சிறுகதை

Thursday, January 15, 2015

தொரட் 2

ஒரு மாத தெரபிக்கு பிறகு... ஒரு அளவிற்கு நோயை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டேன். ரட்சகன்ல நாகார்ஜுனா நரம்பெல்லாம் பொடைக்க கையை முறுக்கி கோபத்தை அடக்குவாறே..... அது மாதிரி தான் இனி அடக்கி கொண்டே வாழ வேண்டும். எங்கு போறதா இருந்தாலும் ட்ரைன் தான்.... அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை பாத்ரூமிற்கு ஓடி.... சத்தமாக கத்தி.....  கை கால்களை உதறி..... எல்லாம் செய்துவிட வேண்டும் இல்லை என்றால் அவஸ்த்தை.

கோவில் கோவிலாக சென்று அழுதுவிட்டு எனக்காக வேண்டும் அம்மா..... "டேய் அமெரிக்கா சிக்காகோல எதோ ஒரு டாக்டர்.... நம்ம இந்தியன் தான்.... research பண்றாராம்..... ட்ரை பண்ணுவோமா....." என்று கேட்கும் அப்பா.... இவர்களுக்கு நான் பிள்ளை இல்லையாம்...... இந்த நோய் வந்ததை விட பெரிய அதிர்ச்சி நான் தத்து பிள்ளை என்று அறிந்தது தான்.

"எதுக்காக இந்த நோயை எனக்கு கொடுத்த...?" என்று கடவுளை நான் கேட்கவில்லை... கேட்டால் கூடவே எதுக்காக பக்கத்துக்கு தொட்டிலில் இருந்த சூர்யாவை விட்டுவிட்டு என்னை என் அப்பா எடுத்தார் என்றும் கேட்கவேண்டும். இப்போதும் ஒன்றும் குறைவில்லை.... வேலை இருக்கிறது..... மேனேஜர் கூட இப்போது மிகவும் பரிவு காட்டுகிறார்....
"டோன்ட் டேக் மச் ஸ்ட்ரெஸ் வினோ... வீட்டுக்கு கெளம்புங்க.... " என்கிறார்
இந்நோயினால் நான் சீக்கீரம் சாகவும் போறதில்லை.... இந்த நோய் சில நாள்களில் தேய்ந்தும் போகலாம் வளரவும் செய்யலாம். கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டுதான் இருந்தது மீண்டும் நான் அம்முவை பார்க்கும் வரை.

எல்லாம் இந்த தேவ் பயலால..... அன்னைக்கு வழக்கம் போல சங்கீதா போனேன் காபி குடிக்க... அங்க தேவுடன் அம்முவும் இருந்தாள்.... நான் வருவதை பார்த்ததும் தேவ் எழுந்து... நல்லா பேசு மச்சா... ஆல் தி பெஸ்ட் என்று கை குலுக்கி தம் அடிக்க சென்று விட்டான். அம்மு உம்ம்ம் என்று அமர்ந்திருந்தாள்.... எனக்கு கைககள் உதறி மீண்டும் நெஞ்சை தட்ட ஆரம்பித்து விட்டேன்.
"நீங்க எங்க இங்க.....??"
"எல்லா உங்க பிரிண்டு தான் torture பண்றார்....!!!"
வாயிலிருந்து கெட்டவார்த்தை உதயமாக.... வாயை மூடி... தண்ணி டம்ளரை எடுத்து விழுங்கினேன்....
"ஹலோ.... என்ன பண்றீங்க....." எனக் கேட்டாள்
கைகளால் நெஞ்சை தட்டிக்கொண்டே..."ஒரு நிமிஷம்...." என்று எழுந்து ஓடினேன்.
எதிர்த்தாபில் வந்தவனிடம் ..."டேய் xxxx..... பாத்ரூம் எங்கடா....?"
அவன் பதில் சொல்லாமல் கத்த.... நானாக கண்டுபிடித்து.... உள்ளே ஓடி... கண்ணாடி முன்னாடி கைகளால் நெஞ்சை பலமாக தட்டிக்கொண்டே "xxxx xxxx xxxx ..." என்று கத்தினேன்
சில நொடிகள் அமைதி....உள்ளே இருந்து பாண்டை மாட்டிக்கொண்டு வந்தவர் என்னை ஒருமாதிரி பார்த்துக்கொண்டே கைகழுவாமல் சென்றார். நானும் முகத்தை கழுவிவிட்டு.... வெளியே சென்றேன். அம்முகிட்ட அன்னிக்கி அப்படி பேசுனதுக்கு சாரி கேக்கணும் என்று நினைத்துக்கொண்டேன்.
 "சாரி அம்மு" என்றேன்
"xxxx " ஈட்டியால் குத்தியது போல் இருந்தது
"உனக்கு மட்டும் தான் கெட்டவார்த்த தெரியுமா..... அன்னிக்கே உன்ன இவ் டீசிங்க்ல உள்ள போட்டு இருக்கணும்.... அங்கிள்காக தான் அப்பா விட சொன்னாரு...." அடிபட்ட கண்களுடன் அவளை பார்த்தேன்
" இனிமே உன் friend வந்து உன் கிட்ட பேச சொல்லி torture பண்ணான்னு வச்சுக்க ரெண்டு பேரையும் தூக்கி உள்ள போட்டுருவேன்..... உனக்கு வியாதின்ன நீயே வச்சுக்க எதுக்கு என் தலையில கொண்டுவந்து கொட்டுறீங்க.... நா என்ன அன்னை தெரசாவா.... stupids....." எழுந்து போய் விட்டாள். நான் ஒன்றும் பேசவில்லை... காபி ஒன்று ஆர்டர் செய்து குடித்துக்கொண்டு இருந்தேன்.
தேவ் வந்து நடந்ததை அறிந்து குதித்து கொண்டிருந்தான்....
"மூடிட்டு உட்காரு..... " என்றேன்
"இதுவே பொண்ணு பாக்குறப்ப  தெரிஞ்சுருக்காம... கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுருந்தா என்ன பண்ணிருப்பா....ஹவ் டேர்..உன்ன அப்படி திட்டறதுக்கு....??"
"விட்றா..... அவ சொன்னது நியாயம் தா.. கெட்டவார்த்த தான் காயத்ரி மந்தரம் மாறி நாளைக்கு 1008 சொல்றேனே..... மத்தவங்க சொல்லி ஒரு தடவ கேட்டா என்ன தப்பு....எதுக்கு நம் வியாதியை மத்தவங்க தலையில் கொட்டனும்.... இதை என் genetic parents நெனச்சு இருதாங்கன்னா எனக்கு இப்போ பிரச்சனை  இருந்துருக்காது. நா கல்யாணம் பன்னா இது என் பிள்ளைக்கு வரும்.... அப்புறம் அது பிள்ளைக்கு வரும்.... யாராவது ஒரு ஆள் இந்த சங்கலிய ஒடச்சு தானே ஆகணும்....??"

"என்ன சொல்ல வர...?"

"நா கல்யாணமே பண்ணிக்க போறதில்ல....."  என்று என் முடிவை சொன்னேன்

இதை சொன்ன தேதியில் இருந்து சரியாக இரண்டு வருடம் கழித்து ரூபாவை மனந்துக்கொண்டேன் . எனக்கு அவள் வாழ்வளித்தாள் அவளுக்கு நான் வாழ்வளித்தேன். இருவரும் சேர்ந்து 14மாத ஆனதை பெண் குழைந்தைக்கு வாழ்வளித்தோம். அரைகுறையாய் இருந்த ஒருவர் வாழ்கையை ஒருவர் முழுமை ஆக்கி கொண்டோம்., like a symbiotic relationship. வாழ்கையில் எதுவுமே நிரந்தர சாபமும் இல்லை நிரந்தர வரமும் இல்லை.

கிட்டத்தட்ட பத்து வருட உழைப்பிற்கு பின் என் மேனேஜர் எனக்கு மிக பெரிய பரிசு ஒன்று அளித்தார்.... வேறு கம்பெனி போக சொல்லி.... வந்தது கோபம் எனக்கு.... கைகளை ஆட்டி நெஞ்சை தட்டி.... முன்னால் இருந்த லேப்டாப்பை தூக்கி எறிந்தேன்...
"மிஸ்டர் வினோ.. கண்ட்ரோல் யூவர்செல்ப்..... உங்களுக்கு torrent இருக்குல.... ரிலாக்ஸ் தண்ணி குடிங்க....."
"tourette டா .....xxxxx xxxxx xxxxx......" என்று மனசார திட்டிவிட்டு வெளியே சிரித்துக்கொண்டே வந்தேன். சொன்னேன்ல வரமோ... சாபமோ... எல்லாம்
situation-அ பொறுத்துதான்.

Tuesday, January 13, 2015

தொரட்

பச்சை கலர் பட்டுப்புடவை.... தலை நிறையா மல்லிகைப்பூ.... கையில காபி இது போன்ற பெண் பார்க்கும் படலத்திற்கு தொடர்பான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.... எனக்கு எதிர் சோபாவில் கையில் செல் போனுடன் மங்கலான சுடிதாரில் அமர்ந்திருந்தாள் என் எதிர்கால மனைவி.
"அம்மு MBA முடுச்சுருக்கா... பெங்களுருலையே வேலை தேடிகிட்டு இருக்கோம்.... கேடச்சுடுச்சுன்னா ரெண்டு பேருமே வேலைப்பாக்கலாம்" ஆமோதிப்பது போல் தலை அசைத்து சிரித்தேன்.
பெரிய கண்கள்.... கலையான முகம்.... அழகாக இருந்ததாள்... மெல்லிசாக சிரித்தாள்.
"ஏன் அமைதியா இருக்கீங்க.. ஏதாவது பேசுங்க...."
"கேன.... XXX...xxxx ...xxxxxx....!!!!"
தொடர்ந்து நாலு வார்த்தை..... என் நண்பர்களிடம் கூட பேசிராத கெட்ட வார்த்தை முத்துக்கள் போல வந்து விழுந்தன. அம்முவின் பெரிய கண்கள் நிறைந்து வழிந்தது. எழுந்து உள்ளே ஓடிவிட்டாள்.
"பொண்ணு பாக்குறேன்னு கண்ட கண்டவனை உள்ளே விட்டு.... என்ன பேச்சு பேசுறான்.... வெளில போடா ராஸ்கல்..." பள்ளியில் வேலை பார்க்கும் அம்முவின் அம்மா கொண்டுவந்த காப்பியை மூஞ்சியில் உற்றி என்னை துரத்திவிட்டாள்.

அதற்குள் அப்பாவிற்கு விசயம் தெரிந்துவிட்டது.... போன் பண்ணி சிரித்தார்
"என்னடா பொண்ணு புடிக்கலையா.... அம்மா இனிமே உனக்கு பொன்னே பாக்க மாட்டேன்னு சொல்லிட்டா..... இனிமே நீயா லவ் பன்னி பாத்தா தான் உண்டு...!!!" என்றார் நேரில் வந்து பேசுவதாக சொல்லி போனை வைத்தேன்

தேவ் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்....
"25 வயசாயுருச்சு சொல்லிகிரமாறி பாஸ்ட்லையும் ஒன்னும் கிடையாது.... இனிமே ஒருதன்னும் பொண்ணு தர மாட்டான்.... future-உம் போச்சு.... என்னடா பண்றது....?"
என் கைகள் நடுங்கி கொண்டிருந்தது

"xxxx..... xxxx .... xxxx ...xxxxx ....." நான் கூறிய வார்த்தைகளை மீண்டும் சொல்லி
"கொல்லாம எப்பிடிடா விட்டாங்க..... இனிமே பொண்ணு பாக்க பையன் வரான்னு சொன்னவுடன்னே அந்த பொண்ணுக்கு என்னடா தோனும்.... எதுக்கும் follow-up பண்ணிக்க..... தற்கொலை முயற்சி ஏதாவது பண்ணிடபோகுது...பொண்ணு என்ன அவ்வளோ மோசமாவ இருந்துச்சு..? "

"நம்ம ODC பார்கவி இல்ல.... அவளைவிட நல்ல இருந்தாடா....!!" முகத்தை சுளித்து நெஞ்சில் தட்டிக்கொண்டேன் "ச்சே...!!"

"டேய் என்ன பண்ற.... டென்ஷன் ஆகாத...." என்று என் கையை பிடித்தான்

அவனை உதறிவிட்டு... மீண்டும் முகத்தை சுளித்து... நெஞ்சில் தட்டினேன்

"அந்த பொண்ணு கிட்ட சாரி கேக்கணும்..." என்றேன்

"ஒன்னும் வேணாம்.. எல்லா அங்கிள் பாத்துப்பாரு....." என்று மீண்டும் என் கையை இறுக பற்றினான்

முகத்தை சுளித்து.... தோளை குலுக்கி.... "கையை விடுடா...xxxx " என்றேன்

சற்று விலகி போய் என்னை ஆச்சர்யமாக பார்த்தான்

"மச்சா சாரி டா.... நான் எதுவுமே வேணும்ன்னே பன்னலடா...." கண்களை வேகமாக சிமிட்டிக்கொண்டே தரையில் மண்டியிட்டேன்.... திடீர்ன்னு என்னோமோ ஆச்சுடா.... ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுடா....XXXX "  கைகள் மீண்டும் நெஞ்சை தட்டின

வாயை கையால் பொத்திக்கொண்டு அழவே ஆரம்பித்துவிட்டேன்.
                                                                       
2

முகத்தை சுளித்து.... முத்தமிடுவது போல் உதட்டை குவித்து நாக்கை நீட்டி.... வலது கையால் மட்டும் அவ்வப்போது வணக்கம் வைத்துக்கொண்டிருந்தேன். தலையில் உள்ள ஆயிரக்கணக்கான சர்க்யுட்டுகளில் எது short ஆகியிருக்கு என்று பார்பதற்காக நரம்பியல் நிபுணர் டொமினிக்கை பார்க்க வந்தோம்
 சில நிமிட காத்திருப்புக்கு பின் வழுக்கை தலையுடன் சோடா பொட்டி போட்ட நெட்டையான மனிதர் வந்தார்.
" யார் patient..."
"பாத்த தெரிலய xxxxx...."
"வாட்.....!!!" ஒரே வார்த்தையில் வியர்த்துவிட்டது அவருக்கு, தலை பளபளக்க தொடங்கியது 
"சார் இது தான் சார் இவன் பிரச்சனையே...." என்றான் தேவ் 
நான் சாரில் அமர்ந்து சந்திரமுகியாக முழுசாக மாறிய ஜோதிகா போல் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருந்தேன்.... கண்கள் தானாக சிமிட்டிகொள்ள.... தோள்கள் தானாக சிலிரித்து கைகளால் நெஞ்சை தட்டிக்கொண்டேன்.
"involuntary twitching..... obscene words...... ஹ்ம்ம் எத்தன வருசமா உங்களுக்கு இந்த பிரச்சன இருக்கு....?"
கைகளால் நடு விரலை காமித்தேன்.... டொமினிக் என்னை முறைத்தார்....
"ஒரு நாள்ன்னு சொல்றான் சார்...." என்றான் தேவ்
"சான்சே இல்லை என்றார் டொமினிக்....இந்த நோய் 20 வயசுக்கு மேல வரது ரொம்ப ரேர்..... இருபதுக்கு மேல வரவே வராதுன்னே சொல்லலாம்....."
"நம்புடா xxxxx....!!!"
"டேய் சும்மா இருடா.... சார் இவன் கூட நான் lkg-ல இருந்தே இருக்கேன்..... அவன் இந்த மாறி எல்லாம் இல்ல சார்..... !!!"
"ஹ்ம்ம்.... இருந்துருக்கலாம்.... நீங்க கவனிச்சுருக்கமாட்டீங்க..... சின்ன சின்ன symptoms ஆ வந்து இருக்கலாம்....இட்ஸ் genetic...."
"சார் இத சரி பண்ண முடியும் இல்ல....?"
"உங்க பாமிலில இது மாறி யாருக்கும் வந்திருக்கா?"
"பர்ர்ர்ர்....இல்ல...." தனிச்சையாக  வித்தியாசமான சப்தங்கள் எழுப்பினேன்
"90% genetic தான்.... மே பி... இருபத்தி அஞ்சு வயசுல வருதுன்னா environmental-அ கூட இருக்கலாம்.... இல்லன்னா தத்துபிள்ளையா கூட இருக்கலாம்..."
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது..... தத்துப்பிள்ளையா....?? நான் எண்ணுவதற்குள் அவர் தொடர்ந்தார்....
"இந்த நோய்க்கு பேரு தொரட் சின்றோம்.... இதுக்கு சரியான மருந்து இல்ல.... வேணும்னா symptom  வெளில தெரியாதமாரி மறைக்கலாம்..... ஆனா நோய குணப்படுத்த முடியாது......"

"டாக்டர்....xxxxx....." உதட்டை கடித்துக்கொண்டேன்
"இப்படியே பேசிட்டு இருந்தா... என்னால வேலைக்கு போக முடியாது.... பப்ளிக்கா நாலு இடத்துக்கு போக முடியாது.... என் சோசியல் லைப்பே காணாம போய்டுமே சார்...!!!" என்று அழுதேவிட்டேன்
"டோன்ட் வோரி மிஸ்டர்.... இதனால உயிருக்கோ உங்க அறிவுக்கோ எந்த ப்ரொப்லெமும் இல்ல.... நான் லெட்டெர் தரேன்.... யூ கேன் வொர்க்.... பட் சோசியல் லைப் நீங்க தான் பாத்துக்கணும்.... உங்களால இந்த டிக்ஸ் tics and twitches-அ  கண்ட்ரோல் பண்ண முடியும்..... முட்டி கிட்டு வர urine மாறி தான் இந்த symptoms.... பப்ளிக்கா இருக்கும் பொழுது எவ்வளோ கண்ட்ரோல் பண்ண முடியோமோ ட்ரை பண்ணுங்க.... முடியலையா.... யாருமில்லாத தனி இடத்துக்கு போய்... உங்க symptoms-அ எக்ஸ்பிரஸ் பண்ணிக்கங்க..... இந்த நோய்க்கு எந்த ட்ரீட்மேண்டும் இல்ல..... symptoms-அ கண்ட்ரோல் பன்ற psychotherapy மட்டும் தான் இருக்கு..... ஒன் month தெரபி எடுங்க.... இந்த நோய் தானா கட்டுக்குள்ள வந்துடும்....!!"

தொடரும்....

Friday, October 10, 2014

GRE Indians

அமெரிக்காவுக்கு வந்து மூணு மாசம் ஆகிடுச்சு. இதுவரைக்கு பார்த்து வாயை பொலந்தது மூணு விசயத்திற்கு, இறங்கி ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவுடன் பார்த்த எக்கச்சக்க சிட்டு குருவிகள் (உண்மையான சிட்டுக்குருவிகள்). செல் டவர்ல போச்சு.... பூச்சி மருந்துல போச்சின்னு நம்மூர்ல ஏதேதோ பட்டிமன்றம் வச்சி டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க... அழகா செயற்கை நீருற்றில் குளிசுக்கிட்டே "ஹாய் ப்ரோ.." என்கிறது. நம்மாளுங்க கெளம்பறதுக்கு முன்னாடியே இந்த ஊரு சரி பட்டு வராது என்று தெரிந்துகொண்டு அவைகளும் மைக்ரேட் ஆகி விட்டது போலும்.

ரெண்டாவது ஆறுகள்.... எல்லாம் திம்ம் என்று  கரைத்தொட்டு ஓடிக்கொண்டிருந்தன. திருச்சில் இருந்து வந்த எனக்கு காரணமே இல்லாமல் கர்நாடகா மேல் கோபம் வந்தது. மூன்றாவது மீண்டும் சிட்டுக்குருவிகள்.... எல்லாத்துக்கும் சிறகு முளைதுடுத்து.... ப்ரீயா பறக்க ஆரம்பிடுத்து..:-)

இந்த வருடம் மட்டும் இந்தியாவில் இருந்து இங்கே படிக்க வந்தவர்கள் ஒரு லட்சம் பேராம். என் கல்லூரியில் மாஸ்டர்ஸ் கிளாஸ் அனைத்திலுமே minority americans , majority இந்தியன்ஸ். என் க்ரூபில் இரெண்டே இரண்டு அமெரிக்கர்கள் மீதி எல்லோருமே நம்ம பயலுகதெ. நான் புனே சென்ற பொழுதில் கூட இவ்வளவு ஹோம்லியாக பீல் பண்ணவில்லை. ஒரு வெளிநாட்டுல இருக்கோம் அப்படிங்கற பீலிங்கே அப்பப்போ தான் வருது. அதுவும் நம்ம ஆளுங்க நாடு ரோட்டில் உம்மா கொடுத்துகொண்டிருக்கும் பொழுது வரும். (நம்ம ஊருல இப்படி பண்ண முடியுமா...???). 

