சிறுகதை

Wednesday, February 5, 2014

பூவெழினி 4

4. கயல் விழி மான்

அடுத்த அம்பு நாண் ஏற்றப்பட்டு... காற்றை கிழித்துக் கொண்டு கிளம்பியது.... அதன் நுனியில் சாதாரண அம்பு போல் இல்லாமல் சுழலும் சக்கரம் போல் வடிவமைக்கப் பட்டிருந்தது.... அதன் விளிம்புகளில் கூரான முனைகள்.... மின்னல் வேகத்தில் பாயும் வேளையில் அதிவேகமாக சுழலும் அந்த சக்கரம்... பாறைகளில் கூட துளை இட்டு விடும் போல.

கிர்ர்.. என்று இரும்பு உராயும் சத்தத்துடன்  அம்பு நன்னனை நோக்கி விரைந்தது.... இது நேரம் வரையில் சற்று சுதாரித்து இருந்த நன்னன்.... இடப்புறமாக சாய்ந்து.. தரையில் உருண்டு எழுந்தான்... அம்பு அருகில் இருந்த தேக்கு மரத்தில் பாதி துளையிட்டு மேலும் கிழும் ஆடியது. அம்பு வரும் திசையை உணர்ந்த அவன் நொடி தாமதிக்காமல் வட்டமாக ஓட ஆரம்பித்தான்.... அவன் ஓட ஓட... அவன் வேகத்திற்கு இடு கொடுக்க முடியாமல் ஒவ்வொரு அம்பாக  அவனை தழுவாமல் நழுவிச் சென்றது.

அவன் கால்களே கண்கள் உடையது போல் மேடுகள் பள்ளங்கள் புதர்கள் பார்த்து ஓடியதால் நன்னனுக்கு ஓடுவதில் கவனம் செலுத்த தேவையில்லாமல் முழுகவனத்துடன் அவன் கண்கள் கோபக்கனலை கக்கிக்கொண்டு  கூர்மையாக அம்பு வரும் திக்கிலே இருந்தது. சுற்றி சுற்றி வட்டமாக ஓடிக்கொண்டே விட்டத்தை குறைத்ததால் புரவியின் மீது அமர்ந்திருந்த ஒருவனும் அவனை சுற்றி மூவரும் தெரிந்தனர்.

புரவியின்  மீது அமர்ந்திருந்தவன் அம்பு எய்த மற்றவர் அவனை தாக்க வந்தனர். நன்னனின் கோபம் கட்டுக்கடங்காத எல்லையை தாண்டி இருந்தது. நிகரில்லாத வீரனை கோளைத்தனமாக வஞ்சகமாக கொன்றுவிட்டார்கள். இவர்களை கொன்றாலும் அவன் ஆத்திரம் தீராது.
நன்னன் உதடுகள் சங்க பாடல் ஒன்றை கானகம் அதிரும்படி பாடியது... பறவைகள் பறந்தன...  முயல்கள் மிரண்டு மீண்டும் வலைக்குள் பதுங்கின.. சிங்கங்களின் ரோமங்கள் கூட சிலிர்த்தது....!!!
" மைத்துடை யானை கைவைத்து உறங்க...."
எதிரில் வாளை வீசிக்கொண்டு வந்த வீரன் மதங்கொண்ட யானையின் மேல் மோதியவனை போல் நன்னனின் வாளால் தாக்கபட்டு பறந்தான்....
"தின்பினி முரசம் கண் கிழிந்து உருள..."
கண்களின் குறுக்கே வாளால் வெட்டுப்பட்டு வாளுடன் வீழ்ந்தான் ஒருவன்..
"காவல் வெண்குடை கால் பிரிந்து உலற..." மற்றொருவனை வீழ்த்தி நான்கு கால் பாய்ச்சலில் விரைந்த நன்னன் சிறிது சிறிதாக தன்னை நெருங்குவதை உணர்ந்த அம்பு எய்தியவனின் கைகள் உதற ஆரம்பித்தது. குதிரையை திருப்பிக்கொண்டு தப்பிக்க முயற்சிதான்... குதிரை முன்னங்கால்கல்களை தூக்கி புழுதி பறக்க ஓடத்துவங்கியது.
"மேலோர் உலகம் எய்தினன் ஆருயிர் புங்கன்.."
மின்னல் போல பறந்து சென்று தாக்கியது நன்னனின் குறுவாள்.
குதிரை ஆளில்லாமல் தனியாக காட்டுக்குள் பறந்தது.

கோபம் இன்னும் தணியவில்லை நன்னனுக்கு.... வாளால் மரத்தில் ஓங்கி ஓங்கி வெட்டிக்கொண்டிருந்தான்.... வாள் நெளிந்து பயனற்று போனது.. மரம் கண்ணீர் வடித்தது. அப்படியே வேரில் சாய்ந்து தரையை வெறித்தான்.. கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளித்தது. தாய் தந்தை இல்லாமல் தனியாக இருக்கும் என் மீது அந்த அம்பு பாய்ந்திருக்கலாம்... புங்கனுக்காக காத்திருக்கும் அவன் தாய் தந்தையருக்கு என்ன பதில் சொல்வது.. அவன் ஊரே அல்லவா அவனை எதிர்பார்த்து காத்திருக்கிறது அவர்கள் எவ்வளவு ஏமாந்து போவார்கள் அஹா அவன் அத்தை மகளின் வாழ்க்கை...? உரிய நேரத்தில் திருப்பி அனுப்புவதாக சொன்னாரே குரு.. அவர் வாக்கு பொய்த்துவிட்டதே...!!

எப்பொழுது இருந்து நம் மக்கள் இத்தகைய தீ காரியங்களில் இடுபட ஆரம்பித்தார்கள்.. இவர்கள் நம் மக்கள் தானா..? தீடிர் என்று எழுந்த சந்தேகத்தினால் அருகில் சரிந்து கிடந்தவனை உற்று பார்த்தான் நன்னன். அவர்களின் கவச உடை வித்தியாசமாக முழு உடம்பையும் தலையையும் கூட மூடி இருந்தது. சரிந்து கிடந்தவனை மல்லாக்க திருப்பினான்...
 "ஆ.." என்று முனகினான் அடிப்படவன் .
அவன் மார்பு கவசத்தில் புரியாத முத்திரை ஒன்று பொறிக்க பட்டிருந்தது.அவர்கள் எய்த அம்பு ஒன்றை கையில் எடுத்தான்.. அம்பின் முனை சுழன்றது.. இது போன்று இது வரை எங்கும் பார்த்ததில்லையே.

அப்பொழுது அருகில் இருந்த புதர்களில் யாரோ தாக்க வருவது போல் சலசலப்பு ஏற்ப்பட்டது... நன்னன் அடிப்பட்ட வீரனிடம் இருந்து எடுத்து அம்பை கையில் இறுகி பிடித்தான். புதருக்கு உள்ளிருந்து கரிய விழிகளை உருட்டி கொண்டு.. மிரட்சியான பார்வையுடன் மான் ஒன்று துள்ளி குதித்து வந்தது.... ஒரு நிமிடம்..ஆ மான் இல்லை.. பெண்.. பெண் ஒருத்தி துள்ளி குதித்து ஓடி வந்தாள்... நன்னனை பார்த்ததும்... ஓட்டத்தை திடுதிப்பென்று நிறுத்தி.. தடுமாறி விழப்பார்த்து... திசையை மாற்றி மறுப்பக்கம் ஓடினாள்... அந்த திசையில் குதிரையில் ஒருவன் வரவே... மாட்டிக்கொண்டதை எண்ணி அடுத்து என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள்.

குதிரை வீரன் நெருங்கி அவள் கன்னங்களை வருட வந்தவன் சிறிய ஊசி ஒன்றால் அவள் கழுத்தில் குத்தினான்... நொடி பொழுதில் அவள் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து அவள் அவன் கைகளை கீறவும்.. நன்னன் வீசிய அம்பு அவன் முன்கைகளில் சொருகவும் சரியாய் இருந்தது. அலறிக்கொண்டே கீழே விழுந்தான்.

அவள்கயல் போன்ற கண்களை மேலும் பெரிதாக்கி அவனை நீ யார் என்பது போல் பார்த்தாள். நன்னன் பெண்களின் வீரம் பற்றி சிறிது கேள்வி பட்டிருந்தாலும் அதை நம்பாமல் தான் இருந்தான். அவள் கண்களில் மிரட்சியும் இவனை கண்டதும் ஆச்சர்யமும் வெளிப்பாடதே தவிற பயம் வெளிப்படாதது அவனுக்கு ஆச்சர்யமாகவே இருந்தது. பெண்களின் வீரத்தை மட்டுமல்ல மேகமலை காட்டில் சமயல் செய்யும் சில பாட்டிகளை தவிர்த்து பெண்களையே இப்பொழுது தான் பார்கிறான் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

அவள் சாதாரண பெண்ணாக இருக்க முடியாது. அவளை பற்றி இன்னும் அறிய சற்றே அவளை நெருங்கிச் சென்றான். அவள் கத்தியை முன்னாள் நீட்டி இன்னும் முன்னாள் ஒரு அடி எடுத்தால் குத்திவிடுவேன் என்பது போல் பார்த்தள். இது என்ன பெண்கள் கண்ணால் பேசுவார்கள் என்றும் கேள்விபட்டிருக்கிறான்.. அனால் இது வரையில் அவன் பேசியதே இல்லையே.. எல்லாம் புரிகிறதே..?
"பெண்ணே வாய் திறந்து பேசமாட்டாயோ...?"
அவளால் பேச முடியவில்லை... திடீர் என்று கால்கள் தள்ளாட.. நிற்க முடியாமல் கிழே விழுந்தாள்... அவளை தாங்கி பிடித்த நன்னன்
"யார் நீ..?"
"யார் நீ?" என்று கேட்டது அதளபாதாளத்தில் யாரோ குசுகுசுவென்று  ரகசியம் பேசியது போல் விழுந்தது.

"பூவெழினி ..பூவெழினி..!!! " என்று அவள் முனுமுனுத்துக்கொண்டே மயங்கி அவன் மார்பில் சரிந்தாள்.

No comments: