அதிகாலை ஐந்து மணிக்கே ஊர் கோலாகலமாக திருவிழா கோலம் பூண்டு இருந்தது. கணேஷ் முழுக்க சவரம் செய்து வெள்ளை வேட்டி சட்டை அணிந்து தின்னையில் அமர்ந்து தனது மனைவி அமுதவல்லியிடம் மதராசில் நடந்த கூட்டத்தை பற்றியும் லட்ச கணக்கானோர் திரண்டு கோட்டையில் தேசிய கொடியை ஏற்றியதை பற்றியும் பேசிக்கொண்டிருந்தான். அவனருகில் வந்து அமர்ந்த முருகன் "நமக்கு உண்மையிலேயே சுதந்திரம் கெடச்சுடுச்சா அண்ணா..." எனக் கேட்டான். அதை கேட்ட அமுது சிரித்தாள். கணேஷ் அவனைக் கட்டிக்கொண்டு
"ஏ முருகா அப்படி கேக்குறா... சத்தியாம சுதந்திரம் கெடச்சுடுச்சு.."
"இல்ல எனக்கு ஒரு வித்தியாசமும் தெரில அதான்.."
"உனக்கு என்ன தெரியனும்..."
"நம்ம ஊர் அப்பிடியே தானே இருக்கு.... நம்ம வீடும் அப்படியே தானே இருக்கு... காலையில மாடு ஓட்டிகிட்டு போற கோனார் வழக்கம் போல காட்டுக்கு போய்ட்டார்.... அம்மா வழக்கம் போல சமையல் கட்டுல இருக்கா... அக்காவ வெளில கூப்டா வரக் கூடாதுன்னு சொல்றா....."
கணேஷ் அவனை சிறிது நேரம் கூர்ந்து பார்த்தான் .."நா சொல்றது உனக்கு புரியாதுன்னு தெரில.. இருந்தும் சொல்லறேன்... இது வரைக்கும் நம்மல யாரோ ஒருத்தன் ஆண்டான்.. இனி நம்மள நாமே ஆள போறோம்.... அதோட பலன் கொஞ்ச கொஞ்சமா தெரியும்.. அக்கா கூட பள்ளி கூடத்துக்கு போக போறா.... நம்மாள்ள ஒருத்தன் கோட்டைக்கும் போவான்.... நாளைக்கு நீ கூட படிச்சுட்டு கலெக்டர் ஆகலாம்.... இனி நாம தாண்டா ராஜா... நீ ராஜா.... நான் ராஜா.... இந்த நாட்டுல இருக்க ஒவ்வொருத்தனும் ராஜா.. யார் வேணாலும் எங்கு வேணும்னாலும் செல்லலாம்...யாரையும் யாரும் தடுக்க முடியாது...!!!"
"அப்படினா கோவிலுக்கு யார் வேணாலும் போகலாமா..."
"கண்டிப்பா.. அதுக்குன்னு சட்டமே வரப்போகுது...."
" சரி" என்று கூறி எழுந்தான் முருகன்
"எங்கடா போற..."
"சுதந்தரத்தை கொண்டாட" என்று கூறி ஓடினான்.
தாத்தா வழக்கம் போல ஆலமரத்தில் சாய்ந்து படுத்திருந்தார்.. முருகன் ஓடி வந்தான் "என்ன தாத்தா... இப்படி படுதுக்கிடக்குற..."
"ஏன் என்னாச்சு.."
"நமக்கு சுதந்திரம் கெடச்சுடுச்சு..."
"அப்படியா.."
"என்ன அப்படியா உனக்கு ஒன்னும் தெரியாதா.."
"ஒன்னும் தெரியலியே..."
"சுதந்திரம் கெடச்சா என்னென்ன கெடைக்கும் சொல்லு.."
" என்னென்ன கெடைக்கும்..."
"ஹ்ம்ம் எல்லாம் கெடைக்கும் இப்போ நா ராஜா..எங்கண்ணன் ராஜா... நீ ராஜா.."
தாத்தா சிரித்தார்.." நானுமா..?!"
"ஆமா.. நீயும் தான்.... யார் வேணாலும் எங்க வேணாலும் போகலாம் கோவில் உட்பட.." என்று முருகன் சொன்ன பொழுது தாத்தா எழுந்தே விட்டார்.
"என்ன என்ன சொன்ன.."
"இப்போ யார் வேனாலும் கோவிலுக்கு போகலாம்ன்னு சொன்னேன்.."
தாத்தாவிற்கு கைகால் ஓடவில்லை...
"வா கோவிலுக்கு போகலாம்.." என்றான் முருகன்
"நில்லு நில்லு.." என்று தாத்தா அருகில் இருந்த குடிசைக்கு கம்பை பிடித்துக்கொண்டு ஓடினார். துண்டை கட்டிக்கொண்டு அருகில் இருந்த குளத்தில் முங்கி விட்டு.... வளந்திருந்த முடிகளை சின்டாய் கட்டிக்கொண்டார். துருப் பிடித்திருந்த பெட்டியில் இருந்து ஊதா நிறம் ஏறி இருந்த வேட்டி சட்டையை போட்டுக் கொண்டார். நெற்றியில் பெரிய பட்டை இட்டுக்கொண்டு துள்ளலுடன் முருகனோடு நடக்க ஆரம்பித்தார்.
சிதம்பரத்தை நெருங்க நெருங்க நான்கு கோபுரங்களும் தெரிய ஆரம்பித்தன. குறுக்கு வழியில் சென்று கோவிலின் சமீபத்தை நெருங்கிவிட்டனர். தாத்தா மெய்மறந்து கோவிலை பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்.
கோவிலின் கிழக்கு வாசலுக்கு வந்து சிறிது தயங்கினார். போலாம் என்று முருகன் செய்கை செய்தான். அவர் தனது கால்களை கோபுர படிகளில் வைத்தார்... தன் வாழ் நாளில் பார்க்க துடித்த ஓர் இடம்... ஒரு பர்லாங்கு தூரமே இருந்தாலும் பார்க்க முடிந்திறாத இடம்.... இனி பார்க்கவே முடியாது இறந்து விடுவோமோ என்று நினைத்த இடம்.... அவர் நடக்க நடக்க அவர் கண்களுக்கு விருந்தாய் விரிந்து கொண்டிருந்தது. அவர் தன்னை முழுதும் மறந்திருந்தார்.
சுகந்தம் நிறைந்த தென்றல் அவர் முகத்தில் அப்பியது.... ஆயிரங்கால் மண்டபத்தில் நாதஸ்வரமும் மிருதங்கமும் இசைத்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு அபிநயம் பிடித்து பரதம் ஆடிக்கொண்டிருந்தாள் ஓர் யுவதி. அவளை தாண்டி தங்க கோபுரம் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அவர் தன்னை மறந்து "என்னாட்டவர்க்கு இறைவா..." என்று ஆரம்பிக்கும் பொழுது ஒரு கல் வந்து அவரது நெற்றியில் பட்டு இரத்ததுடன் தெரித்தது.
"ஆ..." என்று கத்திக்கொண்டு விழுந்தார்
தீடீர் என்று என்ன நடந்தது என்று அறியாத முருகன் அதிர்ச்சியுடன் அவரை பிடித்தான்.
அப்பொழுது தான் பார்த்தார்கள் கோவிலே ஸ்தம்பித்து நின்று இவர்களை பார்த்துக்கொண்டிருப்பதை.
ஒருத்தன் வந்து கீழே கிடந்த தாத்தாவை உதைக்க துவங்கினான்.. மேலும் சிலர் சேர்ந்துக்கொண்டனர்... முருகன் தடுத்தான் "ஏ அவர அடிகிறீங்க.. அதான் சுதந்திரம் கிடைச்சுருச்சுல...." ஒரு முரட்டு கை அவனை அறைந்தது... சில அடி தள்ளி குளத்துச் சுவரில் இருந்த நந்தியின் மேல் முட்டிக்கொண்டான்.
ஏறக்குறைய தாத்தா மயக்கம் அடையும் அளவிற்கு அடித்துவிட்டு இழுத்து சென்று வெளியில் எரிந்து விட்டார்கள்.
முருகன் அழுது கொண்டே அவர் அருகில் சென்று அமர்ந்தான்.... அவரை கஷடப்பட்டு எழுந்து சம்மணம் இட்டு அமரச்செய்தான். இருவரும் ஒன்றும் பேச வில்லை...... முருகன் அழுது முடித்து கண்களை துடைத்துவிட்டு பார்த்தபொழுது தாத்தா அங்கு இல்லை கசக்க பட்ட காகிதம் ஒன்று இருந்தது அதில் ஒரு பெண் பரதம் ஆடிக்கொண்டிருந்தாள்.
தூரத்தில் வானொலி ஒலித்தது.... ஆல் இந்தியா ரேடியோ.... செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்.... இந்தியா இனி சுதந்திர நாடு...!!!!
"ஏ முருகா அப்படி கேக்குறா... சத்தியாம சுதந்திரம் கெடச்சுடுச்சு.."
"இல்ல எனக்கு ஒரு வித்தியாசமும் தெரில அதான்.."
"உனக்கு என்ன தெரியனும்..."
"நம்ம ஊர் அப்பிடியே தானே இருக்கு.... நம்ம வீடும் அப்படியே தானே இருக்கு... காலையில மாடு ஓட்டிகிட்டு போற கோனார் வழக்கம் போல காட்டுக்கு போய்ட்டார்.... அம்மா வழக்கம் போல சமையல் கட்டுல இருக்கா... அக்காவ வெளில கூப்டா வரக் கூடாதுன்னு சொல்றா....."
கணேஷ் அவனை சிறிது நேரம் கூர்ந்து பார்த்தான் .."நா சொல்றது உனக்கு புரியாதுன்னு தெரில.. இருந்தும் சொல்லறேன்... இது வரைக்கும் நம்மல யாரோ ஒருத்தன் ஆண்டான்.. இனி நம்மள நாமே ஆள போறோம்.... அதோட பலன் கொஞ்ச கொஞ்சமா தெரியும்.. அக்கா கூட பள்ளி கூடத்துக்கு போக போறா.... நம்மாள்ள ஒருத்தன் கோட்டைக்கும் போவான்.... நாளைக்கு நீ கூட படிச்சுட்டு கலெக்டர் ஆகலாம்.... இனி நாம தாண்டா ராஜா... நீ ராஜா.... நான் ராஜா.... இந்த நாட்டுல இருக்க ஒவ்வொருத்தனும் ராஜா.. யார் வேணாலும் எங்கு வேணும்னாலும் செல்லலாம்...யாரையும் யாரும் தடுக்க முடியாது...!!!"
"அப்படினா கோவிலுக்கு யார் வேணாலும் போகலாமா..."
"கண்டிப்பா.. அதுக்குன்னு சட்டமே வரப்போகுது...."
" சரி" என்று கூறி எழுந்தான் முருகன்
"எங்கடா போற..."
"சுதந்தரத்தை கொண்டாட" என்று கூறி ஓடினான்.
தாத்தா வழக்கம் போல ஆலமரத்தில் சாய்ந்து படுத்திருந்தார்.. முருகன் ஓடி வந்தான் "என்ன தாத்தா... இப்படி படுதுக்கிடக்குற..."
"ஏன் என்னாச்சு.."
"நமக்கு சுதந்திரம் கெடச்சுடுச்சு..."
"அப்படியா.."
"என்ன அப்படியா உனக்கு ஒன்னும் தெரியாதா.."
"ஒன்னும் தெரியலியே..."
"சுதந்திரம் கெடச்சா என்னென்ன கெடைக்கும் சொல்லு.."
" என்னென்ன கெடைக்கும்..."
"ஹ்ம்ம் எல்லாம் கெடைக்கும் இப்போ நா ராஜா..எங்கண்ணன் ராஜா... நீ ராஜா.."
தாத்தா சிரித்தார்.." நானுமா..?!"
"ஆமா.. நீயும் தான்.... யார் வேணாலும் எங்க வேணாலும் போகலாம் கோவில் உட்பட.." என்று முருகன் சொன்ன பொழுது தாத்தா எழுந்தே விட்டார்.
"என்ன என்ன சொன்ன.."
"இப்போ யார் வேனாலும் கோவிலுக்கு போகலாம்ன்னு சொன்னேன்.."
தாத்தாவிற்கு கைகால் ஓடவில்லை...
"வா கோவிலுக்கு போகலாம்.." என்றான் முருகன்
"நில்லு நில்லு.." என்று தாத்தா அருகில் இருந்த குடிசைக்கு கம்பை பிடித்துக்கொண்டு ஓடினார். துண்டை கட்டிக்கொண்டு அருகில் இருந்த குளத்தில் முங்கி விட்டு.... வளந்திருந்த முடிகளை சின்டாய் கட்டிக்கொண்டார். துருப் பிடித்திருந்த பெட்டியில் இருந்து ஊதா நிறம் ஏறி இருந்த வேட்டி சட்டையை போட்டுக் கொண்டார். நெற்றியில் பெரிய பட்டை இட்டுக்கொண்டு துள்ளலுடன் முருகனோடு நடக்க ஆரம்பித்தார்.
சிதம்பரத்தை நெருங்க நெருங்க நான்கு கோபுரங்களும் தெரிய ஆரம்பித்தன. குறுக்கு வழியில் சென்று கோவிலின் சமீபத்தை நெருங்கிவிட்டனர். தாத்தா மெய்மறந்து கோவிலை பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்.
கோவிலின் கிழக்கு வாசலுக்கு வந்து சிறிது தயங்கினார். போலாம் என்று முருகன் செய்கை செய்தான். அவர் தனது கால்களை கோபுர படிகளில் வைத்தார்... தன் வாழ் நாளில் பார்க்க துடித்த ஓர் இடம்... ஒரு பர்லாங்கு தூரமே இருந்தாலும் பார்க்க முடிந்திறாத இடம்.... இனி பார்க்கவே முடியாது இறந்து விடுவோமோ என்று நினைத்த இடம்.... அவர் நடக்க நடக்க அவர் கண்களுக்கு விருந்தாய் விரிந்து கொண்டிருந்தது. அவர் தன்னை முழுதும் மறந்திருந்தார்.
சுகந்தம் நிறைந்த தென்றல் அவர் முகத்தில் அப்பியது.... ஆயிரங்கால் மண்டபத்தில் நாதஸ்வரமும் மிருதங்கமும் இசைத்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு அபிநயம் பிடித்து பரதம் ஆடிக்கொண்டிருந்தாள் ஓர் யுவதி. அவளை தாண்டி தங்க கோபுரம் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அவர் தன்னை மறந்து "என்னாட்டவர்க்கு இறைவா..." என்று ஆரம்பிக்கும் பொழுது ஒரு கல் வந்து அவரது நெற்றியில் பட்டு இரத்ததுடன் தெரித்தது.
"ஆ..." என்று கத்திக்கொண்டு விழுந்தார்
தீடீர் என்று என்ன நடந்தது என்று அறியாத முருகன் அதிர்ச்சியுடன் அவரை பிடித்தான்.
அப்பொழுது தான் பார்த்தார்கள் கோவிலே ஸ்தம்பித்து நின்று இவர்களை பார்த்துக்கொண்டிருப்பதை.
ஒருத்தன் வந்து கீழே கிடந்த தாத்தாவை உதைக்க துவங்கினான்.. மேலும் சிலர் சேர்ந்துக்கொண்டனர்... முருகன் தடுத்தான் "ஏ அவர அடிகிறீங்க.. அதான் சுதந்திரம் கிடைச்சுருச்சுல...." ஒரு முரட்டு கை அவனை அறைந்தது... சில அடி தள்ளி குளத்துச் சுவரில் இருந்த நந்தியின் மேல் முட்டிக்கொண்டான்.
ஏறக்குறைய தாத்தா மயக்கம் அடையும் அளவிற்கு அடித்துவிட்டு இழுத்து சென்று வெளியில் எரிந்து விட்டார்கள்.
முருகன் அழுது கொண்டே அவர் அருகில் சென்று அமர்ந்தான்.... அவரை கஷடப்பட்டு எழுந்து சம்மணம் இட்டு அமரச்செய்தான். இருவரும் ஒன்றும் பேச வில்லை...... முருகன் அழுது முடித்து கண்களை துடைத்துவிட்டு பார்த்தபொழுது தாத்தா அங்கு இல்லை கசக்க பட்ட காகிதம் ஒன்று இருந்தது அதில் ஒரு பெண் பரதம் ஆடிக்கொண்டிருந்தாள்.
தூரத்தில் வானொலி ஒலித்தது.... ஆல் இந்தியா ரேடியோ.... செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்.... இந்தியா இனி சுதந்திர நாடு...!!!!

