சிறுகதை

Thursday, February 13, 2014

பூவேழினி 5

மதுரையில் இருந்து முப்பது காததிற்கு தெற்கே இருந்தது தங்க சுரங்கங்கள் நிறைந்த, ஏழழேழ் நாடுகளில் குறும்பனை நாட்டின் தலைநகர் சென்னூர்.  ஆங்கே சுற்றிலும் பல காதங்களுக்கு தங்க கிணறுகள் வெட்டப்பட்டு இரவு பகல் பாராமல் சப்பை மூஞ்சியும் வெளிர் வண்ணமும் குட்டையான உடல்வாகும் கொண்ட மனிதர்கள் பலர் சுரங்கங்களில் தங்கம் வெட்டி எடுத்துக்கொண்டு இருந்தனர். அதனால் ஆயிரகணக்கான தீவர்த்திகள் பல நூறு கிணறுகளில் கொழுந்து விட்டு எரிய... வெளிர்  மஞ்சை பூசிய பெண்ணின் எலும்பிச்சை முகம் போல பிரகாசித்துக் கொண்டிருந்தது சென்னூர்.

 அவ்வூருக்கு சற்று தூரத்தில் சிறிய மடுவில் இருந்து சென்னூரை பார்த்த உதயனுக்கு.... தங்க கிணறுகள் இரவு நேரத்தில் உதித்த சிறு சிறு கதிரவண்களை போல் தெரிந்தது. சென்னூரை தங்க நகரம் என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணமோ என்று எண்ணிக்கொண்டான்.

தங்கத்தை பற்றியும் தங்க சுரங்கங்கள் பற்றியும் நம் மக்கள் வெகுவாக அறிந்து வைத்திருந்தனர். ராபதேஸ்வரர் வந்த பிறகு இக்கலை மேலும் வலு பெற்று பிற தாதுக்களை நீக்கி மிக தரமான தங்க கட்டிகளை உருவாக்க கற்றுக்கொண்டனர். வெட்டி எடுக்க பெற்ற தாதுக்கள் நேராக கொல்லன் உலைக்கு சென்று தரமாக சுத்த தங்கமாக பிரிக்க பெற்று பின்னர் தேவைக்கு ஏற்ப தங்கத்தையும் தாமிரத்தையும் கலந்து நகைகள், காசுகள், மாலைகள் செய்யப்பட்டன.

தங்கதிற்கான மோகம் இன்று போல் அன்றும் ஓங்கி பறந்து கொண்டு தான் இருந்தது.. அதனால் பற்பல வியாபாரங்கள் செய்யும் வணிகர்களும்... சிற்றரசுகளின் ராணிகளும், இளவரசிகளும் இன்னும் பல பணக்காரர்களும்.. அவர்களுக்கு வியாபாரம் செய்ய ஆடைகள், உணவுகள் போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகளும் என்று பலர் ஊருக்குள் வந்தும் போயும் கொண்டிருந்தனர்.

கலை நயம் மிக்க நகைகளை செய்வதில் கைதேர்ந்தவர்கள் சென்னூர் தட்டான்கள். நகை செய்யும் கூடத்திற்கு அனுமதி இன்றி வேறொருவர் சென்றால் தலை இல்லாமல் தான் வெளிவர வேண்டி இருக்கும்.ராஜாங்கத்திற்கு தேவையான தங்க நாணயங்களை செய்யும் கூடமும் அங்கே இருந்தது.  அதனால் காவலும் கட்டு கோப்பும் பலமாக இருந்தது. மலை போல ஊரை சுற்றி கோட்டை எழுப்பபட்டு அகழியும் வெட்டப்பட்டிருந்தது. வீரர்கள் வாளும் வேலும்  ஏந்திக்கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தனர். இந்நாட்டின் தலைவன் இந்தினை மீறி காற்று கூட சென்னூர் கோட்டை கதவுகளை தாண்ட முடியாது.  கோட்டைக்கு வெளியிலேயே பல வீரர்கள் காவல் புரிந்து கொண்டு இருந்தனர், ஒருவரையும் சாலையில் நிற்க விடவில்லை. நகர்த்திக்கொண்டே சென்றனர். யாரோ ஒருவனை நான்கு வீரர்கள் அவன் கத்த கத்த எங்கோ தூக்கி சென்றனர்.

சென்னூரை ஒரு தடவை ஆவது பார்த்துவிட வேண்டும் என்கிற உதயனின் ஆசை  இன்றாவது பாதி நிறைவேறி விட்டது. ஆம், கோட்டைக்கு வெளியே கிணறுகளை பார்த்தாகிவிட்டது.... அப்பா எவ்வளவு ஆழமாக தோண்டிக்கொண்டே போகிறார்கள். விசாலமான கடை வீதிகள், வித விதமான சாமான்கள், உணவு வகைகள் அப்பப்பா எத்தனை எத்தனை... ஒரு சதாரான மனிதனின் இச்சைகளை போக்க எத்தனை எத்தனை வழிகள். சில பெண்கள் கூட்டமாக பாண்டிய நாட்டை பற்றி பாடி ஆடிக்கொண்டிருக்க சுற்றி  நின்று கைத்தட்டிக்கொண்டிருந்தது சிறு கூட்டம். கோட்டைக்கு வெளியிலேயே இவ்வளவு கலகலப்பாக இருந்தால், உள்ளே எப்படி இருக்கும் என்று உதயனின் மனம் என்ன துவங்கியது. நமது வேலை இதுவல்ல மதுரை செல்ல வேண்டும், குருவின் கட்டளை. இருந்தும் இன்று இரவு எங்காவது தங்கி நாளை சூர்யோதயதிற்கு பிறகு தானே செல்ல வேண்டும். ஏன் இன்று இங்கேயே இரவு தங்க கூடாது.. என்று அவன் மனமே கேள்வி கேட்டு அறிவு பதில் சொல்வதற்குள் மனமே சரி என்றும் பதி சொல்லி விட்டது.

கோட்டை கதவுகள் திறந்திருந்தால் அதன் வழியாக நகரத்தின் சிறு பகுதியை ஆவது பார்த்து விடலாம். அணைத்து வாசல் கதவுகளும் மூடி ஆகி விட்டது.. திறந்திருப்பது ஒரே ஒருவாசல் கதவுகள்....  தங்க வாசலின் கதவுகள். எறும்புகள் தங்க தாதுவை கோட்டைக்குள் கொண்டு சேர்க்கும் வழி. அங்கே சென்றால் விரட்டுவார்களோ..போய் தான் பார்ப்போமே.. ஒரு வேளை இனி சென்னூர் வர சந்தர்ப்பமே அமையாமல் போய்விட்டால் பார்க்கவே முடியாதே என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே கிழக்கு பக்கத்தில் இருக்கும் தங்க வாசலை நோக்கி நடந்தான்.

கோட்டை வாசலுக்கு அருகே அவ்வளவாக கூட்டம் இல்லை.. காவலர்கள் தான் அதிகம் நின்றனர். வாயிலுக்கு அருகில், சுரங்கத்தில் இருந்து எருது பூட்டிய வண்டிகள் வரும் வழியில் எறும்பு மனிதர்களின் வீடுகள் இருந்தது. மூங்கில்களில் கட்ட பட்டிருந்த குடிசை வீடுகள்... வித்தியாசமான உணவின் வாசம் உணவு வகை என்னவென்று தெரிவிக்க வில்லை என்றாலும் உதயனின் பசியை கிள்ளி விட்டு மிதந்து சென்றது. மேலும் அக்குடியிருப்புக்கு அருகில் சென்றால்.. வாசல் நேராக இருக்கும் ஊரும் தெரியும்.

உதயன் அவ்வீடுகளை நெருங்கினான்.... வெளிர் நிறத்துப் பெண்கள் குழைந்தகளுடன் விளையாடி கொண்டிருந்தனர்.....  வேலை விட்டு வந்த எறும்புகள் துங்கி கொண்டிருந்தார்கள். கிழக்கு தேசத்தில் இருந்து சுரங்கங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்ட அடிமைகள்.  அத்தேசத்து பெண்கள்  விதவிதமான  பொருட்களை செய்து தத்தம் வீட்டின் வெளியில் அடுக்கி வைத்திருந்தனர். பனை ஓலைகளிலும், மூங்கில்கலிலும் சிறு சிறு பொம்மைகள்.... நாற்காலிகள் களிமண்ணில் செய்யப்பட்டிருந்த தட்டுக்கள் என்று பல விதமான பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர்.

இதை எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வந்த உதயனை ஒரு முதாட்டி கைகளை அசைத்து அழைத்தாள். அவனிடம் வேலைப்பாட்டுடன் சிகப்பு மஞ்சள் நிறத்தில் பின்னப்பட்டிருந்த கைகளில் கட்டிக்கொள்ளும் கயிறு ஒன்றை கொடுத்தாள்.