வேலையை விடும் சமயம் மேனேஜர் us விசா அப்பளை பண்ணறியா என்று கேட்டார்(நக்கலாக என்று நினைக்கிறன்....!!). வொர்க் எதிக்ஸ் நான் ஒன்றும் கூறவில்லை. சொல்லிருக்கணும் ஒக்கேன்னு சொல்லி இருக்கணும். இல்லல்ல படிச்சு பெரியாளா ஆகி நோபெல் பரிசு வாங்க போறா மாறி கிளம்பிவந்தேன். onsite வந்துருந்தா நம்ம லெவெலெ வேற. இப்போ சோத்துக்கே சிங்கி அடிக்க வேண்டி இருக்கு. பாய்ஸ்ல வர செந்தில் மாறி புல் schedule இருக்கு இப்ப எங்க கிட்ட. வெள்ளி கிழமை லூதரன் ஸ்டுடென்ட் சென்டரில் ப்ரீ சிக்கன் பிரியாணி, வியாழகிழமை அங்க இருந்து கொஞ்சம் நேரா போய் லேபிட் எடுத்தா பெயர் தெரியாத இடத்தில pizza. வாழ்க்கை இந்த ஊர் கோவில்களின் அன்ன தானத்தில் செவ்வனே ஓடிக்கொண்டிருக்கிறது.

சமைக்கிறதே இல்லையா என கேக்காதீங்க, நாங்கள் செய்வதற்கு பெயர் சமையலா என்றே இன்னும் விளங்கவில்லை. பிரியாணி செய்யும் பொழுது வரும் வாசனையை வைத்தே உப்பு கம்மியா இருக்கு இன்னும் கொஞ்சம் போடு என்று கூறும் சீனியர் மாணவர்களை பார்த்து நாமும் ஒரு நாள்ள்ள்....  இவர்களை போல் ஆகிவிடுவோம் என்கிற நம்பிக்கையில் தினமும் எதோ சமைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். 

திடீர் திடீர் என்றும் onsite கிளம்பி வரும் நண்பர்கள் நயாகரா போவதும், awesome சிக்கன் பிரியாணி @NY என்று அப்டேட் போடுவதுமாக எரியும் வயிற்றில் சாம்பிராணி தூவுகிறார்கள். நாங்கள் அன்றாட தேவைக்கு மளிகை சமான் வாங்க காரில் பத்து நிமிடம் போகவேண்டும். அதற்கும் ஆளுக்கு அஞ்சு டாலர் கார் இருபவரிடம் கொடுத்து நாலு பேர் சேர்ந்து செல்லவேண்டும்.

டவுன் பஸ் இல்ல, அவசரமா சக்கரையோ உப்போ, பால் பாக்கெட்டோ வாங்க ஒரு பொட்டி கட இல்ல, ஒண்ணுமே படிக்காம எக்ஸாம்முக்கு 10 நிமிஷம் லேட்டா போய்கிட்டு இருக்கையில் வழியில் "எப்படியாவது பாஸ் ஆக்கிடு"
என்று வேண்ட எந்த மரத்துக்கு அடியிலும் பிள்ளையார் இல்ல. யோவ் இந்த ஊரு ஒரு பெரிய நெய்வேலியா..!!

2025 இல் அமெரிக்காவில் அமெரிக்கர்கள் மைனாரிட்டி ஆகிவிடுவார்களாம். எங்க ஏரியாவ பார்த்தா இப்பவே ஆயிட்ட மாறித்தான் இருக்கு. அதுவும் நான் இருக்கும் இடத்தை எல்லோரும் ஆர்லிங்கபுரம் (ஆர்லிங்டன்) என்று தான் கூறுகிறார்கள். அவங்க மட்டும் தான் தூத்துகுடிய டுட்டுகொரின்னு மத்துவாங்கள என்ன. அவசரமாக ரோடு க்ரோஸ் பண்ணும் பொழுது "வீட்ல சொல்லிட்டு வந்தியா...." என்று கேட்பதும் வெகு தூரத்தில் இல்லை.

கல்லூரியின் முதல் நாள் மத்திய பிரதேச மாணவர் ஒருவருடன் அறிமுகம் ஆனேன். அன்று முதல் நாள் நெறைய வேலை இருந்து. ID கார்டு வாங்கணும், பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணனும் அது  இது என்று பல. விசா காப்பியை கொடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தோம், அடுத்தது பேங்க் சென்று அக்கௌன்ட் ஓபன் பண்ண வேண்டும். மணி அப்பொழுதே 4 ஆகிவிட்டது. ஐந்து மணி மூடிவிடுவார்கள், நாங்கள் பேங்க் எங்கே இருக்கிறது என்று தேடி செல்ல வேண்டும். கண்டிப்பாக பக்கத்தில் இருக்காது, நம்ம ஊரு போல் குறுக்காக ஓடி சென்று விடவும் முடியாது. சின்ன சின்ன ஆளே இல்லாத தெருவில் கூட பட்டனை அமுத்தி வாக்கிங் சிக்னல் வந்தவுடன் செல்லவேண்டும்.

நான் மணி இப்பவே நாலு ஆயிடுச்சு இன்னிக்கு போன மாறித்தான்  என்று அருகில் இருந்த நண்பரிடம் சொன்னேன். அவரும் மணியை பார்த்துவிட்டு ஆமா ஆமா மணி ரெண்டரை ஆயிடுச்சு மூன்றைக்கு மூடிடுவாங்களே என்று தலையில் கை வைத்தார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை நான் இந்த முறை செல் போனில் டிஜிட்டல் வாட்சில் நேரத்தை சரியாக பார்த்துவிட்டு மணி நாலு இப்போ.... உங்க வாட்ச் தப்பா ஓடுது இன்னும் ஒரு மணி நேரத்துல பேங்க் மூடிடுவான் என்றேன் .

நானும் அதேதான் சொன்னேன் மணி 2.30, 3.30 பேங்க் மூடிடுவான், என் வாட்ச் கரெக்ட்டா ஓடுது இந்தியா டைம்ல என்றார்.
ஒ இன்னும் நீங்க மாத்தலையா... மாத்திடுங்க என்றது இல்ல இல்ல "I'm not gonna change" என்றார்.  இந்தியா டைமிங் தான் வச்சுப்பேன் என்று அடம்பிடித்தார். 

நாட்டு பற்று அப்படிங்கறது தேவைதான். நாம் எந்த  நாட்டுக்கு போனாலும் நம் நாட்டை மனதில் வைத்துகொண்டால் போதும் அதுக்குன்னு இவர மாறி ஓவர்டோஸ் போடதீங்க. முதல் நாள் கிளாஸ்சிற்கு டைம் கால்குலேசனை தப்பாக போட்டு கிளாஸ் முடிந்தவுடன் வந்தார்.

Wednesday, April 16, 2014

காட்சி பிழை 5

இரவு  எட்டு மணி, மாஜிஸ்ட்ரேட் வீட்டுக் கதவை தட்டினேன்.. அவர் மகன் கதவை திறந்தான்..."தம்பி அய்யா இருக்காரா... ரீமாண்டு வந்துருக்குன்னு சொல்லு..."

 உள்ளே சென்று "அஞ்சு நிமிஷம்..." என்றான்

"என்னப்பா இன்னும் பாம்பு பிடிச்சுகிட்டு தான் இருக்கியா...."

சிரித்தான்.." உன்  பேரு என்ன.. அன்னிக்கு கேட்க மறந்துட்டேன்...."

"ஹரி... ஹரி பிரஷாந்த்.."

"ஆமா.. நல்ல பாம்பு கூட பிடிப்பியா..?"

அவன் பதில் சொல்வதற்குள்  மாஜிஸ்ட்ரேட் வந்து குறுக்கிட்டார்..

"என்ன SI.. ராத்திரி நேரத்துல்ல நல்லது அது இதுன்னுகிட்டு...." அவரை பார்த்தவுடன் உடம்பை விரைப்பாக்காமல் casual salute ஒன்றை வைத்தேன்

"என்ன கேசு..."

"டொமெஸ்டிக் வையலான்ஸ்...."

"ஹ்ம்ம் கூப்டுங்க...."

ஜீபுக்குள் இருந்து  அந்த மாடை கான்ஸ்டபுள் கூட்டி வந்தார்....
ஒரு கும்புடு போட்டு விட்டு ஏதோ திருவிழாவிற்கு வந்த ஜமிந்தார் போல நின்று கொண்டிருந்தான். ரீமாண்டில்  கேட்கும் default கேள்விகளை மாஜிஸ்ட்ரேட் கேட்டார். அவரது மகனும் இன்னொரு பொண்ணும் (அவன் தங்கை போல..) ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தார்கள்.

"பேரு என்ன..."

"குமாரு சார்....."

"என்னையா கெடா குமாருன்னு போட்டு இருக்கு..."

"சாதா குமாரு தான்யா....." என்று மண்டையை சொரிந்தான்

"வயசு..."

"35"

"போலீஸ் அடிச்சாங்களா....?"

என்னை பார்த்தான்....

"அவர ஏன் பாக்குறீங்க.. தைரியமா உண்மைய சொல்லுங்க..."

"இல்லயா...."

"என்ன குத்தம் பண்ண...."

இவ்வளோ நேரம் கம்பீரமா தூண் மாறி நின்றவன்.. தீடீர் என்று தரையில் மண்டியிட்டு அழ ஆரம்பித்து விட்டான்.

"சத்தியமா  நான் ஒன்னும் பன்னலயா..... ஜெயில்ல இருந்து திருந்தி நேத்து தான் ஊட்டுக்கு போனேன்.... பொண்டாட்டிய கறி கொழம்பு வைடினா... கோழி கொழம்பு வச்சுட்டா.... ஏண்டி கறிக்கும்  கோழிக்குமா உனக்கு வித்தியாசம் தெரியாதுன்னு கேட்டதுக்கு.. எல்லாரும் சேந்து குடும்ப வன்முறைங்றாங்க அய்யா....."
 அப்படியே தவழ்ந்து அவர் காலை தொட போனான்... லத்தியால் ஒரு அடி போட்டு "எழுந்து நில்லுயா..எந்திரி" என்றேன்

"யாருக்கோ நான் வெளில இருக்காது பிடிக்கல.... இதுல போலீசும்  கூட்டு..." என்றான்  

அந்த சமயம் பார்த்து... பக்கவாட்டில் அம்மியில் சட்னி அரைத்துக்கொண்டிருந்த மாஜிஸ்ட்ரேட்டின் மனைவி.... NLC-யில் ஊதும் சங்கை போல அலறினார்.... "பாம்பு.. பாம்பு....."

கோர்ட் டுட்டியில் இருந்த மகாலிங்கம் எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை...
"எங்க.. எங்க.." என்று ஓடி வந்தார்.

பாம்பு சந்தர்பம் தெரியாமல் கைலியுடன் அமர்ந்திருந்த மாஜிஸ்ட்ரேட்  கால்களுக்கு பின் சென்று மறைய.... பட்டனை தட்டி விட்ட பொம்மை போல ஜங் ஜங் என்று குதித்துக்கொண்டிருந்தார்.  அவர் பையன்  "யாரும் பதட்ட படாம..அமைதியா இருங்க.... நா அத பிடிக்கிறேன்.." என்று கூறி அவன் அம்மாவிடம் அடியை வாங்கி கட்டிக்கொண்டான்.

மகாலிங்கம் ஒரு பெரிய குச்சி ஒன்றை கையில் எடுத்து சேருக்கு பின்னல் தெரிந்த வாலில் ஓங்கி ஒரு அடி போட்டார்..... உள்ளே இருந்த மாஜிஸ்ட்ரேட்டின்  பெண் வெறி பிடித்தவள் போல வெளியே ஓடிவந்து...
"யாரு.. யாரு மேல கைய வச்ச... இங்க நான் எத்தன வருஷாமா இருக்கேன் தெரியுமா...... உன்ன கொல்லமா விடமட்டேன்... விடமட்டேன்..." என்று சாமி வந்தவள் போல்அவர் கழுத்தை நெரித்தாள்.

நான் ஓடி மகாலிங்கத்தை அவளிடம் இருந்து விடுவித்து..... அவளை பிடித்தேன்..மயங்கி விழுந்து விட்டாள்.

பாம்பு போன சுவடே தெரியவில்லை...மாயமாய் மறைந்து விட்டது....

"என் பொண்ணுக்கு இதுக்கு முன்னால இது மாதிரி வந்ததே இல்ல சார்.." என்று மாஜிஸ்ட்ரேட்  புலம்பினார். அவர் மனைவி அழுது கொண்டிருந்தார்.

 இப்பொழுது கான்ஸ்டபுள்  turn  "சார்.... " என்று  பேய் பிடித்தது போல் கத்தினார்.

கெடா குமாரு.. அவர் கைகளில் இருந்து நழுவி தெரிக்கெட்டு ஓடிக்கொண்டிருந்தான். நான் கான்ஸ்டபுள் , மகாலிங்கம் மூவரும் அவனை துரத்திக்கொண்டு ஓடினோம். பின் புறம் இருந்த காட்டு பக்கமாக ஓடின குமார்.... அங்கே இருந்த அந்த பாழடைந்த பங்களாவிற்குள் புகுந்துவிட்டான்.

நாங்கள் மூவரும் வாசலில் ப்ரேக் போட்டு நின்றோம்.

"யோவ்.. இப்ப என்னயா பண்றது..." பதட்டமாக கேட்டேன்

"சார்.. வெளில வர வேற வழியே இல்ல... இப்படி தான் வரணும்... அதுவும் இந்த பங்களா.. நாம உள்ளே போகணும்ன்னு இல்ல.. அதுவே அஞ்சு நிமிசத்துல வெளில துரத்திடும் பாருங்க..." என்றார் மகாலிங்கம்

"சார்.. தப்பிசுட்டானா பெரிய கேஸ் ஆயிடும்.. பேப்பர்ல வந்துடும்.." என்றார் கான்ஸ்டபுள்

"அய்யயோ திரும்பியும் பேப்பர்லயா.... மகாலிங்கம் நீங்க முன்ன பின்ன இதுக்குள்ள போய் இருக்கீங்களா..."

"உடஞ்ச சேறு.. பழைய பீரோ.. போடுறதுக்கு அப்பப்போ வருவேன்.."

"அப்பா வாங்க என்கூட.... கான்ஸ்டபுள்  நீங்க இங்கயே  பண்ணுங்க...." என்று கூறி மகாலிங்கத்தை வலுக்கட்டாயமாக கொட்டி சென்றேன்.

கும்மிருட்டு... கூட மகாலிங்கம் வருவதே அவர் பேசுவதன் மூலம் தான் கண்டு பிடிக்க முடிந்தது. அவர் கையை இருக்க பற்றிக்கொண்டு உள்ளே சென்றேன்.

ஜல்...ஜல்... சத்தம் பின்னால் கேட்டது, யாரோ நடப்பது போல் நிழல் ஆடியது.

கைகள்  நடுங்க ஆரம்பித்தது.... "சார் போய்டுவோம் சார்.." என்றார் மகாலிங்கம். குடலை பிரட்டும் நெடியுடன் வௌவால்கள் முகத்தை பிராண்டி பறந்தன.

பின்னால் யாரோ காலில் கொலுசு போட்டு வேகமா ஓடுவது போல் இருந்தது... இருவரும் திரும்பினோம்.... இருட்டில் சரியாக தெளிவாக இல்லை... அனால் ஒரு பெண் சத்தியமாக ஒரு பெண்.... எங்கள் இருவருக்கும் நேர் எதிரே...அடர்ந்த  பெருமூச்சு விட்டுக்கொண்டே எங்களை நோக்கி ஓடி வந்தாள்.

"ஹ..ஹ...ஹ...." என்று சத்தம் வேறு. இதயம் பளுக் என்று வாய் வரை வந்து விட்டது.

மகாலிங்கம் என் கையை உதறி விட்டு ஓடி விட்டார்....விட்டான் பாவி.

நான் தடுமாறி உடைந்த பழைய சேரை மீண்டும் உடைத்தேன். தூசி ஏறி இருமல் வந்து விட்டது. கண்கள் எல்லாம் கலங்கி போய்..... கும்மிருட்டு.. மேலும் இருண்டு போனது.

அவள் எங்கே.... மகாலிங்கம் எங்கே ஒன்றும் தெரியவில்லை.

"மகாலிங்கம்..யோவ்...என்ன எப்பிடியாவது வெளில கூட்டி போயா... என்ன கேட்டாலும் தரேன்யா...." என்று கெஞ்சி பார்த்தேன்.

பதிலுக்கு "ஹ ஹ....ஹ.." என்று சத்தம் தான் வந்தது.

அப்பொழுது வெளியில் constable loud speaker-இல் கத்தினார்....

"கெடா குமாரு வெளில வந்து பத்து நிமிஷம் ஆச்சு சார்..... சீக்ரம் வெளில வந்துடுங்க....!!!"



Thursday, April 3, 2014

காட்சி பிழை 4

கேம்பஸ் இன்டர்வியுல கெடச்ச வேலைய விட்டுட்டு...  ரெண்டு வருஷம் முக்கித் திக்கித் தெணறி...UPSCக்கு படிச்சு முடியாமல் tnpscஇல் தேறி SI ஆக சேர்ந்து என் பெயர் முதன் முதலில் பேப்பரில் வந்த தினம். கட் பண்ணி எடுத்து பிரேம் போட்டு வைக்க முடியவில்லை. அக்ஷிதா எழுந்துவிட்டாள் வேகாமா..கசக்கி தூக்கி எறிந்து விட்டேன்.

தூக்க கலக்கத்தில் என்னை முறைத்துக்கொண்டே சென்றாள். கல்யாணம் ஆனா புதிதில் வேலைக்கே செல்லமாட்டேன் என்று அடம் பிடித்த என்னை அதட்டி விரட்டுவாள்... ஆனால் இப்பொழுது வீட்டிற்க்கே வரவில்லை என்றால் கோபம் வரத்தானே செய்யும்.

இன்னும் நான் upscக்கு படித்துக் கொண்டிருப்பதற்கே காரணம் அவள்தான். தினமும் பத்து கேள்வி கேட்பாள்..பதில் சொன்னால் தான் சாப்பாடே..எக்ஸ்ட்ரா ஐந்து கேள்விக்கு பதில் சொன்னால் முத்தம். எனக்கு தெரிந்து சப்பாடிற்காகவும் முத்ததிற்காகவும் IASக்கு படிக்கும் ஒரே ஆள் நானாக தான் இருப்பேன்.

கோபமாக முறைத்துக் கொண்டே என்முன் அமர்ந்தாள், சிறிது  முறைத்து பார்த்துவிட்டு.. அந்த குட்டி நோட்டை கையில் எடுத்தாள்.

"பிப்டி குவஸ்டீன்..... பிப்டி டப் குவஸ்டீன்.." என்றாள்

இப்போல்லாம் சண்டை போடுவதற்கும் குவச்டீன்சை பயன்படுத்துகிறாள்...

"பிப்டி யா....??"

மிக கோபமாக பேசாதே என்று சைகை செய்தாள்....
"ரொம்ப கோபமா இருக்கேன்... வாயில இருந்து ஆன்ஸார் மட்டும் தான் வரணும்...."

"தெரியலனா...."

"குட்டு குட்டுன்னு குட்டுவேன்....."

"கரெக்ட்டா சொன்னா.." என்று கண்சிமிட்டினேன்

"குட்டு கெடையாது..."

"இதெல்லாம் அநியாயம்... நா ஒத்துக்க முடியாது..நோ டீல்..நோ டீல்.."என்று எழுந்தேன். அருகில் வந்து குட்ட வந்தாள்.

ஓடினேன்...துரத்தினாள்..... நேற்று வாங்கி வைத்திருந்த டெட்டி பியர் ஒன்றை எடுத்து நீட்டினேன்.

"டெட்டி பியர் கொடுத்து ஐஸ் வச்சா விட்டுடுவேனா.... எத்தன போன்...எத்தன மெசேஜ்.... நீ என்ன கலெக்டர் உத்தியோகத்துக்கா போற.... உண்மையில நீ கலெக்டர் ஆனா வீட்டுக்கே வர மாட்டியா...."

எதிர்த்து ஒரு வார்த்தை பேசலையே..பேச மாட்டேனே...கல்யாணம் ஆகி ரெண்டு நாள்ல நான் கற்றுக்கொண்ட பால பாடம் இது.

மீண்டு குட்ட வந்தாள்..பெட்டுக்கு அடியில் அவளுக்காக வாங்கி வைத்திருந்த புது புடவைய எடுத்து நீட்டினேன். அதை பார்த்தவுடன் முகத்தில் லேசாய் புன்முறுவல் ..(தெரியுமே....!!)

"திருடன் டா நீ...." என்று மீண்டு குட்ட வந்தாள்

"போலிச ஊரே அப்டிதான் கூப்டுது... ஸ்டாப் ஸ்டாப்....  இதுக்கு மேல கொடுக்குறதுக்கு எதுவும் இல்ல..." என்று ஒற்றை காலில் மண்டியிட்டு ஆரம்பித்தேன்...

"1989-ல பிறந்து... கஷ்டப்பட்டு வளந்து... அடி வாங்கி படிச்சு.... பின்னாடி சுத்தின பசங்கள விரட்டி, தேடி வந்த பல மாப்ளைங்கள வேணான்னு சொல்லி எனக்காக காத்திருந்து என் வாழ்க்கையை கம்ப்ளீட் பண்ணதுக்கு...." என்று ஒரு ரெட் ரோசை நீட்டினேன்.

வெட்கமாக சிரித்து கொண்டே அனைத்துக் கொண்டாள்... பின் காதோரமாய் கேட்டாள்

"அந்த சாரி எங்க வாங்குன....?"

"ராஜா சில்கஸ்ல.... நல்லாருக்கா......?"

"மொதல்ல அத மாத்தனும்...."




Saturday, March 29, 2014

காட்சி பிழை 3

டிஸ்கவரி சேனல் க்ளோஸ் அப் ஷாட்டில் கூட பாம்பை இவ்வளவு அருகில் பார்த்ததில்லை...!!!

பேலன்ஸ் தவறி முட்புதரில் விழுந்ததில்.. உடம்பெல்லாம் முட்கள் குத்தி என்னால் எழுந்திரிக்க முடியவில்லை... பாம்பு கிளையில் இருந்து நழுவி என் காலில் விழுந்தது.... அடித்தொன்டையில் இருந்து கத்தியதால் என்னவோ வடிவேலு பெண் வேடம் போடும் போது வரும் குரலில் கத்திக்கொண்டிருந்தேன்.

மிஸ்டர் முருகானந்தம் பரபரப்பாக அதை தள்ளி விட குச்சியை தேடி கொண்டிருந்தார்.... பதட்டத்தில் நான் முண்டியதில் முட்கள் உடல் முழுவதும் ஏறிக்கொண்டிருந்தன.... ஏறுவது முள் தானா இல்லை பாம்பின் பற்களா என்று கூட தெரியவில்லை... நரகம்.... 200 பெர்சென்ட் நரகம்...!!!

தீடீர் என்று பாம்பு என் உடம்பில் இருந்து விலகியது.... அந்தரத்தில் என் முகத்திற்கு நேரே மிதந்து கொண்டிருந்தது.... இல்லை இல்லை யாரோ ஒருவருடைய கை அதை பிடித்துக்கொண்டிருந்தது. தலையை அசைக்க முடியவில்லை.... கண்களை முன்னுத்தி அறுபது டிகிரி உருட்டி பார்த்தேன்... 16 வயது இருக்கும்... பொடியன்... 6 அடி பாம்பை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.

முற்புதரில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ளவே பத்து நிமிடம் ஆகி விட்டது.. "யோவ் முருகானந்தம் சீக்ரம் யா... பாம்பு கடுச்சுருக்க போகுது... செத்துட போறேன்... "

"இந்தா இந்தா சார்.... " என்று ஏதோ செய்து கொண்டிருந்தார்

இன்னும் அந்த பாம்பை கையில் வைத்திருந்த அந்த சிறுவன்...

"ஐயோ அண்ணா.. இது சாரப் பாம்பு.. விஷம் கிடையாது...."

அவன் மட்டும் இதை சொல்லி இருக்காவிட்டால்.. இந்நேரம் செத்திருப்பேன். உடபெல்லாம் வின் வின் என்று தெரித்தது.... நல்ல வேலை வேறு யாரும் பார்க்கவில்லை...!!!

"தம்பி நீ யாரு...."

"மஜிச்ற்றடே பையன்..... மாடில படிச்சுகிட்டு இருந்தேன்.....நீங்க வராதுக்கு முன்னாடியே பாம்பு அங்க ரொம்ப நேரமா தொங்குச்சு நீங்க பார்க்கவே இல்ல.. அதான் ஓடி வந்தேன்..."

நான் முருகானந்தத்தை பார்த்தேன்.. அவர் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டார்....
"இத தான் அப்பயும் பன்னிருகீங்க...."

"தம்பி ரொம்ப தேங்க்ஸ் பா... உனக்கு எப்புடி பாம்பு புடிக்க தெரியும்.. அத போய் கைல வச்சு கிட்டு.. தூக்கி போடுப்பா அத...." என்றேன்

"ஹாபினா.. சின்ன வயசுல இருந்தே இசியா புடுசுடுவேன்..." என்று சொல்லி கொண்டே பாம்பை தூர வீசினான்

"இது எல்லாம் இப்ப ஹாபி லிஸ்ட்ல சேந்துடுச்சா.. சூப்பர்.. எல்லாம் டிஸ்கவரி சேனல் பண்ற வேல...." அவன் சிரித்தான் நான் "இன்னும் ஒரே ஒரு உதவி...."

"சொல்லுங்கண்ணா.."

"இந்த மேட்டரு..ப்ளீஸ்..." என்று கெஞ்சலாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்

"sure.... டியூஷனுக்கு டைம் ஆச்சு பாப்போம்.. " என்று ஹெர்குலஸ் சைக்கிளை ஓட்டி சென்று விட்டான்.

"சார்... புக்ஸ் எல்லாம் பேக்ல எடுத்து வச்சு பொறுமையா வந்துருக்கான் பாருங்க சார்...." என்றார் முருகானந்தம்

அவரை பார்த்து முறைத்தேன்.... "அவ மட்டும் வரலைனா இன்னும் நீங்க குச்சிய தேடிகிட்டு இருந்துருபீங்க...மிஸ்டர் முருகானந்தம்.."

அக்ஷிதா மீண்டும் கால் பன்னாள்.... பிஸி என்று செய்தி அனுப்பினேன்.

டாக்டரிடம் போய் உடம்பிற்கு எந்த சேதாரமும் இல்லை என்று உறுதி செய்த பின் வீட்டிற்கு சென்றேன்.

இன்று நடந்த சம்பவங்களை அசைத்து கொண்டே தூங்கியாதால்.. எம்மி ஜாக்சன் கனவில் மேரியாக வந்து என்னை எம்பி எம்பி துரத்தினாள். எந்த திசையில் ஓடினாலும் இறுதியாக அந்த சமாதியே வந்து தொலைத்து. வேறு வழி இல்லாமல் அந்த மொழங்கால் அளவு குட்டை கம்பவுண்டு சுவரை தாண்டி குதித்தேன்..... அது முடிவில்லாத அதல பாதாளாமாய் போய் கொண்டே இருந்தது..கிழே..வா வா என் சமாதிக்குள் வா... என்றாள் மேரி. எழுந்துவிட்டேன.

முகமெல்லாம் வியர்த்திருக்க .. அதற்குள் விடிந்திருந்தது... அருகில் அக்ஷிதா குளிருக்கு இழுத்து போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள்... ஒரே ஒரு முடி கீற்று அவள் முகத்தில் படறி இருந்தது... எவ்வளோ அழகாக இருக்கிறாள்.... கல்யாணம் ஆகி சில மாதம் தான் ஆகுது... அதற்குள் என்னை முழுதாக புரிந்து கொண்டவள்.... அப்பப்போ லைவ் status இன்னும் உயிருடன் தான் இருக்கேன் என்று அனுப்பினால் போதும்.. மற்றபடி வேறு தொந்தரவு ஏதும் செய்ய மாட்டாள். அவளுக்கு ஏதோ நான் தினம் வீரப்பன்களோடு சல்லாபம் புரிவதாக நினைப்பு.

அம்மா இவ்வளோ அழாகாக ஒரு மனைவியை பார்ப்பாள் என்று தெரிந்திருந்தால் பல அடிகளும் பீயர்களும் மிஞ்சி இருக்கும்..... இன்னும் தூங்காமல் எத்தனை பேர் இவள் தீடிர் கல்யாணத்தை நினைத்து என்னை தண்ணி அடித்துக் கொண்டு சபித்துக் கொண்டு இருகிறார்களோ தெரியவில்லை, ஒரு நல்ல கொலை கேஸ் என்று பார்த்தால்... பயங்கரமான பேய் கேசாக வந்து தொலைத்து விட்டது.

காபி போட்டு குடித்துக்கொண்டே..... அன்றைய செய்தித்தாளை எடுத்து புரட்டி கொண்டிருந்தேன்..அப்பொழுது அந்த செய்தி கண்ணில் பட்டது...

"சீரிய பாம்பு..!! சிதறிய காக்கி...!!!"





Friday, March 28, 2014

காட்சி பிழை 2

கோர்ட் கான்ஸ்டபள் முருகானந்தமும் நானும் fastrack குவார்டர்ஸுக்கு  நடந்து சென்று கொண்டிருந்தோம்.

"மேஜிஸ்ட்ரேட், முன்சிப், சப்-ஜட்ஜ், பாஸ்ட் ட்ராக்ன்னு மொத்தம் நாலுகோர்ட் இருக்கு சார்.... முன்சிப் கோர்ட் பில்டிங் அந்த காலத்துல ப்ரிடிஷ் கட்டினது.... மீதி மூணு கோர்ட்டும் புது பில்டிங்ல ஓடுது.... நாலு கோர்டுக்கும் குவார்டர்ஸ் பின் பக்கம் இருக்கு.. அதுக்கும் பின்னாடி பழைய பிரிட்டிஷ் காலத்து இடிஞ்ச பங்களா...."

"பங்களாவா இப்ப அங்க யாரு இருக்கா..."

"யாரும் இல்ல சார்..."

"அங்கயும் வாக்கிங் போகுதா அந்த பேயி.."

"அது மட்டும் இல்ல சார்.... சுத்தி 4 ஏக்கர் புதர் மண்டி காடு.. பாம்பு.. எக்கச்சக்கமா பாம்பு...."

"ஓஹோ..." அவர் சொல்வதை நான் சரியாக காதில் வாங்கி கொள்ளவில்லை... காரணம் அக்ஷிதா (aksithaa)  "சீக்ரம் வா.. சீக்ரம் வா" ன்னு அவள் அனுப்பிய எஸ்எம்எசில் இன்பாக்ஸ் நிரம்பி வழிந்தது... ஏகப்பட்ட மிஸ்டு கால்... அதற்குள் மணி ஆறு ஆகிவிட்டது. முன்சிப் கோர்ட்டை தாண்டி வந்துவிட்ட எங்களுக்கு அந்த இடம் நள்ளிரவு போல  இருட்டி விட்டிருந்தது வியப்பாக இருந்தது. பெரிய பெரிய தூங்கு மூஞ்சி மரங்கள்.... சில குட்டையான அரச மரங்கள்.. பெயர் தெரியாத இன்னும் சில மரங்கள் மேலே பரண் போலே வெளிச்சம் புகாத அளவுக்கு மூடி இருந்தது. quarters அருகில் சென்றதும்.. இது வரை நான் அறிந்திராத நறுமணம்.... மயக்கமே வந்து விட்டது எனக்கு.....  

"முருகானந்தம் உனக்கு ஏதும் வாசனை வருதா...."

"மகிழ மரம் சார்.. " என்று நாலு அடி  தூரத்தில் இருந்த மரம் ஒன்றை காமித்தார் 
அதை சுற்றி சட்டை பட்டன் சைசுக்கு சின்ன சின்னதாய் பூக்கள் கிடந்தன. 

ஒன்றை எடுத்து கையில் கொடுத்தார்.... துபாய் செண்டை விட காரமாக இருந்தது....

"இந்தவாசனைக்கு.. ஏகப்பட்ட பாம்புவந்து.. மரத்தடியில மயங்கி கெடக்கும் சார்..." அவர் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே ஏதே ஒன்று வேகமா ஊர்ந்து செல்வதை போன்று இருந்தது..... 

"அங்கிருந்து சீக்ரம் வா..." என்றாள் அக்ஷிதா

பாஸ்ட் ட்ரக் குவார்டர்ஸ் 2000-ல் கட்டப்பட்டது.. நன்றாக உதிர்ந்து பெயர்ந்து தமிழ்நாடு PWD-ன் கைவண்ணத்தை எடுத்துக்காட்டியது.. வீட்டிற்குள் லா புக்ஸ் இருக்க வேண்டிய ஷெல்பில் பல மூல்லிகை வேர்களை அடுக்ப்பட்டிருந்தன.... வீட்டில் இருக்கும் அத்தனை ஆணிகளிலும் நாட்டில் உள்ள அணைத்து சாமி படமும் மாட்டப் பட்டிருந்தது. முன் கதவின் மேல் அந்த மந்திரித்த கயிறு கட்டப்பட்டிருந்தது. முன்னால் சின்ன போர்டிகோ... நுழைந்தவுடன் ஆபீஸ் ரூம்.. பின்னால் ஹால்.. ரெண்டு பெட்ரூம்... கிட்சென்... அதை ஒட்டி கொள்ளை புற கதவு.... கதவை திறந்தவுடன் மீண்டு மகிழ பூவின் சுகந்தம். 

"முருகானந்தம்... பின்னாடியும் மகிழ மரம் இருக்கா.. "

ஆமாம் என்று அவர் சுட்டி காட்டிய திசையில் மிக பெரிய மகிழ மரம் ஒன்று இருந்தது.. அதன் மடியில் அந்த சமாதி. மகிழம் பூவின் சுகந்தத்தின் கிரகம்மா.. இல்லை காலையில் மகாலிங்கம் விட்ட சவாலா எது அப்படி செய்தது என்று தெரியவில்லை முருகானந்தம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நடக்க முடியாத அளவுக்கு மண்டியிருந்த புதர்களை தாண்டி அந்த சமாதி அருகே சென்று விட்டேன். 

சுற்றி சின்னதாய் சுற்று சுவர்.. நடுவில் சற்றே இடிந்து விரிசல்களில் முளைத்து இருந்த அரச மரங்களை தாங்கி கொண்டு இருந்தது அந்த சமாதி . அதன் முன்னே கல்வெட்டு போன்று ஒன்று இருந்தது. குச்சி ஒன்றை கையில் எடுத்து அதன் மேல் படர்ந்திருந்த காட்டு கொடி ஒன்றை விளக்கி டார்ச் அடித்து படித்தேன். சரியாக படிக்க முடியவில்லை... ஒரு சூ காலை காம்பவுண்டுக்குள் வைத்து... சற்று குனிந்து அரைகுறையாக அமர்ந்து படித்தேன்...

"Mary Adella Margret , Daughter of Justice Gregory Singlet, Died because of disease at the age of 19 years 6 months 23 days on September 5, 1893...."

மீண்டும் sms "reply ப்ளீஸ்... worried..:-("

"சார்..."  என்று முருகானந்தம் அலறினார் 

ஏற்கனவே சிறிது பேலன்சில் அமர்ந்திருந்த நான் சற்று தடுமாறினேன்..  மகிழ மரத்தின் தாழ்வான கிளையில் இருந்து தொங்கி கொண்டிருந்த பாம்பு என் முகத்திற்கு நேர் எதிரே நாக்கை நீட்டி சீறிக் கொண்டிருந்தது.