சிறுகதை

Wednesday, March 20, 2013

நீ இல்லாத நாட்களை நான் வாழ்வதில்லை....!!!

தடதடவென்று வந்து நின்றது மின்சார ரயில்... அவசரமாக ஏறி இறங்கும் மக்கள்.....எதிரொலியாய் எழுந்த இரைச்சல் ரயில் கிளம்பிய தடதடபுடன் கரைய மீண்டும் அமைதி... சிலர் மட்டும் மெதுவாய் நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.... போனில் சிலர் உரையாடி கொண்டிருந்தார்கள்.... சப்வேயில் போகும் போது சில பள்ளி மாணவர்கள் கத்தியது அந்த மாலை பொழுதில் ஏதுவாக அமைந்திருக்கவில்லை.. இருள் கவிய தொடங்கிய நேரம்.... ஸ்டேஷன் மீண்டும் வெறிச்சோட ஒருவன் மட்டும் அமர்திருந்தான்.... தண்டவாளத்தின் எதிர்பக்கம் திரும்பி.. மேலிருந்த ஆஸ்பெஸ்டஸ் கூரையை
தாங்கி நின்றதூணை வெறிச்சென்று பார்த்து கொண்டே.... பக்கத்தில் சென்றால் தூரத்தில் இருந்த சிகப்பு விளக்கை அவனது கண்ணீர் பிரதிபலித்து...கன்னத்தின் வழியே உருண்டு தாடியில் ஐக்கியமானது....
தூணில் ஹார்டின் போட்டு..... உள்ளே உமேஷ்..மேகனா ...!!!

"உமேஷ் ஏன் இப்படி பப்ளிக் பிளேஸ்யெல்லாம் எழுதுற...?"  என்று அவள் கேட்டது கிணற்றிற்குள் இருந்து கேட்டது அவனுக்கு....
"இது என்ன  பப்ளிக் பிளேஸா உனக்கு... இது தான் நமக்கு காதல் கற்று தந்த இடம்.. அலும்னி பேரு எழுதலனா எப்படி.... அங்க பாரு சாய் நிஷா ... நமக்கு முன்னாடி பாஸ் அவுட் போல....."
அவள் சிரித்தது மிக அருகில் கேட்டது....
"அப்படி எல்லாரும் இங்க பேரு எழுதிருந்த ஸ்டேஷனே பத்திருக்காது... அதுவும் நம்மள மாறி வாரா வாரம் இப்படி தவறாம வந்தா ஸ்டேஷன் மெரினா பீச் மாறி எப்போதும் ஜெ ஜெ னு இருந்திருக்கும்...."

கொலுசு சத்தம் கேட்டு பின்னால் திரும்பி பார்த்தான்... அவனை பார்த்து சிரித்து கொண்டே அவள் வந்தாள்... கல்யாணத்தில் போட்டிருந்த அதே புடவை... தாலி கட்டியவுடன் ஒரு சிரிப்பு சிரித்து ஓடி வந்து கட்டியானைத்தாலே அதுபோல ... ஓடினான் கட்டியணைக்கும் பொழுது அவள் இல்லாமல் கிழே விழுந்தான்... சில்லரைகள் சிதறியது.... அவன் கையிலிருந்த ரோஜாக்களுடன்....!!!

"என்னப்பா உனக்கும் கண் தெரியாதா....எத்தன தடவ விழுவ.....?!"

அழுக்கு சட்டை அணிந்து... கலைந்த முடியுடன்..... கண்களில் கண்ணாடி போடாத கண்தெரியாதவர்.... 
"எங்க போகணும்.. சப்வே கிராஸ் பண்ணனும்னா.. நா வேணா ஹெல்ப் பண்ணறேன்......"
அவன் பதில் சொல்லவில்லை... அமைதியாய் போய் அதே  இடத்தில் அமர்ந்தான்....இருட்டி இருந்தது.......அவர்கள் காதல் சற்று மங்கலாய் தெரிந்தது....!!!

பக்கத்திலிருந்த கல்லை எடுத்து எழுதினான் ....

"நீ இல்லாத நாட்களை நான் வாழ்வதில்லை....!!!"

மறுபடியும் தடதடப்பு..... இரைச்சல்... அமைதி....!!!
உலகம் நிற்காமல்... அவசர அவசரமாய் இயங்கி கொண்டிருந்தது......!!!
அவன் உலகம் வாழ்வதில்லை என்னும் வார்த்தைக்கு அடுத்து உள்ள புள்ளியில் நின்றுவிட்டது....!!!

பாட்மிட்டன் ஆடி முடித்து ஓரமாக அமர்ந்த சமயம்....அவள் அவனுக்காக காத்திருந்தாள்....என்ன என்பது போல் பார்த்தான்....
அவளது விழிகளில் நீர்....
"அப்பாவை பார்த்தேன்....."
அவன் தோளில் சாய்ந்து அழுதாள்.......!!!!
என்ன நடந்திருக்கும் என்பது அவனுக்கு தெரியும்... அவளது முகத்தை தூக்கி.... "இதுக்கு ஒரு முடிவு கட்டி ஆகனும் மேக்.."
"ஹ்ம்ம்ம்ம்....." என்று குழந்தையாய் சொன்னாள் 
"வா சீக்ரம் குழந்த பெத்துப்போம்...."
"ச்சீ... உன்னைய...அடி வாங்கபோற பாரு.....இந்தா..இந்தா.. " மீண்டும் மீண்டும் வலிக்காத போல்....   மீண்டும் மீண்டும் அடித்தாள்....!!!

ஓவென்று கதறி அழஆரம்பித்தான்.... அவன் அமர்திருந்த பெஞ்சில் இருந்து கிழே சரிந்து விழுந்து....அழுதான்....
"ஏ.. என்னப்பா ஆச்சு சாமீ.... யாருப்பா அது....?!"

தடவி தடவி தரையில் அமர்திருந்த அந்த கிழவர் எழுந்தார்.....
சத்தம் வந்த திக்கை நோக்கி நடக்க.. அவன் கிழே தட்டுப்பட்டான்......!!!
அவனை எடுத்து..மடியில் வைத்து.... அந்த அழுக்கான கரங்களில் வாயில் ஒழுகிய எச்சிலை துடைத்தார்.....!!! ட்ரைன்னுக்கு காத்திருந்த சிலர் வேடிக்கை பார்த்தனர்...!!!

அவன் கதறி அழுதுகொண்டே இருந்தான்.....அந்த சத்தம் மீண்டும் வந்த ட்ரைன்  ... மனித இரைச்சலில் காணாமற்போய்... மீண்டும் அவனது அழுதழுது களைத்த தேம்பலாய் வெளிப்பட்டது.....!!!

கல்லூரி மாணவர்கள் சிலர் மிக சத்தமாய் கத்திகொண்டே இருபதையெல்லம் உதைத்து கொண்டு ஓடினார்கள்....சப்வேயில் அவர்களிட்ட சத்தம் நாராசமாய் எதிரோளித்தது...!!!

அவளுடன் வேலை பார்க்கும் கண்ணன் கால் செய்தான்...
"சீக்கரம் வாங்க உமேஷ்.... மேக்னாவுக்கு சின்ன அக்சிடெண்ட்...."
அவள் மேல் துரும்பு விழுந்தாலே தாங்காது அவனுக்கு....
பதறி அடித்து ஓடினான்.... 
வாசலில் அவன் நண்பர்கள் சோக முகத்துடன் நிற்க....இத்தனை நாள் வராத அவளது பெற்றோரும் வந்திருந்தனர்....
"என்னாச்சு மாமா ........என்னாச்சு... ஐயோ என்னாச்சு...யாராவது சொல்லுங்க....."
"யாரு இவருதா ஹஸ்பண்டா....?"
"இதுல ஒரு கையெழுத்து போடுங்க...."
"என்னாச்சு டாக்டர்....."
அவளது நண்பர்கள் சொல்ல தயங்கியதை....அவளது அப்பா கண்ணீராய் சொன்னதை.... வேலை நடிப்பு சோகத்துடன் சொன்னார் டாக்டர்...
"ஷி இஸ் நோ மோர்...."
உலகம் சுழன்றது.... இருள் கவ்வியது... அப்படியே சரிந்தான் உமேஷ்.....!!!


முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது..... விழித்து பார்த்தால் தாத்தா....
எழுந்து அமர்ந்தான்...... 
"என்னப்பா.. என்ன ஆச்சு உனக்கு.... லவ் புட்டுகிச்சா...."
"அவளுக்கு ஒன்னும் ஆகல....அவளுக்கு ஒன்னும் ஆகல....அவளுக்கு ஒன்னும் ஆகல...." ஈன குரலில் மீண்டும் மீண்டும் சொன்னான்....
அவனால் உட்கார முடியவில்லை அவரது மடியில் மீண்டும் சாய்ந்தான்... கண்களில் நீர் பெருக்கெடுத்து.... முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.... அவரும் எந்த கேள்வியும் பிறகு கேட்கவில்லை.. "ஒண்ணுமில்ல..ஒண்ணுமில்ல...எல்ல சரியாயிடும்....ஒண்ணுமில்ல ராசா...."
அவனது.. தலையை தடவி கொடுத்தார்.....!!!

அவனை எழுந்து தூணில் சார்த்தி அமரவைத்தார்... அவரது பாட்டிலை திறந்து... வாயில் தண்ணீர் ஊற்றினார்.....!!!
"உனக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல..... ஆனா என்ன ஆனாலும் அது மறஞ்சு புடும் .. கவலைபடதா..... சின்ன வயசு புள்ள மாறி தெரியுற.... இந்த வயசுல அப்படி என்ன கவல உனக்கு..... பேசுப்பா ....."
அவன் அவரையே வெறிச்சென்று பார்த்தான்......
"நாம நமக்கு கிடக்கிறது நேரந்தரம்னு நெஞ்சிடுறோம்..... ஏதுவ இருந்தாலும் நிரந்தரம் இல்ல.... ஏன் இந்த உலகமே நிரந்தரம் இல்லப்பா...... எனக்கு 20 வயசு வரைக்கும் கண்ணு தெரிஞ்சுச்சு..... திடிர்னு ஒன்னும் இல்ல.. என்னமோ கண்ணுல பட்டுச்சுனாங்க.. ஒரு வாரத்துல சரியாயிடும்னாங்க....30 வருஷம் ஆச்சு.... இன்னும் சரியால.. அது வரைக்கும் நா வாழ்ந்து என்ன பண்ணேன்னு...எனக்கே தெரியாது.... ஆனா அதுக்கப்புறம் உலகத்த புரிஞ்சுகிட்டேன்... இப்பயும் அந்த வலியோட தா வாழறேன்.... ஆனா உலகத்த புரிஞ்சுகிட்டு வாழறேன்..... "

"ஏ உலகமே அவ தா தாத்தா.. நேத்து வரைக்கும் என்கூட தான்... உயிரோட.. உயிரா... எ வாழ்கையில உறைஞ்சு போய் இருந்தா...அந்த கடவுள் @#$%@@$ பய.... எ வாழ்கையே அர்த்தமில்லாம ஆக்கிட்டான்....."

அவர் சிரித்தார்...
"இன்னுமா புரியல உனக்கு.... வாழ்கைங்கரதே அர்த்தமில்லாது தான்.... நாமளா அதுல ஏதாவது அர்தத்த திணிச்சுட்டு நம்மள நாமளே ஏமாதிகிறோம் .. ஒரு நாள் அது இல்லன்னு தெரிஞ்சோன... அதையும் ஒதுக்காம.. மறுபடி மறுபடி ஏமாதிகிறோம்... நீ அழுத்தப்ப ஒருத்தனும் நிக்காம ஓடுனாய்ங்களே.. எங்க...எது வரைக்கும் ஓடுவாய்ங்க... ??? புரியரவரைக்கும்... ஒரு நாள் டப்புன்னு மண்டையில தட்டி.. கடவுள் நிஜ வாழ்க்கைக்கு தள்ளுவாரு....அதுக்கப்புறம் நிப்பாங்க.... உண்மைய ஏத்துக்குவாங்க... அதுவரைக்கும் எனக்கு என்ன போச்சுன்னு கைய கட்டி வேடிக்கை தான் பாப்பங்க...."

"தாத்தா போ தாத்தா .. போ...."

"30 வருஷமா தனியவே உட்காந்து யோசித்தது.... நீயும் 30 வருஷத்த கழிச்சிடபோரியோனு தா சொன்னேன்...ஏற்கனவே லேட்டு... வாய்கா ஓரம் டாக்ஸி நிக்காது.... ரோடு கிராஸ் பண்ணி உடுற தம்பி இந்நேரம் போயிருப்பன்...எப்படி போக போறேனோ..."
சொல்லி கொண்டே எழுந்தார்..... அவரது சாமான்களை எல்லாம் சேகரித்து... மெதுவாய் நகர்ந்தார்....
அவருக்கு உதவலாம் என்று உமெஷிர்க்கு தோன்றியது... இருந்தும் அவனது கவலை மேக்னா.. அதை தடுத்தது....

"பாத்து போங்க இருட்டுடிச்சு...." என்றான் 
அவர் சிரித்து ..."உனக்கு 30 வருஷத்துக்கு மேல ஆகும்...." என்று நடையை தொடர்ந்தார்...
சப்வே கதவை அந்த கல்லூரி மாணவர்கள் சாத்தி விட்டு சென்று விட்டார்கள் போலும்... அவர் அதை திறக்க முயன்று தோற்றுப்போனார்... அவன் அவரை வெறிச்சென்று பார்த்துகொண்டிருந்தான்... உதவவில்லை....மீண்டும் மேக்னாவில் முழ்கினான்...அவளது பிறந்தநாள் அன்று அவர்கள் சேர்ந்து எடுத்த போட்டோ....தலையில் பிரின்சஸ் கிரீடம்.... முகத்தில் லேசாய் அப்பிய ப்ளாக் பொரெச்ட் .... கன்னத்தோடு கன்னம் வைத்து... எவ்வளவு சிரிப்பு..... சிலர் அலறியது கேட்டு திகைத்து பார்த்தான்... தாத்தா தண்டவாளத்தின் நடுவே... ட்ரைன் வேகமாக முன்னேறி கொண்டிருந்தது...
"யோவ் ட்ரைன்.. ட்ரைன்..."
"போச்சு.. போச்சு..."
அவர்கள் கத்துவதை கேட்டு வேக வேகமாய் தடுமாறி அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்தார்... அதில் தான் ட்ரைன் வந்துகொண்டிருந்தது..... உமெஷிர்க்கு...உலகமே இருண்டுவிட்டிருந்தது...ட்ரைன் பிரக் போடும் க்ரீச் சத்தம்.. பலரது கூக்குரல்கள்..... தடுமாறி நின்றது ரயில்...... வாரி சுருட்டி எழுந்து ஓடினான்...
"போயுடுச்சுனு நெனக்கிறேன்..." என்று கூறிய சொட்டைகளை தாண்டி....
நெனச்சிருந்தா காப்பாத்தி இருக்கலாம்.... நாம் தான் சென்று போன கவலையை நினைத்து... மனது சுருக்கென்று வலித்தது அவனுக்கு... 

ட்ரைனுக்குள் ஏறி அந்த பக்கம் குதித்து...விழுந்து..எழுந்து...ஓடி சுற்றி இருந்த கும்பலை தள்ளி பார்த்தான்.... தாத்தா சாக்கடை போல் இருந்த ஒரு பள்ளத்தில் கிடந்தார்... 
"இருக்கானு பாருங்கப்பா...."
ஒருவர் ஒரு குச்சியை எடுத்து குத்தி பார்த்தார்....
"ஹா...." என்று பதில் தந்தார் தாத்தா.....

அந்த சத்தம் அவனை நிஜ வாழ்கைக்கு டப்பென்று மண்டையில் தட்டி தள்ளியது.....சுற்றி பலர் வேடிக்கை பார்க்க..... அவன் ஓடி அவரை தூக்கி.... அவர் மீது வழிந்த நாற்றம் மிகுந்த அந்த ஈரத்தை தொடைத்து.... அவரை உடகரவைத்து கட்டி பிடித்து...அழுதான்.....

"என்ன மனிசுடுங்க...."
"பரவைல்லையே புரிஞ்சுகிட்ட...." என்றார் தாத்தா.







Wednesday, March 13, 2013

ஒசிக3 : கார்ட்டூன் கிழவி..!!


நானும் எவ்ளோ நாளு தான் வாழ்க்கைங்கற நாடக மேடையில audienceஆவே நடிகரதுன்னு தெரியல...ஸ்கூல் முடுச்சப்பயே.. அட்லீஸ்ட் ஸ்கூல் ல தான் ஒன்னும் தேரல.. காலேஜ்லயாவது ட்ரை பண்ணுவோம்னு நெனச்சேன்....நாலு வருஷம் ஹ்ம்ம்ம்ம்.... ஹுஹும் .... பொண்ணுங்க கூட பேசுனது கூட இல்ல.....சரி வேலைக்கு போறோம்.. அங்கேயாவது ஹ்ம்ம்- னா...  ஹ்.. ஹ்..  ஹுஹும் .... ஒன்னும்தேர்ர மாறி இல்ல..இனி சான்ஸ் கொஞ்சம் கம்மி தான்....


 கண் கேட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் ... 24 வயசுல லவ் பணனும்னு நெனக்கறது.... கண்டிப்பா எந்த பொன்னும் கெடக்காது.... 24 வயசுல ஒரு பொண்ணு நா யாரையும் லவ் பண்ணலன்னு சொன்னா ஒன்னு அது பொய்யா இருக்கும்..இல்ல கண்டிப்பா history இருக்கும்.... யாரும் ப்ரீயா இருக்க மாட்டாங்க...!!!


இது போன்ற அனுபவ பாடங்களால் நம்பிக்கை இழந்து அம்மா பாக்குற பொண்ணு தான் என்று தீர்மானித்து வைத்துருந்தேன்....ஆனா இந்த புனே... நொந்து கிடந்த என் மனதிற்கு தெம்பு ஊட்டியது ..... புனேயில் தாங்கே சௌக்கில்( dange chowk ) தங்கிஇருந்த பிரபாவையும் ஹரியையும் பாக்க சென்றேன்.. அப்ப தான் அந்த பெண்ணை பார்த்தேன்..!!

 மாமா திரும்ப திரும்ப சொன்னார்... எட்டாம் நம்பர் பஸ்சு .. நேரா போகும்.. ஒன்னு..ரண்டு..முனு ..என்று காற்றில் படம் வரைந்து .... 7ஏழாவது ஸ்டாப்பு... மறந்துடாத என்றார்.

எட்டாம் நம்பர் பஸ்சு ..ஏழாம் நம்பர் ஸ்டாப்பு....
த்ரீ போர்த்.... டி-ஷர்ட் ....ஒன்னு ..ரெண்டு..முனு...
எட்டாம் நம்பர் பஸ்சு ..ஏழாம் நம்பர் ஸ்டாப்பு....
ஓபன் ஹேர் .. குல்பி கட .. நாலுஅஞ்சு ஆறு.....
ஏழாம் நம்பர் பஸ்சு .. எட்டாம் நம்பர்ஸ்டாப்பு....
பைக்கில் போற பொண்ணுங்க ஏழு... எட்டு... பின்னால இருக்க பொண்ணு நல்லஇல்ல .. ஸ்டில் கவுன்டிங் 7....!!
நேரா லெப்டு போய் ரைட்டு திரும்பினா பஸ் ஸ்டாப்பு...!!
பஸ் ஸ்டாப்பில்.. பச்ச சுடி ... எட்டு ...!!!
என் 24 வருட எக்ஸ்பிரிஎன்சில் இவ்ளோ அழகா பார்த்ததேயில்லை ...அதுவும் சுடியில்... !!
எட்டு மட்டும் ஞாபகத்தில்.... மீதி எல்லாம் மறந்துவிட்டது....!!


புனேல 10 நிமிசதுள்ள நம்மள கிராஸ் பண்ணற அளவுக்கு நல்ல பிகர்ஸ நம்மூருல பாக்கணும்னா 10 நாள் அதே இடத்துல்ல நிக்கணும்....!!!
அதுவும் இந்த பச்சை சுடியை போல் பார்க்கணும்னா... சான்சே .. இல்ல..!!!
டிவி போட்டாதான் உண்டு.....!!!

என்னை புனேக்கு அனுபித்த பெயர் தெரியாத RMGயை மானசிகமாய் காலில் விழுந்து கும்பிட்டேன்...!!
மீண்டும் உலகத்திற்கு வரும் பொழுது அவளில்லை... பஸ்சு ஸ்டாப்பை விட்டு கிளம்பியது.... ரன்னிங்கில் ஏறினேன்.... கண்டக்டர் தொ..தா..புதா.. என்று திட்டினான்... அவள் என்னை லூசை பார்ப்பது போல் பார்த்தாள்..!!!

கண்டக்டர் நேரே வந்து....
"கிதர் ..?"
அய்யோ இடம் பேர மறந்துட்டேனே.....
"ஆரே... கிதார் யார்..?"
ஸ்டாப் நம்பர்..ஸ்டாப் நம்பர்... எட்டா..பத்தா...
"பாப்ரே....கிதார்ர்ர்ர்ர்......?!"
காது கேக்காதுனு நெனச்சிட்டான் போல... அவள் சிரித்தாள் ....

தட்டு தடுமாறி... மூளையில் உள்ள neuron-செல்லம் தட்டி...
"பையா சௌக் ...."
"பா..பாபா..பா சௌக்..?"
சௌக்குக்கு முன்னாடி என்ன சொன்னான்....?!
"ஹா.. கரெக்ட்.... சௌக் பையா ... சௌக் ..." காசை நீட்டினேன் 
"அரே பா.. பாபா.. பா.. சௌக் ..." 
அய்யோ சத்தியமா புரியலடா....!!!கடுப்பாகி ஒரு 25 ருபாய் டிக்கெட்டை கொடுத்துவிட்டு...  அந்த பச்சையிடம் போனான்...என்னை பற்றி ஏதோ திட்டினான்...
எனக்கு ஏன் இதுவரைக்கு ஆள் செட்டகலன்னு புரிஞ்சுகிட்டேன்...

பொதுவாக பொது இடங்களில் பார்க்கும் பெண்களை நான் மனதிற்குள் நுழையவிடுவதில்லை.... இவளையும் நுழையவிடவில்லை...!!! முதலில்...!!!

கண்டக்டர் கத்துவது எங்கோ கேட்டது போல இருந்தது... கூர்ந்து கேட்டேன்..
"தாங்கே சௌக்... தாங்கே சௌக் .."
அட நம்ம இடம்... அவசர அவசரமாக ரன்னிங்கில் இறங்கினேன்....
கண்டக்டர் திட்டுவது காற்றோடு கரைந்து மறைந்தது...!!

பிரபாவுக்கு கால் பண்ணேன்... அவனும் DCஇல்  (தாங்கே சௌகில்) தான் இருப்பதாக சொன்னான்.. தேடி பார்த்தேன்.....
"லேண்ட்மார்க் ஏதாவது சொல்லுடா.... ".
ஆதித்யா பிர்லா ஹாஸ்பிடல் என்றான்.
பகதில்லிருந்தவரிடம் விசாரித்ததில் பஸ் போன திக்கில் கை காட்டி ஏதோ சொன்னார்.... புரிந்தது ...!!!

ஆட்டோ பிடித்து DC போனேன்.....பிரபாவும் ஹரியும் ரோட்டிலேயே விழுந்து விழுந்து சிரித்தார்கள்..... தூரத்தில் ஒரு கூட்டம் வாயில் கைவைத்து பெண் சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தது.. அதில் அவளும் இருந்தாள்..!!!

பிறகு அவளை மாமா விட்டிற்கு எதிரே இருந்த கணேஷ் மந்திரில் தாண்டியா ஆட்டத்தில் பார்த்தேன்....!! அது என்னமோ நார்த் ஸ்டைல் டிரஸ்....அக்காவிடம் கேட்டபொழுது காக்ரா என்றாள் . இன்னும் அழகாய் இருந்தாள்..!!! பசங்களும் பலர் அவளை சுற்றி வர.. சில பெண்கள் அவளை பொறாமையுடன் பார்க்க..  அவள் எந்த பையனுடனும் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்... அவளை சில சல்மான்கள் ஆட அழைக்க அவள் மறுத்துவிட்டாள் ..!! வடிவேலு நான் கூப்பிட்டால் வரவா போகிறாள்.. மீண்டும் மனதினுள் இருள் கவ்வி வீட்ற்கு சென்றுவிட்டேன்...!!!

பொதுவாக பொது இடங்களில் பார்க்கும் பெண்களை நான் மனதிற்குள் நுழையவிடுவதில்லை.... இவளையும் நுழையவிடவில்லை...!!! வெளியிலேயே தடுத்து நிறுத்த பார்த்தேன்.. எங்கே காணோம்.... உள்ளிருந்து சத்தம் வந்தது... உள்ளே இருக்கிறேன் பார் என்று ....!!!

எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.... கேட்கமாட்டேன் என்கிறது மனது.... ஏ இப்படி.. யாருனே தெரியாது... என்ன காரணம் ... காரணமின்றி வருவது தான் காதலா....பேரு என்னவா இருக்கும் ஊரு.....?!

balconyil இருந்து எட்டி பார்த்தேன் .. அவள் யாரோ ஒரு பையனிடம் பேசி கொண்டிருந்தாள்..... இனி அவளை பார்க்க கூடாது என்று முடிவு பண்ணினேன்....!! மனதிலிருந்து விரட்ட ட்ரை பண்ணேன்...
அவளை பார்த்தேன் மறு நாள் காலை ஆபீஸ் போகும்பொழுது....

நான் பார்த்தேன்.. அவளும் பார்த்தாள் ...!!!
நான் பார்த்தேன் .. புன்முறிந்தால்..!!!
நான் பார்த்தேன் ... முகத்தை திருப்பி கொண்டாள் ..!!!
நான் பார்த்தேன்... நகர்த்து நின்றாள் ...!!!
நான் பார்த்து கொண்டே இருந்தேன்....!!!!

அவள் வேறு கம்பெனி ID கார்டு மட்டிருந்தாள்.. பேரை பார்க்க எவ்வளோவோ முயன்றும் பார்க்க முடியவில்லை...!! அவளுக்கு போன் வந்தது... எடுத்தாள்... பேசினாள் ...
"கிளம்பிட்டேன்டி ... பஸ் ஸ்டாப்புல தா இருக்கேன்....."
என் முகத்தை நூறு பேர் ..நூறு திசையில் இழுத்தது போல் விரிந்தது.... தமிழா...நா கேட்டது தமிழா ... ஸ்டார் பிளஸா இருக்கும்னு நெனச்சா .. ஸ்டார் விஜய் போல....!!!

பேசினேன்..அவள் பேசவில்லை..... மிகவும் பிடித்துவிட்டது....!!!
மீண்டும் கண்டக்டரிடம் "சௌக்.."
என்று நான் சொல்ல... அவள் பேசினாள் முதல் முறையாக
"சௌக்னா நால் ரோடுன்னு அர்த்தம்..  நிறைய சௌக் இருக்கு புனேல.... முழுசா சொல்லுங்க...."
இருவரது ஆபீசும் ஒரே டெக் பார்க்கில் தான் இருந்தது...!!!
நாள் முழுக்க அவள் சௌக் என்னும் வார்த்தையை சொன்னது போல உச்சரித்து.. பிரபாவை நச்சரிதுவிட்டேன்.....!!

மதியான ஷிப்ட் ..போட்டு விட்டார்கள்... இருந்தும் அவளை பார்க்க காலையிலேயே எழுந்து ஓடினென்...!!

தினமும் சிரிப்பு....அந்த மருண்ட பார்வை... மீண்டும் 24 மணி நேர காத்திருப்பு...
மீண்டும் சிரிப்பு....!!

பிரபாவும் ஹரியும் என்னை அவர்களுடன் வந்து தாங்கும் படி நச்சரித்தார்கள்.. மேலும் எத்தனை நாள் தான் நானும் மாம்சை தொல்லை கொடுப்பது... இருந்தும் அந்த கண்கள்.. போக மனமில்லை...போய்விட்டேன்.


24 மணி நேர காத்திருப்பு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது... டெக் பார்க்கில் தேடி பார்த்தேன்.. அவள் நின்றது போலவே இருந்தது.. ஓடி பொய் பார்த்தால் வேறு யாரோ...!!
ஒரு நாள் அவளை food கோர்ட்டில் பார்த்து விட்டேன்.
"என்னடா இவளா..!!!" வயைபோலந்தான் பிரபா
"ஆமா மச்சி..."
"விட்று மச்சான்.."
"ஏன்டா....ஆளு இருக்கா.. அப்படி தெரியலையே  "
"ஒத்துக்க மாட்டா.."
"எப்படி  சொல்ற...?!"
"என் காலேஜ் தாண்டா.... எவ்ளோ பேரு பின்னாடி சுத்தினானுங்க தெரியுமா..."
எதிர்பார்ததுதனே....
"இங்கயே நெறைய பேரு.. இதோ அங்க வாட்டர் கூலேர் கிட்ட நிக்கிறானே தொப்பி போட்டவன்... அவே.. அப்புறம் நம்ம சத்திசு... பாலா... எ நா கூட பஸ்ட் உன் ஆள சைட் அடிச்சுருக்கேன் மச்சான்..."
"டேய்....!!!"
"அப்புறம் வேலைக்கு ஆகாதுன்னு விட்டுட்டேன்... நீயும் விட்டுடு...."
எனக்கு என்ன சொல்வேதேன்றே தெரியவில்லை....
"உன் காலேஜ்ன்னு தெரியாம போச்சு.... உங்கிட்ட ஒன்னே ஒன்னு கேகட்டா..."
"என்னடா.. காசு கிசு எதாவது வேணுமா.."
"அவ பேரு என்ன மச்சி...?!"
நக்கலாய் சிரித்து
"நாங்க வச்ச பேரு வேணுமா.. உண்மையான பேரு வேணுமா...."
"நீங்க வச்சது ஜென்மத்துக்கும் சொல்லிடாத.... உண்மையான பெயர் சொல்லு..."
"கார்ட்டூன் கெழவி... நல்லா பாரேன் அது மாரியே இருக்கும்..."
அடிக்கபோனேன்..எழுந்து ஓடினான்...
கஷ்டப்பட்டு அவனை பிடித்தேன்  "பி profesional மச்சான் " என்றான். அவன் கழுத்தை  கையால் சுற்றி "உண்மையான பேரு சொல்லுடா ப்ளீஸ்..." என்று கெஞ்சினேன். நில்லு நில்லு சொல்லறேன்....கழுத்தை விடுவித்தேன்.... அவன் சட்டையெல்லம் சரி பண்ணிக்கொண்டு .... "கார்ட்டூன் கிழவி" கத்திவிட்டு ஓடினான்....!!!

இப்போலாம் அவள பத்தி நினைத்தால் கார்ட்டூன் கிழவி தான் ஞாபகத்திற்கு வருகிறது.... அவளது உண்மையான பெயர் தெரியாததால் இருக்கும்... என்னால் அவளது உண்மையான பெயரை தெரிந்துகொள்ள முடியவில்லை... மீண்டு போய் பிரபாவிடம் கேட்டால்.. புது புது பெயராக சொல்லுகிறான்.. நெறைய பேரு இருக்கும் போல...!!!
இரவெல்லாம் தூங்கவில்லை...  பாலாவையே ஒத்துகலைய.. ஆளு நல்லாருப்பானே.... எனக்கு வாய்பேயில்லை என்று முழுசாக தோன்றியது... இனிமே அவள பத்தி நனைக்காத கோபி..forget her.. forget her ...!!!

மறுநாள் காலை.. 6 மணிக்கெல்லாம் DCஇல் பஸ் ஏறி... மாமா வீட்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்து அவளுக்காக காத்திருந்தேன்....!! பத்து மணி ஆகிவிட்டது இன்னும் அவளை காணவில்லை...!!!  அந்த சிரிப்பு.. அந்த கண்கள்...மனதில் பளிச்சிட்டது .. பார்க்காமல் போககூடாது.....!!! காத்திருந்தேன்.. வந்தாள்... வெள்ளை சுடி... காற்றில் பறக்கும் கூந்தல் ... இதழ்களில்லேசாய் புன்முறவல்... என்னருகே வந்தாள்.. என்னை பார்த்தல்.... எதாவது பேசு கோபி பேசு என்றது மனது... பேச முயற்சித்து தோற்றது எனது உதடுகள்... அவளே பேசினாள் ... "எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்...."
தமிழ் இவ்ளோ அழகான மொழியா....பேசினேன்.. என்னவென்று தெரியவில்லை... ஆனால் பேசினேன்.... பறந்தேன்... காதலென்னும் கப்பல் ஏறி காற்றில் பறந்தேன்....!!!! (அய்யையோ கவித கவித ...!!!)

அதன் பிறகு தினமும் DCil இருந்து மாம்ஸ் வீடு...அங்கிருந்து மீண்டு DC என்று சுற்ற ஆரம்பித்தேன்.... மீண்டும் அந்த சிரிப்பு..அந்த கண்கள்.. ஒரு சில வார்த்தைகள்...

என்னதான் எனக்குள் காதல் முதலில் தலை காவேரி போல் சின்னதாய் ஆரம்பித்து.. இப்பொழுது திருச்சி அகண்ட காவேரி போல் ஓடினாலும்.. அந்த பக்கம் ஒன்னும் இல்லை எனபது ஏன் மனதில் அவ்வப்போது தோன்றி உறுத்தும்.... இருந்தும் எனக்கு பேசினால் போதும் ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை... அந்த கண் சிமிட்டல் ஒரு தடவை பார்த்தல் போதும் நாள் முழுக்க introducing சீனில் வரும் ஹீரோ போல ஆடிகொண்டிருப்பேன்.... இல்லை என்றால் நாள் முழுக்க புலம்பிகொண்டிருப்பேன்... பார்த்தால் போதும்.... அவள் என்னை காதலிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்கவில்லை ஒரே ஒரு முறை பார்த்தால் போதும் ஆனால் தினமும்.. அதற்கு அவள் என்னை காதலிக்க வேண்டும்.

சில நாட்களாய் அவள் என்னுடன் பேசவில்லை... பார்த்து கண்ணால் சிரிப்பதும் இல்லை.. என்னவென்று தெரியவில்லை.... அமைதியாய் அவளை பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன் பஸ் ஸ்டாப்பில் ...... உம்மென்று இருந்தால் கொஞ்சம் கார்ட்டூன் போல தான் இருந்தாள்... கிளவிங்க்றது எல்லாம் ஓவர்....!!!
"டேய் கோபி....இங்க என்னடா பண்ற...."
யாரு என்று பார்த்தல் மாமா....!!!!
ஒழியபார்தேன்.. இடமில்லை..மாட்டிக்கொண்டேன்....
பக்கத்தில் வந்தார்...."இங்க என்னடா பண்ற... பஸ் ஸ்டோப்புல நிக்குற வீட்டுக்கு வரல..."
"இல்ல மாமா பஸ் மாறி ஏறி இங்க வந்துட்டேன்...."
"அடப்பாவி.. உங்க அம்மா உன்ன புனேல விட பயப்பட்டது சரி தான்....நீ பாட்டுக்கு வேற எங்கனாவது போய் தொலஞ்சிடாத.. பேசாம தாங்கே சௌக்அ  காலி பண்ணிட்டு இங்கயே வந்துடு.... வா வீட்டுக்கு..."
"இல்ல மாமா..ஆபீஸுக்கு டைம் ஆயிருச்சு..."
எல்லாத்தையும் உளறி கொட்டிவிட்டு சென்று விட்டார்...
அவள் என்னை முறைத்து பார்த்தாள்...
"நீங்க DCலயா தங்கி இருக்கீங்க..."
"ஹ்ம்ம் ஆமா..." (இன்னைக்கு பேசி விட்டாள்...ஐ ..!!!)
"அப்புறம் எதுக்கு இங்க வந்து தெனக்கும் பஸ் ஏறுரீங்க..."
இன்னுமா புரியால.....!!!
நான் நெளிந்தேன்...
"இனிமே இங்கெல்லாம் வந்து அலையாதீங்க.... "
மனது வெடித்தது.....
"நானே DCக்கு மாற போறேன்.. பிரேண்ட்சொட.."
கண்சிம்மிட்டி சிரித்தால்..... நம்பமுடியவில்லை என்னால்....


வாழ்கை என்னும் நாடகத்தில் எனக்காக இளையராஜா பாட்டிசைதார்.. தபூ ஷங்கர் கவிதைகள் எழுதினார்.... audience சீட்டில் எனது இடம் காலியானது.




Monday, March 11, 2013

ஒரு சின்ன கற்பனை- 2

ரிஷு ...!!

மேலிருந்து கீழ் வலியும் எழுத்துக்கள்.... முறைத்து பார்க்கும் மக்கள்.... முக்காடிட்ட அழகான பெண்கள்... ஜிப்பா போட்ட குல்லா வைத்த ஆண்கள்.... trackஇன் துர்நாற்றத்துடன் சேர்ந்து வீசும் வடா பாவ் வாடை ....

புனே ரயில்வே ஸ்டேஷன் மே ஆப்கா ஹர்த்திக்  ஸ்வாகத் ஹேய்..!!!

ஹிந்தியில் வரவேற்றது புனே...!!!

நான் மட்டும் தனியாக ட்ரெயினில் வந்தேன்...!! எனக்கு இங்கே ஏதோ தூரத்து மாமா இருப்பதை என் அம்மா எப்படியோ கண்டிபிடித்து.. திடிரென நெருங்கிய மாமா ஆக்கி... இப்பொழுது என்னை தேடி வீட்டில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்...!!! அதனால் ஒரு நாள் முன்னாரே நான் வந்துவிட்டேன்..!!

கடுமையான குளிர்....குளிரில் பிரேக் டான்ஸ் ஆடிகொண்டிருந்தேன் .... குளிரையும் பொருட் படுத்தாமல் பலர் பிளாட்போர்மில் படுதுக்கொண்டிருந்தார்கள் .... ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது.. அதன் தாய் அதற்கு குளிராமல் அனைத்துகொண்டிருந்தாள்...!!!


கலையாத தூக்கத்தை கண்ணில் வைத்துக்கொண்டு... அவசரமாய் வந்தார் என் மாமா...அவரது தலை புது பிளாட் போல சுத்தமா காலி செய்யப்பட்டு.. மேலிருந்த லைட்டை reflect செய்தது... அவர் ஸ்கூலிங்குக்கு பிறகு வளர்வதை நிறுத்திவிட்டார் போல...இடுப்புக்கு இருந்தார்...!!!

அவரை இப்பொழுது தான் முதலில் பார்பதாக ஞாபகம்...!! என்னை ஏற்கனவே பார்த்துள்ளதாக புருடா விட்டார்...!! வளர்துவிட்டேனாம்...மற்றும் பல கிளிசெகள்..!!! நான் அதிகம் பேசவில்லை.... வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன்... நாயை தூரத்தி செல்லும் குண்டு பெண்கள்... சைக்கிளில் டி விற்கும் தாத்தா... jhonson n jhonson  விளம்பரத்திற்கு வருவது போல லட்டு பாப்பாகள்... நிறைய மிலிட்டரி உடைகள்.. பீரங்கிகள்... எல்லாவற்றுக்கும் மேலாக வெளியில் தலை நீட்ட முடியாத அளவிற்கு குளிர்...!! மாம்ஸ் குரங்கு குல்லா போட்டிருந்தார்..இப்பொழுதுதான் முகமே தெரிந்தது...!!! நான் நடுகுவதை பார்த்து எனக்கு ஜாக்கெட் எடுத்துவர மறந்து விட்டதாக கூறினார்...அவர் ஜாக்கெட்டை சரி செய்து கொண்டார்..!!

தஞ்சாவூர் ஓல்ட் ஹௌசிங்க் யூனிட் போல இருந்தது அவர்கள் ஏரியா.... ஆனால் நல்ல மெய்டேனேன்ஷ்... எல்ல வீட்டிலும் கார் நின்றது...அவர்கள் அதை society என்று அழைத்தார்கள்...20 வருஷத்துக்கு முன்னாடி புநேலையே முதல கட்டின society இதுதானாம்..!!
"பாகத்தா இப்படி இருக்கும் ஆல் ரிச் பீப்புள்..!!" என்றார் மாம்ஸ்

20 வருஷத்துக்கு முன்னாடி லிப்டேல்லாம்  இல்ல போல.... படிக்கட்டில் ஏறி முதல் மாடி சென்றால்.. படிக்கட்டு திரும்பும் இடத்தில் நான்கு  கதவுகள்.. அதில் ஒன்று திறக்கப்பட்டு ஒரு குழந்தை கதவை பிடித்துக்கொண்டு நின்றது... அதனிடம் மாம்ஸ் ஏதோ ஹிந்தியில் பேச... அது அழுது கொண்டே உள்ளே ஓடிவிட்டது...

"ஹி ஹி எப்போதும் விளையாடும்..என்னானு தெரியல.."

வழிந்தார்..நான் சிரித்தேன்....

"குல்லா போட்டிருகீங்கள அதனால இருக்கும் "

குல்லாவை கலட்டிகொண்டே... கதவின் லாட்சை திறந்தார்.... ஹ்ம்ம் சாம்பார் ஸ்மெல்..!!

 அக்கா ஒல்லியாய் கச்சிதமாய் சாரி அணிதிருந்தாள் ..  லேப்டாபில் சன் டிவி ....  ராதிகா யாரையோ கைநீட்டி திடிகொண்டோண்டிருக்கும் பொழுது பாஸ் செயப்பட்டுள்ளர்....

"நல்லாருக்கியா கோபி..?"

"நல்லாருக்கேன்..நீ எப்படி இருக்க வினி" வினிதா முழுப்பெயர்....

 அக்காவை பலமுறை பார்த்துள்ளேன்... ஊர் திருவிழாவிற்க்கு ஒன்றாகத்தான் போவோம்... யாரோயோ லவ் பண்ணி.. லவ் கம் arranged marriageஆக நடந்த இவர்கள் கல்யாணம் எப்பொழுது நடந்ததென்று சத்தியமாய் ஞாபகம் இல்லை..!!

இட்லி வித் சாம்பார் .. என்னதான் நம்ம ஊரு ஐடெம்னாலும்... வெளிஊரில் சாப்பிடும் பொழுது.. கொஞ்சம் சுவை ஜாஸ்தியாக தான் உள்ளது...
மாம்ஸ் அவசர அவசரமாகா இட்லிகளை முழுங்கிவிட்டு ஆபீசிற்கு ஓடினார்...

பால்கனியை கிட்சென் ஆக்கி இருந்தார்கள்.. கிட்சேனை பெட்ரூம் ஆக மாற்றம் செய்திருந்தனர்.. அந்த கிட்சென் பெட்ரூமில் இருந்து வெளியே வந்த அக்கா...

"சாப்ட்டுட்டு ரிஷு ரூம்ல.. ரெஸ்ட் எடுத்துக்கோ... ட்ரேச்சு கிஸ்சு எல்லாம் அப்படியே பரப்பிட்டு போய்டா.. இப்போதா கிளீன் பண்ணேன்..."

ஹ்ம்ம் அக்காவுக்கு பொண்ணு இருக்கா.. திடிரென்று மாம்ஸ் குள்ளா  கழட்டினதை போல வீடு பளிச்சென்று ஆனது... அம்மா சொல்லவே இல்ல...வாழ்வின் ஒரு மூலையில் சின்ன ஒழி கீற்று கிளம்பியது....!!!
கற்பனை குதிரைகளை கட்டுபடுத்தி நிஜ உலகிற்க்கு வர கொஞ்சம் டைம் எடுத்தது...!!!

ஒரு பொண்ணு ரூம்குள்ள நான் எப்படி... திடிருன்னு வந்துட்டா ...

"ரிஷு (பெயரே இப்போ தா தெரியும்..).. எங்க போயிருக்கா..."

"தசரா வருதுல.. இங்க எல்லோரும் தாண்டியா ஆடுவாங்க தெனைக்கும் சயுன்காலம்.. ப்ராக்டிஸ் பண்ண போயிருக்கா.. ஆடவே வராது.. குச்சி வச்சிக்கிட்டு அடுரவங்க எல்லாரையும் அடிசிகிட்டு இருப்பா.. "
சிரித்தேன்

ரூமில் போய் உட்கார்தேன்.. பெரிய கௌன் ஒன்று தொங்கி கொண்டிருந்தது... நெறைய மெடல்.. கப்.. சின்ன வயது போட்டோகள்.. வரைந்த ஓவியங்கள்.. ஹிந்து எங் வோர்ல்ட்ல வர மாறி..

"ரிஷு டிராயிங் பண்ணுமா...? "

அது உங்க மாமா வோட வேல கோபி...

"ப்ப்பு.." சிரிப்பை அடக்கி கொண்டேன்

தீடிரென்று யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது... தலையை சீவி.. முகத்தை தொடைத்து கொண்டு.. ஹால்லிற்கு போனேன்..

ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தாள்...
"ரிஷு இப்போல்லாம் நல்லா ஆட ஆரம்பிச்சுட்டா.."

பக்கத்தில் ஒரு சின்ன குழந்தை... bag மாட்டிகொண்டு..

"அம்மா யாருமா இந்த அங்கிள்...?!"











Saturday, March 9, 2013

ஒரு சின்ன கற்பனை - 1

காலேஜ் முடிக்கிற வரைக்கும் தமிழ் நாட்டை தாண்டி நான் போன ஒரே இடம் திருப்பதி தான்....இப்போ புனே போனுமாம்...!!!

Pune..... கூகிளில் சர்ச் பன்னி பார்த்ததில் மும்பை பக்கதில்...மகாராஷ்ட்ராவில் இருப்பது தெரிய வந்தது....!!!

நாங்கள் பிரப்பெரன்சில் கொடுத்த மூனு ஆப்சனும் சென்னை தான்...போராடினோம்..!!!
"அட்லீஸ்ட் பெங்களூர் ஆவது கொடுங்க மேம் ப்ளீஸ்..!!!"
"டேய் இங்கிலீஷ் ல பேசுடா..." என்றான் பிரபா
அவசரத்துல வாய்ல தமிழே வாரல ..இங்கிலீஷ் வேறயா....கடைசி நாளில் புனே என்று குண்டு போட்டுவிட்டார்கள்....கெஞ்சி கூத்தாடி பார்த்தோம்...

"வேலைக்கு ஜாய்ன் பண்ணறதுக்கு முன்னாடி லாஸ்ட்ல ஒரு கையேழுத்து போட்டிங்களே ஞாபகம் இருக்கா...வில்லிங் டு வொர்க் எனிவேர்...." (அப்படியா...?!)

சிலர் அம்மா அப்பா என்று கதை சொன்னார்கள்...சிலர் காதலி இருப்பதாக கூட சொல்லிப்பார்தார்கள் ஒன்றும் எடுபடவில்லை....பசங்க சில பேர் காலில் விழாதக் குறையாக கெஞ்சிப் பார்த்தார்கள்.....யாரும் மசியவில்லை....  சிலரை கொல்கத்தா டெல்லி என்று கன்னபின்னவென்று அள்ளித் தெளித்திருந்தார்கள் ...!!! ஆனா ஒரு சில பெண்கள் ஈஸியாய் சென்னைக்கு மாற்றிகொண்டார்கள்.... அவர்கள் பேசவில்லை... ரெண்டு சொட்டு கண்ணீர் ... ஹ்ம்ம்ம்ம.... பொண்ணா பிறந்திருக்கலாம்... எதை வேணும்னாலும் சாதிக்கலாம்...ஒன்னு அழனும்..இல்லனா சிரிக்கணும்....!!


