட போகுது.... போட்டுச்சுனா எடுத்து வைங்க...." பரம ரகசியத்தை எளிதில் உடைத்துவிட்டு ஓடினான்.
இதற்க்கு முடியாது தெரு ஓரத்திலேயே ஆரம்பித்துவிட்டன... கடைகாரர் தூரத்தில் இருந்து பார்த்து சிரிப்பது தெரிந்தது, அவன் கண்டுகொள்ளவில்லை.

மீண்டும் பழைய சுந்தராய் கடைக்கு வந்தான்..."அண்ணே..அண்ணே.."
கடைக்கு பின்னால் தான் அவர் வீடு வீட்டிற்க்குள் இருந்து வந்தார்...
"வாப்பா... போன வேல முடிஞ்சுச்சா...."
"ஹ..ஹ...முடிஞ்சுச்சு..வண்ட குடுங்க...."
"நில்லுப்பா..ஒ வண்டு முட்ட போட்டுச்சு....முதல்ல அத வாங்கிக்கோ"
"ஐ.. எங்க கொடுங்க கொடுங்க..."
ஒரு பொட்டு கடலையை எடுத்து கொடுத்தார்....
அதை வாங்கி பார்த்தவன்.... "அண்ணே இது பொட்டு கடலைன்னே.. யார ஏமாத்த பாக்குறீங்க....முட்டைய ஒழுங்கா கொடுத்துடுங்க..."
"அட என்னப்பா பொன்வண்டு முட்டய நான் என்ன பொரிக்கவா போறேன்.... இது சத்தியமா பொன்வண்டு முட்ட தான்.. நீ வேணா இவர்ட்ட கேளேன்..."
அங்கு உட்காத்திருந்த இன்னொரு தாத்தா நக்கலாய் சிரித்துக்கொண்டே "இங்க பக்கதுல வா..காமி....." என்று உற்று பார்த்தவர்  "ஆமா..ஆமா இது பொன்வண்டு முட்ட தான்" என்றார்.
 "எல்லோரும் என்ன சின்ன பையன்னு ஏமாத்த பாக்குறிங்களா... அண்ணே என் பொன் வண்டு எங்க...."
"முட்ட போடேல செத்துபோச்சு தூக்கி போட்டுட்டேன்...." சாவகாசமாய் சொல்லி வந்த கஸ்டமருக்கு சக்கரை பொட்டலம் கட்டி கொண்டிருந்தார்.

தலையில் இடி இறங்கியது போல் இருந்தது அவனுக்கு..... கண்ணீர் சாரை சாரையாய் ஊற்றியது..... "அண்ணே கொடுங்கன்னே ப்ளீஸ்னே...."
"யே இது என்ன யா தொல்லையா போச்சு.... இப்போ இந்த முட்டய எடுத்துட்டு போறியா..இல்ல தூக்கி போடட்டுமா...." என்று தூக்கி போடா போனார்.
விரைந்து தடுக்க போனான்.... அதை கையில் கொடுக்க போய் மீண்டும் எடுத்துக்கொண்டார்.... "இது என்ன பொன்வண்டு முட்டையா இல்ல பொட்டுகடலயா.."
"முட்ட தான் கொடுங்க...."
"சத்தம்மாமுழுசா  சொல்லு"
" பொன் வண்டு முட்டதான்...கொடுங்க..."
"ஹ்ம்ம் அது....." சுற்றி இருந்த அனைவரும் நக்கலாய் சிரிக்க அதை வாங்கி உள்ளங்கையில் வைத்து கொண்டு பார்த்தான்.

அப்பொழுது ஒரு சிறுவன் அழுது கொண்டே ஓடிவந்தான்...அந்த கடைகாரரிடம் சென்று "அப்பா..அப்பா வாசு வண்ட நசுக்கி கொன்னுட்டான்ப்பா....." அப்பொழுது அதைவிட சிறியவன் ஒருவன் டிரௌசரை பிடித்துக்கொண்டு ஓடி வந்தான்.."அப்பா அப்பா அண்ணன் தான்ப்பா கொன்னுட்டான்...முன்னால ஓடிவந்து பொய் சொல்ல்றான்ப்பா...."

இருவருக்கும் அடிவிழுந்தது.... சுந்தர் கைகளை இருக்க மூடிக்கொண்டு வந்த வழியே நடக்க தொடங்கினான்..... அந்த கடைகாரனை சும்மா விடக்கூடாது.... எப்படி ஏமாத்திட்டான்....யாருக்குமே கெடைக்காத பரிசு.. தனக்கு கிடைத்தும் விட்டதை நினைத்து வருந்தினான்.

"முட்டை வச்சு நம்ம எதனாச்சும் வேண்டுனா அது நடக்கும் தெரியுமா....."
முத்து சொன்னது ஞாபகம் வந்தது.... அவளை பார்த்தாள் நல்லாருக்கும் என்று தோணியது..... கண்களை துடைத்துக்கொண்டே..... வேன் பக்கத்தில் நெருங்கினான்.... அங்கே முத்து நின்றுகொண்டிருந்தாள்...... அவளை பார்த்தவுடன் சுந்தருக்கு அழுகை தாளவில்லை... அழுது கொண்டே "அங்க...அங்க பொட்டி கடைல... வண்ட..அந்த பசங்க...."
"தெரியும் சுந்தர்.... அவங்க அத எடுத்துட்டு என் கிட்ட தான் வந்தாங்க.... வம்பிழுக்க...."
"மன்னிச்சுடு முத்து....யாருக்குமே கெடக்காதுன்னு சொல்லி கொடுத்த இப்படி விட்டுட்டேனே .. நா ஒன்னும் அதிர்ஷ்டசாலி இல்ல முத்து "
"ஐயோ லூசு சுந்தர்....நீ அதிர்ஷ்டசாலி தான்.... டோட்ட டொய்ங் .. இந்தா..." geometry பாக்சை எடுத்து திறந்தாள் உள்ளே இரண்டு பொன்வண்டு....
"ஒன்னு உனக்கு..ஒன்னு எனக்கு....அப்பா எடுத்து வந்துச்சு...!!!"
"நானும் ஒன்னு வச்சுருக்கேன் இந்தா.. கையை பிரித்து காமித்தான்... டோட்ட டொய்ங் .. இந்தா...பொன்வண்டு முட்ட"
"ஐயோ லூசு இது பொட்டு கடலை...." கலகலவென சிரித்தாள்.
"நீ சொன்ன மாறி நா அதிர்ஷ்டசாலி தான் முத்து.. பொட்டுகடலைய வச்சு வேண்டுனதே நடந்துடுச்சே...!!!!"

No comments: