சிறுகதை

Wednesday, April 16, 2014

காட்சி பிழை 5

இரவு  எட்டு மணி, மாஜிஸ்ட்ரேட் வீட்டுக் கதவை தட்டினேன்.. அவர் மகன் கதவை திறந்தான்..."தம்பி அய்யா இருக்காரா... ரீமாண்டு வந்துருக்குன்னு சொல்லு..."

 உள்ளே சென்று "அஞ்சு நிமிஷம்..." என்றான்

"என்னப்பா இன்னும் பாம்பு பிடிச்சுகிட்டு தான் இருக்கியா...."

சிரித்தான்.." உன்  பேரு என்ன.. அன்னிக்கு கேட்க மறந்துட்டேன்...."

"ஹரி... ஹரி பிரஷாந்த்.."

"ஆமா.. நல்ல பாம்பு கூட பிடிப்பியா..?"

அவன் பதில் சொல்வதற்குள்  மாஜிஸ்ட்ரேட் வந்து குறுக்கிட்டார்..

"என்ன SI.. ராத்திரி நேரத்துல்ல நல்லது அது இதுன்னுகிட்டு...." அவரை பார்த்தவுடன் உடம்பை விரைப்பாக்காமல் casual salute ஒன்றை வைத்தேன்

"என்ன கேசு..."

"டொமெஸ்டிக் வையலான்ஸ்...."

"ஹ்ம்ம் கூப்டுங்க...."

ஜீபுக்குள் இருந்து  அந்த மாடை கான்ஸ்டபுள் கூட்டி வந்தார்....
ஒரு கும்புடு போட்டு விட்டு ஏதோ திருவிழாவிற்கு வந்த ஜமிந்தார் போல நின்று கொண்டிருந்தான். ரீமாண்டில்  கேட்கும் default கேள்விகளை மாஜிஸ்ட்ரேட் கேட்டார். அவரது மகனும் இன்னொரு பொண்ணும் (அவன் தங்கை போல..) ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தார்கள்.

"பேரு என்ன..."

"குமாரு சார்....."

"என்னையா கெடா குமாருன்னு போட்டு இருக்கு..."

"சாதா குமாரு தான்யா....." என்று மண்டையை சொரிந்தான்

"வயசு..."

"35"

"போலீஸ் அடிச்சாங்களா....?"

என்னை பார்த்தான்....

"அவர ஏன் பாக்குறீங்க.. தைரியமா உண்மைய சொல்லுங்க..."

"இல்லயா...."

"என்ன குத்தம் பண்ண...."

இவ்வளோ நேரம் கம்பீரமா தூண் மாறி நின்றவன்.. தீடீர் என்று தரையில் மண்டியிட்டு அழ ஆரம்பித்து விட்டான்.

"சத்தியமா  நான் ஒன்னும் பன்னலயா..... ஜெயில்ல இருந்து திருந்தி நேத்து தான் ஊட்டுக்கு போனேன்.... பொண்டாட்டிய கறி கொழம்பு வைடினா... கோழி கொழம்பு வச்சுட்டா.... ஏண்டி கறிக்கும்  கோழிக்குமா உனக்கு வித்தியாசம் தெரியாதுன்னு கேட்டதுக்கு.. எல்லாரும் சேந்து குடும்ப வன்முறைங்றாங்க அய்யா....."
 அப்படியே தவழ்ந்து அவர் காலை தொட போனான்... லத்தியால் ஒரு அடி போட்டு "எழுந்து நில்லுயா..எந்திரி" என்றேன்

"யாருக்கோ நான் வெளில இருக்காது பிடிக்கல.... இதுல போலீசும்  கூட்டு..." என்றான்  

அந்த சமயம் பார்த்து... பக்கவாட்டில் அம்மியில் சட்னி அரைத்துக்கொண்டிருந்த மாஜிஸ்ட்ரேட்டின் மனைவி.... NLC-யில் ஊதும் சங்கை போல அலறினார்.... "பாம்பு.. பாம்பு....."

கோர்ட் டுட்டியில் இருந்த மகாலிங்கம் எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை...
"எங்க.. எங்க.." என்று ஓடி வந்தார்.

பாம்பு சந்தர்பம் தெரியாமல் கைலியுடன் அமர்ந்திருந்த மாஜிஸ்ட்ரேட்  கால்களுக்கு பின் சென்று மறைய.... பட்டனை தட்டி விட்ட பொம்மை போல ஜங் ஜங் என்று குதித்துக்கொண்டிருந்தார்.  அவர் பையன்  "யாரும் பதட்ட படாம..அமைதியா இருங்க.... நா அத பிடிக்கிறேன்.." என்று கூறி அவன் அம்மாவிடம் அடியை வாங்கி கட்டிக்கொண்டான்.

மகாலிங்கம் ஒரு பெரிய குச்சி ஒன்றை கையில் எடுத்து சேருக்கு பின்னல் தெரிந்த வாலில் ஓங்கி ஒரு அடி போட்டார்..... உள்ளே இருந்த மாஜிஸ்ட்ரேட்டின்  பெண் வெறி பிடித்தவள் போல வெளியே ஓடிவந்து...
"யாரு.. யாரு மேல கைய வச்ச... இங்க நான் எத்தன வருஷாமா இருக்கேன் தெரியுமா...... உன்ன கொல்லமா விடமட்டேன்... விடமட்டேன்..." என்று சாமி வந்தவள் போல்அவர் கழுத்தை நெரித்தாள்.

நான் ஓடி மகாலிங்கத்தை அவளிடம் இருந்து விடுவித்து..... அவளை பிடித்தேன்..மயங்கி விழுந்து விட்டாள்.

பாம்பு போன சுவடே தெரியவில்லை...மாயமாய் மறைந்து விட்டது....

"என் பொண்ணுக்கு இதுக்கு முன்னால இது மாதிரி வந்ததே இல்ல சார்.." என்று மாஜிஸ்ட்ரேட்  புலம்பினார். அவர் மனைவி அழுது கொண்டிருந்தார்.

 இப்பொழுது கான்ஸ்டபுள்  turn  "சார்.... " என்று  பேய் பிடித்தது போல் கத்தினார்.

கெடா குமாரு.. அவர் கைகளில் இருந்து நழுவி தெரிக்கெட்டு ஓடிக்கொண்டிருந்தான். நான் கான்ஸ்டபுள் , மகாலிங்கம் மூவரும் அவனை துரத்திக்கொண்டு ஓடினோம். பின் புறம் இருந்த காட்டு பக்கமாக ஓடின குமார்.... அங்கே இருந்த அந்த பாழடைந்த பங்களாவிற்குள் புகுந்துவிட்டான்.

நாங்கள் மூவரும் வாசலில் ப்ரேக் போட்டு நின்றோம்.

"யோவ்.. இப்ப என்னயா பண்றது..." பதட்டமாக கேட்டேன்

"சார்.. வெளில வர வேற வழியே இல்ல... இப்படி தான் வரணும்... அதுவும் இந்த பங்களா.. நாம உள்ளே போகணும்ன்னு இல்ல.. அதுவே அஞ்சு நிமிசத்துல வெளில துரத்திடும் பாருங்க..." என்றார் மகாலிங்கம்

"சார்.. தப்பிசுட்டானா பெரிய கேஸ் ஆயிடும்.. பேப்பர்ல வந்துடும்.." என்றார் கான்ஸ்டபுள்

"அய்யயோ திரும்பியும் பேப்பர்லயா.... மகாலிங்கம் நீங்க முன்ன பின்ன இதுக்குள்ள போய் இருக்கீங்களா..."

"உடஞ்ச சேறு.. பழைய பீரோ.. போடுறதுக்கு அப்பப்போ வருவேன்.."

"அப்பா வாங்க என்கூட.... கான்ஸ்டபுள்  நீங்க இங்கயே  பண்ணுங்க...." என்று கூறி மகாலிங்கத்தை வலுக்கட்டாயமாக கொட்டி சென்றேன்.

கும்மிருட்டு... கூட மகாலிங்கம் வருவதே அவர் பேசுவதன் மூலம் தான் கண்டு பிடிக்க முடிந்தது. அவர் கையை இருக்க பற்றிக்கொண்டு உள்ளே சென்றேன்.

ஜல்...ஜல்... சத்தம் பின்னால் கேட்டது, யாரோ நடப்பது போல் நிழல் ஆடியது.

கைகள்  நடுங்க ஆரம்பித்தது.... "சார் போய்டுவோம் சார்.." என்றார் மகாலிங்கம். குடலை பிரட்டும் நெடியுடன் வௌவால்கள் முகத்தை பிராண்டி பறந்தன.

பின்னால் யாரோ காலில் கொலுசு போட்டு வேகமா ஓடுவது போல் இருந்தது... இருவரும் திரும்பினோம்.... இருட்டில் சரியாக தெளிவாக இல்லை... அனால் ஒரு பெண் சத்தியமாக ஒரு பெண்.... எங்கள் இருவருக்கும் நேர் எதிரே...அடர்ந்த  பெருமூச்சு விட்டுக்கொண்டே எங்களை நோக்கி ஓடி வந்தாள்.

"ஹ..ஹ...ஹ...." என்று சத்தம் வேறு. இதயம் பளுக் என்று வாய் வரை வந்து விட்டது.

மகாலிங்கம் என் கையை உதறி விட்டு ஓடி விட்டார்....விட்டான் பாவி.

நான் தடுமாறி உடைந்த பழைய சேரை மீண்டும் உடைத்தேன். தூசி ஏறி இருமல் வந்து விட்டது. கண்கள் எல்லாம் கலங்கி போய்..... கும்மிருட்டு.. மேலும் இருண்டு போனது.

அவள் எங்கே.... மகாலிங்கம் எங்கே ஒன்றும் தெரியவில்லை.

"மகாலிங்கம்..யோவ்...என்ன எப்பிடியாவது வெளில கூட்டி போயா... என்ன கேட்டாலும் தரேன்யா...." என்று கெஞ்சி பார்த்தேன்.

பதிலுக்கு "ஹ ஹ....ஹ.." என்று சத்தம் தான் வந்தது.

அப்பொழுது வெளியில் constable loud speaker-இல் கத்தினார்....

"கெடா குமாரு வெளில வந்து பத்து நிமிஷம் ஆச்சு சார்..... சீக்ரம் வெளில வந்துடுங்க....!!!"



No comments: