சிறுகதை

Friday, March 28, 2014

காட்சி பிழை 2

கோர்ட் கான்ஸ்டபள் முருகானந்தமும் நானும் fastrack குவார்டர்ஸுக்கு  நடந்து சென்று கொண்டிருந்தோம்.

"மேஜிஸ்ட்ரேட், முன்சிப், சப்-ஜட்ஜ், பாஸ்ட் ட்ராக்ன்னு மொத்தம் நாலுகோர்ட் இருக்கு சார்.... முன்சிப் கோர்ட் பில்டிங் அந்த காலத்துல ப்ரிடிஷ் கட்டினது.... மீதி மூணு கோர்ட்டும் புது பில்டிங்ல ஓடுது.... நாலு கோர்டுக்கும் குவார்டர்ஸ் பின் பக்கம் இருக்கு.. அதுக்கும் பின்னாடி பழைய பிரிட்டிஷ் காலத்து இடிஞ்ச பங்களா...."

"பங்களாவா இப்ப அங்க யாரு இருக்கா..."

"யாரும் இல்ல சார்..."

"அங்கயும் வாக்கிங் போகுதா அந்த பேயி.."

"அது மட்டும் இல்ல சார்.... சுத்தி 4 ஏக்கர் புதர் மண்டி காடு.. பாம்பு.. எக்கச்சக்கமா பாம்பு...."

"ஓஹோ..." அவர் சொல்வதை நான் சரியாக காதில் வாங்கி கொள்ளவில்லை... காரணம் அக்ஷிதா (aksithaa)  "சீக்ரம் வா.. சீக்ரம் வா" ன்னு அவள் அனுப்பிய எஸ்எம்எசில் இன்பாக்ஸ் நிரம்பி வழிந்தது... ஏகப்பட்ட மிஸ்டு கால்... அதற்குள் மணி ஆறு ஆகிவிட்டது. முன்சிப் கோர்ட்டை தாண்டி வந்துவிட்ட எங்களுக்கு அந்த இடம் நள்ளிரவு போல  இருட்டி விட்டிருந்தது வியப்பாக இருந்தது. பெரிய பெரிய தூங்கு மூஞ்சி மரங்கள்.... சில குட்டையான அரச மரங்கள்.. பெயர் தெரியாத இன்னும் சில மரங்கள் மேலே பரண் போலே வெளிச்சம் புகாத அளவுக்கு மூடி இருந்தது. quarters அருகில் சென்றதும்.. இது வரை நான் அறிந்திராத நறுமணம்.... மயக்கமே வந்து விட்டது எனக்கு.....  

"முருகானந்தம் உனக்கு ஏதும் வாசனை வருதா...."

"மகிழ மரம் சார்.. " என்று நாலு அடி  தூரத்தில் இருந்த மரம் ஒன்றை காமித்தார் 
அதை சுற்றி சட்டை பட்டன் சைசுக்கு சின்ன சின்னதாய் பூக்கள் கிடந்தன. 

ஒன்றை எடுத்து கையில் கொடுத்தார்.... துபாய் செண்டை விட காரமாக இருந்தது....

"இந்தவாசனைக்கு.. ஏகப்பட்ட பாம்புவந்து.. மரத்தடியில மயங்கி கெடக்கும் சார்..." அவர் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே ஏதே ஒன்று வேகமா ஊர்ந்து செல்வதை போன்று இருந்தது..... 

"அங்கிருந்து சீக்ரம் வா..." என்றாள் அக்ஷிதா

பாஸ்ட் ட்ரக் குவார்டர்ஸ் 2000-ல் கட்டப்பட்டது.. நன்றாக உதிர்ந்து பெயர்ந்து தமிழ்நாடு PWD-ன் கைவண்ணத்தை எடுத்துக்காட்டியது.. வீட்டிற்குள் லா புக்ஸ் இருக்க வேண்டிய ஷெல்பில் பல மூல்லிகை வேர்களை அடுக்ப்பட்டிருந்தன.... வீட்டில் இருக்கும் அத்தனை ஆணிகளிலும் நாட்டில் உள்ள அணைத்து சாமி படமும் மாட்டப் பட்டிருந்தது. முன் கதவின் மேல் அந்த மந்திரித்த கயிறு கட்டப்பட்டிருந்தது. முன்னால் சின்ன போர்டிகோ... நுழைந்தவுடன் ஆபீஸ் ரூம்.. பின்னால் ஹால்.. ரெண்டு பெட்ரூம்... கிட்சென்... அதை ஒட்டி கொள்ளை புற கதவு.... கதவை திறந்தவுடன் மீண்டு மகிழ பூவின் சுகந்தம். 

"முருகானந்தம்... பின்னாடியும் மகிழ மரம் இருக்கா.. "

ஆமாம் என்று அவர் சுட்டி காட்டிய திசையில் மிக பெரிய மகிழ மரம் ஒன்று இருந்தது.. அதன் மடியில் அந்த சமாதி. மகிழம் பூவின் சுகந்தத்தின் கிரகம்மா.. இல்லை காலையில் மகாலிங்கம் விட்ட சவாலா எது அப்படி செய்தது என்று தெரியவில்லை முருகானந்தம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நடக்க முடியாத அளவுக்கு மண்டியிருந்த புதர்களை தாண்டி அந்த சமாதி அருகே சென்று விட்டேன். 

சுற்றி சின்னதாய் சுற்று சுவர்.. நடுவில் சற்றே இடிந்து விரிசல்களில் முளைத்து இருந்த அரச மரங்களை தாங்கி கொண்டு இருந்தது அந்த சமாதி . அதன் முன்னே கல்வெட்டு போன்று ஒன்று இருந்தது. குச்சி ஒன்றை கையில் எடுத்து அதன் மேல் படர்ந்திருந்த காட்டு கொடி ஒன்றை விளக்கி டார்ச் அடித்து படித்தேன். சரியாக படிக்க முடியவில்லை... ஒரு சூ காலை காம்பவுண்டுக்குள் வைத்து... சற்று குனிந்து அரைகுறையாக அமர்ந்து படித்தேன்...

"Mary Adella Margret , Daughter of Justice Gregory Singlet, Died because of disease at the age of 19 years 6 months 23 days on September 5, 1893...."

மீண்டும் sms "reply ப்ளீஸ்... worried..:-("

"சார்..."  என்று முருகானந்தம் அலறினார் 

ஏற்கனவே சிறிது பேலன்சில் அமர்ந்திருந்த நான் சற்று தடுமாறினேன்..  மகிழ மரத்தின் தாழ்வான கிளையில் இருந்து தொங்கி கொண்டிருந்த பாம்பு என் முகத்திற்கு நேர் எதிரே நாக்கை நீட்டி சீறிக் கொண்டிருந்தது.


No comments: