ஒரு மாத தெரபிக்கு பிறகு... ஒரு அளவிற்கு நோயை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டேன். ரட்சகன்ல நாகார்ஜுனா நரம்பெல்லாம் பொடைக்க கையை முறுக்கி கோபத்தை அடக்குவாறே..... அது மாதிரி தான் இனி அடக்கி கொண்டே வாழ வேண்டும். எங்கு போறதா இருந்தாலும் ட்ரைன் தான்.... அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை பாத்ரூமிற்கு ஓடி.... சத்தமாக கத்தி..... கை கால்களை உதறி..... எல்லாம் செய்துவிட வேண்டும் இல்லை என்றால் அவஸ்த்தை.
கோவில் கோவிலாக சென்று அழுதுவிட்டு எனக்காக வேண்டும் அம்மா..... "டேய் அமெரிக்கா சிக்காகோல எதோ ஒரு டாக்டர்.... நம்ம இந்தியன் தான்.... research பண்றாராம்..... ட்ரை பண்ணுவோமா....." என்று கேட்கும் அப்பா.... இவர்களுக்கு நான் பிள்ளை இல்லையாம்...... இந்த நோய் வந்ததை விட பெரிய அதிர்ச்சி நான் தத்து பிள்ளை என்று அறிந்தது தான்.
"எதுக்காக இந்த நோயை எனக்கு கொடுத்த...?" என்று கடவுளை நான் கேட்கவில்லை... கேட்டால் கூடவே எதுக்காக பக்கத்துக்கு தொட்டிலில் இருந்த சூர்யாவை விட்டுவிட்டு என்னை என் அப்பா எடுத்தார் என்றும் கேட்கவேண்டும். இப்போதும் ஒன்றும் குறைவில்லை.... வேலை இருக்கிறது..... மேனேஜர் கூட இப்போது மிகவும் பரிவு காட்டுகிறார்....
"டோன்ட் டேக் மச் ஸ்ட்ரெஸ் வினோ... வீட்டுக்கு கெளம்புங்க.... " என்கிறார்
இந்நோயினால் நான் சீக்கீரம் சாகவும் போறதில்லை.... இந்த நோய் சில நாள்களில் தேய்ந்தும் போகலாம் வளரவும் செய்யலாம். கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டுதான் இருந்தது மீண்டும் நான் அம்முவை பார்க்கும் வரை.
எல்லாம் இந்த தேவ் பயலால..... அன்னைக்கு வழக்கம் போல சங்கீதா போனேன் காபி குடிக்க... அங்க தேவுடன் அம்முவும் இருந்தாள்.... நான் வருவதை பார்த்ததும் தேவ் எழுந்து... நல்லா பேசு மச்சா... ஆல் தி பெஸ்ட் என்று கை குலுக்கி தம் அடிக்க சென்று விட்டான். அம்மு உம்ம்ம் என்று அமர்ந்திருந்தாள்.... எனக்கு கைககள் உதறி மீண்டும் நெஞ்சை தட்ட ஆரம்பித்து விட்டேன்.
"நீங்க எங்க இங்க.....??"
"எல்லா உங்க பிரிண்டு தான் torture பண்றார்....!!!"
வாயிலிருந்து கெட்டவார்த்தை உதயமாக.... வாயை மூடி... தண்ணி டம்ளரை எடுத்து விழுங்கினேன்....
"ஹலோ.... என்ன பண்றீங்க....." எனக் கேட்டாள்
கைகளால் நெஞ்சை தட்டிக்கொண்டே..."ஒரு நிமிஷம்...." என்று எழுந்து ஓடினேன்.
எதிர்த்தாபில் வந்தவனிடம் ..."டேய் xxxx..... பாத்ரூம் எங்கடா....?"
அவன் பதில் சொல்லாமல் கத்த.... நானாக கண்டுபிடித்து.... உள்ளே ஓடி... கண்ணாடி முன்னாடி கைகளால் நெஞ்சை பலமாக தட்டிக்கொண்டே "xxxx xxxx xxxx ..." என்று கத்தினேன்
சில நொடிகள் அமைதி....உள்ளே இருந்து பாண்டை மாட்டிக்கொண்டு வந்தவர் என்னை ஒருமாதிரி பார்த்துக்கொண்டே கைகழுவாமல் சென்றார். நானும் முகத்தை கழுவிவிட்டு.... வெளியே சென்றேன். அம்முகிட்ட அன்னிக்கி அப்படி பேசுனதுக்கு சாரி கேக்கணும் என்று நினைத்துக்கொண்டேன்.
"சாரி அம்மு" என்றேன்
"xxxx " ஈட்டியால் குத்தியது போல் இருந்தது
"உனக்கு மட்டும் தான் கெட்டவார்த்த தெரியுமா..... அன்னிக்கே உன்ன இவ் டீசிங்க்ல உள்ள போட்டு இருக்கணும்.... அங்கிள்காக தான் அப்பா விட சொன்னாரு...." அடிபட்ட கண்களுடன் அவளை பார்த்தேன்
" இனிமே உன் friend வந்து உன் கிட்ட பேச சொல்லி torture பண்ணான்னு வச்சுக்க ரெண்டு பேரையும் தூக்கி உள்ள போட்டுருவேன்..... உனக்கு வியாதின்ன நீயே வச்சுக்க எதுக்கு என் தலையில கொண்டுவந்து கொட்டுறீங்க.... நா என்ன அன்னை தெரசாவா.... stupids....." எழுந்து போய் விட்டாள். நான் ஒன்றும் பேசவில்லை... காபி ஒன்று ஆர்டர் செய்து குடித்துக்கொண்டு இருந்தேன்.
தேவ் வந்து நடந்ததை அறிந்து குதித்து கொண்டிருந்தான்....
"மூடிட்டு உட்காரு..... " என்றேன்
"இதுவே பொண்ணு பாக்குறப்ப தெரிஞ்சுருக்காம... கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுருந்தா என்ன பண்ணிருப்பா....ஹவ் டேர்..உன்ன அப்படி திட்டறதுக்கு....??"
"விட்றா..... அவ சொன்னது நியாயம் தா.. கெட்டவார்த்த தான் காயத்ரி மந்தரம் மாறி நாளைக்கு 1008 சொல்றேனே..... மத்தவங்க சொல்லி ஒரு தடவ கேட்டா என்ன தப்பு....எதுக்கு நம் வியாதியை மத்தவங்க தலையில் கொட்டனும்.... இதை என் genetic parents நெனச்சு இருதாங்கன்னா எனக்கு இப்போ பிரச்சனை இருந்துருக்காது. நா கல்யாணம் பன்னா இது என் பிள்ளைக்கு வரும்.... அப்புறம் அது பிள்ளைக்கு வரும்.... யாராவது ஒரு ஆள் இந்த சங்கலிய ஒடச்சு தானே ஆகணும்....??"
"என்ன சொல்ல வர...?"
"நா கல்யாணமே பண்ணிக்க போறதில்ல....." என்று என் முடிவை சொன்னேன்
இதை சொன்ன தேதியில் இருந்து சரியாக இரண்டு வருடம் கழித்து ரூபாவை மனந்துக்கொண்டேன் . எனக்கு அவள் வாழ்வளித்தாள் அவளுக்கு நான் வாழ்வளித்தேன். இருவரும் சேர்ந்து 14மாத ஆனதை பெண் குழைந்தைக்கு வாழ்வளித்தோம். அரைகுறையாய் இருந்த ஒருவர் வாழ்கையை ஒருவர் முழுமை ஆக்கி கொண்டோம்., like a symbiotic relationship. வாழ்கையில் எதுவுமே நிரந்தர சாபமும் இல்லை நிரந்தர வரமும் இல்லை.
கிட்டத்தட்ட பத்து வருட உழைப்பிற்கு பின் என் மேனேஜர் எனக்கு மிக பெரிய பரிசு ஒன்று அளித்தார்.... வேறு கம்பெனி போக சொல்லி.... வந்தது கோபம் எனக்கு.... கைகளை ஆட்டி நெஞ்சை தட்டி.... முன்னால் இருந்த லேப்டாப்பை தூக்கி எறிந்தேன்...
"மிஸ்டர் வினோ.. கண்ட்ரோல் யூவர்செல்ப்..... உங்களுக்கு torrent இருக்குல.... ரிலாக்ஸ் தண்ணி குடிங்க....."
"tourette டா .....xxxxx xxxxx xxxxx......" என்று மனசார திட்டிவிட்டு வெளியே சிரித்துக்கொண்டே வந்தேன். சொன்னேன்ல வரமோ... சாபமோ... எல்லாம்
situation-அ பொறுத்துதான்.
கோவில் கோவிலாக சென்று அழுதுவிட்டு எனக்காக வேண்டும் அம்மா..... "டேய் அமெரிக்கா சிக்காகோல எதோ ஒரு டாக்டர்.... நம்ம இந்தியன் தான்.... research பண்றாராம்..... ட்ரை பண்ணுவோமா....." என்று கேட்கும் அப்பா.... இவர்களுக்கு நான் பிள்ளை இல்லையாம்...... இந்த நோய் வந்ததை விட பெரிய அதிர்ச்சி நான் தத்து பிள்ளை என்று அறிந்தது தான்.
"எதுக்காக இந்த நோயை எனக்கு கொடுத்த...?" என்று கடவுளை நான் கேட்கவில்லை... கேட்டால் கூடவே எதுக்காக பக்கத்துக்கு தொட்டிலில் இருந்த சூர்யாவை விட்டுவிட்டு என்னை என் அப்பா எடுத்தார் என்றும் கேட்கவேண்டும். இப்போதும் ஒன்றும் குறைவில்லை.... வேலை இருக்கிறது..... மேனேஜர் கூட இப்போது மிகவும் பரிவு காட்டுகிறார்....
"டோன்ட் டேக் மச் ஸ்ட்ரெஸ் வினோ... வீட்டுக்கு கெளம்புங்க.... " என்கிறார்
இந்நோயினால் நான் சீக்கீரம் சாகவும் போறதில்லை.... இந்த நோய் சில நாள்களில் தேய்ந்தும் போகலாம் வளரவும் செய்யலாம். கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டுதான் இருந்தது மீண்டும் நான் அம்முவை பார்க்கும் வரை.
எல்லாம் இந்த தேவ் பயலால..... அன்னைக்கு வழக்கம் போல சங்கீதா போனேன் காபி குடிக்க... அங்க தேவுடன் அம்முவும் இருந்தாள்.... நான் வருவதை பார்த்ததும் தேவ் எழுந்து... நல்லா பேசு மச்சா... ஆல் தி பெஸ்ட் என்று கை குலுக்கி தம் அடிக்க சென்று விட்டான். அம்மு உம்ம்ம் என்று அமர்ந்திருந்தாள்.... எனக்கு கைககள் உதறி மீண்டும் நெஞ்சை தட்ட ஆரம்பித்து விட்டேன்.
"நீங்க எங்க இங்க.....??"
"எல்லா உங்க பிரிண்டு தான் torture பண்றார்....!!!"
வாயிலிருந்து கெட்டவார்த்தை உதயமாக.... வாயை மூடி... தண்ணி டம்ளரை எடுத்து விழுங்கினேன்....
"ஹலோ.... என்ன பண்றீங்க....." எனக் கேட்டாள்
கைகளால் நெஞ்சை தட்டிக்கொண்டே..."ஒரு நிமிஷம்...." என்று எழுந்து ஓடினேன்.
எதிர்த்தாபில் வந்தவனிடம் ..."டேய் xxxx..... பாத்ரூம் எங்கடா....?"
அவன் பதில் சொல்லாமல் கத்த.... நானாக கண்டுபிடித்து.... உள்ளே ஓடி... கண்ணாடி முன்னாடி கைகளால் நெஞ்சை பலமாக தட்டிக்கொண்டே "xxxx xxxx xxxx ..." என்று கத்தினேன்
சில நொடிகள் அமைதி....உள்ளே இருந்து பாண்டை மாட்டிக்கொண்டு வந்தவர் என்னை ஒருமாதிரி பார்த்துக்கொண்டே கைகழுவாமல் சென்றார். நானும் முகத்தை கழுவிவிட்டு.... வெளியே சென்றேன். அம்முகிட்ட அன்னிக்கி அப்படி பேசுனதுக்கு சாரி கேக்கணும் என்று நினைத்துக்கொண்டேன்.
"சாரி அம்மு" என்றேன்
"xxxx " ஈட்டியால் குத்தியது போல் இருந்தது
"உனக்கு மட்டும் தான் கெட்டவார்த்த தெரியுமா..... அன்னிக்கே உன்ன இவ் டீசிங்க்ல உள்ள போட்டு இருக்கணும்.... அங்கிள்காக தான் அப்பா விட சொன்னாரு...." அடிபட்ட கண்களுடன் அவளை பார்த்தேன்
" இனிமே உன் friend வந்து உன் கிட்ட பேச சொல்லி torture பண்ணான்னு வச்சுக்க ரெண்டு பேரையும் தூக்கி உள்ள போட்டுருவேன்..... உனக்கு வியாதின்ன நீயே வச்சுக்க எதுக்கு என் தலையில கொண்டுவந்து கொட்டுறீங்க.... நா என்ன அன்னை தெரசாவா.... stupids....." எழுந்து போய் விட்டாள். நான் ஒன்றும் பேசவில்லை... காபி ஒன்று ஆர்டர் செய்து குடித்துக்கொண்டு இருந்தேன்.
தேவ் வந்து நடந்ததை அறிந்து குதித்து கொண்டிருந்தான்....
"மூடிட்டு உட்காரு..... " என்றேன்
"இதுவே பொண்ணு பாக்குறப்ப தெரிஞ்சுருக்காம... கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுருந்தா என்ன பண்ணிருப்பா....ஹவ் டேர்..உன்ன அப்படி திட்டறதுக்கு....??"
"விட்றா..... அவ சொன்னது நியாயம் தா.. கெட்டவார்த்த தான் காயத்ரி மந்தரம் மாறி நாளைக்கு 1008 சொல்றேனே..... மத்தவங்க சொல்லி ஒரு தடவ கேட்டா என்ன தப்பு....எதுக்கு நம் வியாதியை மத்தவங்க தலையில் கொட்டனும்.... இதை என் genetic parents நெனச்சு இருதாங்கன்னா எனக்கு இப்போ பிரச்சனை இருந்துருக்காது. நா கல்யாணம் பன்னா இது என் பிள்ளைக்கு வரும்.... அப்புறம் அது பிள்ளைக்கு வரும்.... யாராவது ஒரு ஆள் இந்த சங்கலிய ஒடச்சு தானே ஆகணும்....??"
"என்ன சொல்ல வர...?"
"நா கல்யாணமே பண்ணிக்க போறதில்ல....." என்று என் முடிவை சொன்னேன்
இதை சொன்ன தேதியில் இருந்து சரியாக இரண்டு வருடம் கழித்து ரூபாவை மனந்துக்கொண்டேன் . எனக்கு அவள் வாழ்வளித்தாள் அவளுக்கு நான் வாழ்வளித்தேன். இருவரும் சேர்ந்து 14மாத ஆனதை பெண் குழைந்தைக்கு வாழ்வளித்தோம். அரைகுறையாய் இருந்த ஒருவர் வாழ்கையை ஒருவர் முழுமை ஆக்கி கொண்டோம்., like a symbiotic relationship. வாழ்கையில் எதுவுமே நிரந்தர சாபமும் இல்லை நிரந்தர வரமும் இல்லை.
கிட்டத்தட்ட பத்து வருட உழைப்பிற்கு பின் என் மேனேஜர் எனக்கு மிக பெரிய பரிசு ஒன்று அளித்தார்.... வேறு கம்பெனி போக சொல்லி.... வந்தது கோபம் எனக்கு.... கைகளை ஆட்டி நெஞ்சை தட்டி.... முன்னால் இருந்த லேப்டாப்பை தூக்கி எறிந்தேன்...
"மிஸ்டர் வினோ.. கண்ட்ரோல் யூவர்செல்ப்..... உங்களுக்கு torrent இருக்குல.... ரிலாக்ஸ் தண்ணி குடிங்க....."
"tourette டா .....xxxxx xxxxx xxxxx......" என்று மனசார திட்டிவிட்டு வெளியே சிரித்துக்கொண்டே வந்தேன். சொன்னேன்ல வரமோ... சாபமோ... எல்லாம்
situation-அ பொறுத்துதான்.