"எனக்கு இது தேவை இல்லையே பாட்டி..."
அவள் நீட்டிக்கொண்டே இருந்தாள். உதயனுக்கு என்னவென்றே புரியவில்லை கைபையில் வைத்திருந்த காசுகளை ஒரு நாணயத்தை எடுத்து கொடுத்தான். பாட்டி அதை வங்கி கொள்ளாமல்  கயிறை மட்டும் நீட்டிக்கொண்டிருந்தாள்.
"பணம் கொடுக்காமல் தானமாக நான் எதுவும் வாங்கி கொள்வதில்லை" என்று கூறி மேலே நடக்க துவங்கினான்.
அவனை தடுத்து நிறுத்திய பாட்டி... சிறிய மணி ஒன்றை கையில் எடுத்து இசைத்தாள். உள்ளிருந்து பதின் வயதில் இருக்கும் பெண்ணொருத்தி வெளியில் வந்தாள். பளிங்கு போன்ற நிறம் கத்தி போன்ற கண்கள், சிறிய உதடுகள். தமிழகத்து பெண்களுக்கும் இவளுக்கும் அத்தனை வித்தியாசம்.... தமிழகத்து பெண்களின் கண்கள் தாமரை மொட்டு என்றால் இவளின் கண்களோ மல்லிகை மொட்டு.

அவள்பாட்டியிடம் ஏதோ பேசிவிட்டு.....
"நீங்கள் மதுரைக்கு போக திட்டமிட்டுள்ளீரா...."
உதயனுக்கு அதிர்ச்சியாக இருந்தது... யார் இவர்கள் இவர்களுக்கு எப்படி தெரியும்.....
"யார் அப்படி சொன்னது.... அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை...."
அவள் இவன் இதை  என்று எதிர்பார்த்ததை போல் முகத்தில் எந்த சலனமும் இல்லமால்
"உங்களால் போக முடியாது.... உங்களை சென்னூர் விடாது..." என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
மூதாட்டி இன்னும் கயிறை நீட்டி சிரித்துக்கொண்டிருந்தாள்....  இதற்கு மேலும் அங்கே நிற்காமல் உதயன் நடக்க துவங்கினான்.

அப்போது தீடீர் சலசலப்பு ஏற்பட்டது.... புழுதி பறக்க குதிரையில் அடிப்பட்டு மயக்க நிலையில் வந்த
வீரன் தங்க வாசலுக்கு சென்று விழுந்தான். சட்டென்று பதற்றம் தொற்றி கொண்டது.... வீரர்கள் குதிரையில் வந்தவனை உள்ளே  அழைத்து சென்றனர். அபாய சங்கு முழங்கப்பட்டு.... வீதிகள் வெறிச்சோடி காவலர்கள் குவிக்கப்பட்டனர். பகைவர்களால் பிரதம அமைச்சர் கவிக்குன்றனார் கடத்தப்பட்டுள்ளார் என்றும் அவருடன் இளவரசியும் சேர்ந்து கடத்தப்பட்டுள்ளார் என்று அரசல் புரசலாக வந்த செய்தியை உதயனால் நம்ப முடியவில்லை.


Wednesday, February 5, 2014

பூவெழினி 4

4. கயல் விழி மான்

அடுத்த அம்பு நாண் ஏற்றப்பட்டு... காற்றை கிழித்துக் கொண்டு கிளம்பியது.... அதன் நுனியில் சாதாரண அம்பு போல் இல்லாமல் சுழலும் சக்கரம் போல் வடிவமைக்கப் பட்டிருந்தது.... அதன் விளிம்புகளில் கூரான முனைகள்.... மின்னல் வேகத்தில் பாயும் வேளையில் அதிவேகமாக சுழலும் அந்த சக்கரம்... பாறைகளில் கூட துளை இட்டு விடும் போல.

கிர்ர்.. என்று இரும்பு உராயும் சத்தத்துடன்  அம்பு நன்னனை நோக்கி விரைந்தது.... இது நேரம் வரையில் சற்று சுதாரித்து இருந்த நன்னன்.... இடப்புறமாக சாய்ந்து.. தரையில் உருண்டு எழுந்தான்... அம்பு அருகில் இருந்த தேக்கு மரத்தில் பாதி துளையிட்டு மேலும் கிழும் ஆடியது. அம்பு வரும் திசையை உணர்ந்த அவன் நொடி தாமதிக்காமல் வட்டமாக ஓட ஆரம்பித்தான்.... அவன் ஓட ஓட... அவன் வேகத்திற்கு இடு கொடுக்க முடியாமல் ஒவ்வொரு அம்பாக  அவனை தழுவாமல் நழுவிச் சென்றது.

அவன் கால்களே கண்கள் உடையது போல் மேடுகள் பள்ளங்கள் புதர்கள் பார்த்து ஓடியதால் நன்னனுக்கு ஓடுவதில் கவனம் செலுத்த தேவையில்லாமல் முழுகவனத்துடன் அவன் கண்கள் கோபக்கனலை கக்கிக்கொண்டு  கூர்மையாக அம்பு வரும் திக்கிலே இருந்தது. சுற்றி சுற்றி வட்டமாக ஓடிக்கொண்டே விட்டத்தை குறைத்ததால் புரவியின் மீது அமர்ந்திருந்த ஒருவனும் அவனை சுற்றி மூவரும் தெரிந்தனர்.

புரவியின்  மீது அமர்ந்திருந்தவன் அம்பு எய்த மற்றவர் அவனை தாக்க வந்தனர். நன்னனின் கோபம் கட்டுக்கடங்காத எல்லையை தாண்டி இருந்தது. நிகரில்லாத வீரனை கோளைத்தனமாக வஞ்சகமாக கொன்றுவிட்டார்கள். இவர்களை கொன்றாலும் அவன் ஆத்திரம் தீராது.
நன்னன் உதடுகள் சங்க பாடல் ஒன்றை கானகம் அதிரும்படி பாடியது... பறவைகள் பறந்தன...  முயல்கள் மிரண்டு மீண்டும் வலைக்குள் பதுங்கின.. சிங்கங்களின் ரோமங்கள் கூட சிலிர்த்தது....!!!
" மைத்துடை யானை கைவைத்து உறங்க...."
எதிரில் வாளை வீசிக்கொண்டு வந்த வீரன் மதங்கொண்ட யானையின் மேல் மோதியவனை போல் நன்னனின் வாளால் தாக்கபட்டு பறந்தான்....
"தின்பினி முரசம் கண் கிழிந்து உருள..."
கண்களின் குறுக்கே வாளால் வெட்டுப்பட்டு வாளுடன் வீழ்ந்தான் ஒருவன்..
"காவல் வெண்குடை கால் பிரிந்து உலற..." மற்றொருவனை வீழ்த்தி நான்கு கால் பாய்ச்சலில் விரைந்த நன்னன் சிறிது சிறிதாக தன்னை நெருங்குவதை உணர்ந்த அம்பு எய்தியவனின் கைகள் உதற ஆரம்பித்தது. குதிரையை திருப்பிக்கொண்டு தப்பிக்க முயற்சிதான்... குதிரை முன்னங்கால்கல்களை தூக்கி புழுதி பறக்க ஓடத்துவங்கியது.
"மேலோர் உலகம் எய்தினன் ஆருயிர் புங்கன்.."
மின்னல் போல பறந்து சென்று தாக்கியது நன்னனின் குறுவாள்.
குதிரை ஆளில்லாமல் தனியாக காட்டுக்குள் பறந்தது.

கோபம் இன்னும் தணியவில்லை நன்னனுக்கு.... வாளால் மரத்தில் ஓங்கி ஓங்கி வெட்டிக்கொண்டிருந்தான்.... வாள் நெளிந்து பயனற்று போனது.. மரம் கண்ணீர் வடித்தது. அப்படியே வேரில் சாய்ந்து தரையை வெறித்தான்.. கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளித்தது. தாய் தந்தை இல்லாமல் தனியாக இருக்கும் என் மீது அந்த அம்பு பாய்ந்திருக்கலாம்... புங்கனுக்காக காத்திருக்கும் அவன் தாய் தந்தையருக்கு என்ன பதில் சொல்வது.. அவன் ஊரே அல்லவா அவனை எதிர்பார்த்து காத்திருக்கிறது அவர்கள் எவ்வளவு ஏமாந்து போவார்கள் அஹா அவன் அத்தை மகளின் வாழ்க்கை...? உரிய நேரத்தில் திருப்பி அனுப்புவதாக சொன்னாரே குரு.. அவர் வாக்கு பொய்த்துவிட்டதே...!!

எப்பொழுது இருந்து நம் மக்கள் இத்தகைய தீ காரியங்களில் இடுபட ஆரம்பித்தார்கள்.. இவர்கள் நம் மக்கள் தானா..? தீடிர் என்று எழுந்த சந்தேகத்தினால் அருகில் சரிந்து கிடந்தவனை உற்று பார்த்தான் நன்னன். அவர்களின் கவச உடை வித்தியாசமாக முழு உடம்பையும் தலையையும் கூட மூடி இருந்தது. சரிந்து கிடந்தவனை மல்லாக்க திருப்பினான்...
 "ஆ.." என்று முனகினான் அடிப்படவன் .
அவன் மார்பு கவசத்தில் புரியாத முத்திரை ஒன்று பொறிக்க பட்டிருந்தது.அவர்கள் எய்த அம்பு ஒன்றை கையில் எடுத்தான்.. அம்பின் முனை சுழன்றது.. இது போன்று இது வரை எங்கும் பார்த்ததில்லையே.

அப்பொழுது அருகில் இருந்த புதர்களில் யாரோ தாக்க வருவது போல் சலசலப்பு ஏற்ப்பட்டது... நன்னன் அடிப்பட்ட வீரனிடம் இருந்து எடுத்து அம்பை கையில் இறுகி பிடித்தான். புதருக்கு உள்ளிருந்து கரிய விழிகளை உருட்டி கொண்டு.. மிரட்சியான பார்வையுடன் மான் ஒன்று துள்ளி குதித்து வந்தது.... ஒரு நிமிடம்..ஆ மான் இல்லை.. பெண்.. பெண் ஒருத்தி துள்ளி குதித்து ஓடி வந்தாள்... நன்னனை பார்த்ததும்... ஓட்டத்தை திடுதிப்பென்று நிறுத்தி.. தடுமாறி விழப்பார்த்து... திசையை மாற்றி மறுப்பக்கம் ஓடினாள்... அந்த திசையில் குதிரையில் ஒருவன் வரவே... மாட்டிக்கொண்டதை எண்ணி அடுத்து என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள்.

குதிரை வீரன் நெருங்கி அவள் கன்னங்களை வருட வந்தவன் சிறிய ஊசி ஒன்றால் அவள் கழுத்தில் குத்தினான்... நொடி பொழுதில் அவள் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து அவள் அவன் கைகளை கீறவும்.. நன்னன் வீசிய அம்பு அவன் முன்கைகளில் சொருகவும் சரியாய் இருந்தது. அலறிக்கொண்டே கீழே விழுந்தான்.

அவள்கயல் போன்ற கண்களை மேலும் பெரிதாக்கி அவனை நீ யார் என்பது போல் பார்த்தாள். நன்னன் பெண்களின் வீரம் பற்றி சிறிது கேள்வி பட்டிருந்தாலும் அதை நம்பாமல் தான் இருந்தான். அவள் கண்களில் மிரட்சியும் இவனை கண்டதும் ஆச்சர்யமும் வெளிப்பாடதே தவிற பயம் வெளிப்படாதது அவனுக்கு ஆச்சர்யமாகவே இருந்தது. பெண்களின் வீரத்தை மட்டுமல்ல மேகமலை காட்டில் சமயல் செய்யும் சில பாட்டிகளை தவிர்த்து பெண்களையே இப்பொழுது தான் பார்கிறான் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

அவள் சாதாரண பெண்ணாக இருக்க முடியாது. அவளை பற்றி இன்னும் அறிய சற்றே அவளை நெருங்கிச் சென்றான். அவள் கத்தியை முன்னாள் நீட்டி இன்னும் முன்னாள் ஒரு அடி எடுத்தால் குத்திவிடுவேன் என்பது போல் பார்த்தள். இது என்ன பெண்கள் கண்ணால் பேசுவார்கள் என்றும் கேள்விபட்டிருக்கிறான்.. அனால் இது வரையில் அவன் பேசியதே இல்லையே.. எல்லாம் புரிகிறதே..?
"பெண்ணே வாய் திறந்து பேசமாட்டாயோ...?"
அவளால் பேச முடியவில்லை... திடீர் என்று கால்கள் தள்ளாட.. நிற்க முடியாமல் கிழே விழுந்தாள்... அவளை தாங்கி பிடித்த நன்னன்
"யார் நீ..?"
"யார் நீ?" என்று கேட்டது அதளபாதாளத்தில் யாரோ குசுகுசுவென்று  ரகசியம் பேசியது போல் விழுந்தது.

"பூவெழினி ..பூவெழினி..!!! " என்று அவள் முனுமுனுத்துக்கொண்டே மயங்கி அவன் மார்பில் சரிந்தாள்.