சில பேர் குடும்பத்தோட ஜோடியாய் பிளேஸ் அயிருந்திருந்தார்கள் ... ஒன்றாக ILP செய்தார்கள்... மூன்று மதத்திற்கு பிறகு சில காதல் பறவைகள் பிரிக்கப்பட்டன... ஒன்று சவுத்தில் சென்னை மற்றொன்று கிழக்கில் கொல்கத்தா என்று தூக்கி எறியப்பட்டார்கள்...சிலர் கடைசி பில்டெரிலும் தப்பித்து ஒரே ஊருக்கு அனுப்பபட்டார்கள்...புனேக்கு எந்த பறவைகளும் வரவில்லை ..

சில பசங்களுக்கு ஒரு டிபரென்ட்டான வியாதி இருக்கும்...அவர்களுக்கு பேச வராது... மற்ற பசங்களுடன்....!!! அவர்கள் கண்ணும் பார்க்காது... மற்ற பசங்களை...!!! எக்ஸ்குளுஷ்வளி மேட் போர் கேள்ஸ் ...!!!

எங்கள் பாட்ச்சில் அது போல் எக்ஸ்குளுஷ்வளி மேட் ஜீவன்கள் சில இருந்தது.....அது போன்றவர்களை அனைவருக்கும் தெரிந்து இருக்கும் ...
அவற்றில் ஒருவன் கார்த்தி... இது அவன் இயற்பெயர்.. எங்களுக்கு "கடல" கார்த்தி..!!

அந்த கூட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு அவனை மட்டும் புனேவில் போட்டுத் தொலைத்து விட்டார்கள்...அதனால் முதல் முறையாக எங்களிடம் வந்து பேசினான்...ஏற்கனவே பிரபாவுக்கு அவனை பிடிக்காது

"ஹாய் ..மச்சான் நீங்களும் புனே தானே...?" எனக் கேட்டான் கடல

"யே..நீ தமிழா....வாவ் வாட் எ சர்பிரைஸ் ..!!!" நக்கலடித்தான் பிரபா

"அக்சுவல்லி..டமில் கொஞ்சம் கொஞ்சம் தான் பேசுவேன்...இப்போ தான் கத்துக்கிட்டேன்...."

"இந்த மூனு மாசதிலையா..ரொம்ப பாஸ்டு தான்..."

"பசங்க லேன்குவேஜ்  கத்துக்கணும்னா ஈஸியான வழி..... அந்த லேன்குவேஜ்  பொண்ணுங்கள கரெக்ட் பண்றது தண்டா பிரபா...."என்றேன் நான்

"என்னேன்ன லேன்குவேஜ் தெரியும் உனக்கு...?" என கேட்டான் ஹரி

"இங்கிலீஷ், ஹிந்தி, தமிழ் தெலுங்கு...."

பிரபா அவனை நடுவிலேயே நிறுத்தி
"ஏதாவது ஒரு லேன்குவேஜ்அ  ஒழுங்கா கத்துக்கோடா..ஏன் எல்லாத்துக்கும் அசை படுற..!!"

அனைவரும் சிரித்தோம்....அவன் நெளிந்தான்.....

"ஏ கார்த்தி நீ மட்டுமா வர..உன் பிரெண்ட்செல்லம் புனே வரல..?" என கேட்டென் நான்.

"ப்ச்ச்ச் வரல கோபி ..." என்றான்

"அப்பா.... புனேல இந்த கொசு தொல்ல இருக்காது..." என்றான் ஹரி .


"அங்க பொண்ணுங்க கூட வெளில சுத்துனா....காவி தூண்டு போட்டுக்கிட்டு நெறய பேரு குத்து குத்துனு பிரிச்சு மேஞ்சிடுவாங்கலான்டா.."என்றேன் நான்

"அதுக்கு நாம ஏ மாப்ள பயப்படனும்....ஆளே இல்ல... பெல்லு..!!" என்றான் பிரபா

"நமக்குன்னு இல்லடா பிரபா .... எல்லாருக்கும்...!!! பொது நலன் கருதி வெளியிட்டுள்ளான்  கோபி ...!! " என்றான் ஹரி


அவனுக்கு புரிந்துவிட்டது "அப்ப நா வரேன்" நைசாய் நழுவினான்

"ஏய் நில்லுடி செல்லம்.... அதுக்குள்ள எங்கடி... கெளம்புற...? உங்கிட்ட ஹரி ஒரு கேள்வி கேக்கணுமாம் டேய் கேளுடா ..."என்று பிரபா அவன் தோளில் கை போட்டான்.

"டேய் அத இவன் கிட்ட கேக்கலாமாடா...சரி ஆனா ஆளு தானா ..?"

"இவன் தாண்ட கரெக்டு...கேளுடா...!!"

கார்த்தி கொஞ்சம் ஆர்வமாய் முகத்தை வைத்து "கேளு ஹரி என்றான்..."

"ஏன் மச்சான் கிளி போன்ற பெண்கள் குரங்கு போன்ற ஆண்களை ஈஸியா பிரெண்ட்ஸ் ஆக்கிறாங்க..?!!"

அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..."#@$%@ I will see you guys in Pune" என்று கோபமாய் கத்திச் சென்றான்

"அப்பயாவது எங்கள பாருடா.....#@$%^# " என்றான் ஹரி.

கடல கோவத்தில் ஒரு மாதிரி விசுக்கி விசுக்கி நடந்து போனது மேலும் சிரிப்பூட்டியது...

"டேய் இருந்த ஹிந்தி தெரிஞ்ச ஒருத்தனையும் விரட்டிட்டோம்..இப்போ என்னடா பண்றது....?" எனக்கேட்டேன் நான்

"மச்சி confidence...ஏன் எல்லோரும் புனேனா  பயபட்றீங்க ...பொண்ணுங்களாம் செமையா இருக்கும்....கிளைமேட் பெங்களூர விட நல்லாருக்கும்....என்ஜாய் பண்ணலாம்...சட்டிக்குள்ளேயே குதுர ஒட்டாம...வாங்கடா வெளில ." என்றான் பிரபா

"ஹிந்தி தெரியாதேடா....அங்க போய் என்ன பண்றது ...."என கேட்டேன்  நான்

".டேய் கோபி.... நீ சொன்னமாறி ஆளுக்கு ஒரு பொண்ணா பிடிச்சு ஹிந்தி கத்துக்குவோம்  ..அப்படியே அங்கயே  செட்டில் ஆயுடலாம்..."என்று பிரபா
கையை ஸ்மாஷ் அடிப்பது போல் உயர்த்தினான்...

அவன் கையை தட்டி விட்டு..."21 வருஷம் தமிழ் கத்துகிட்டடீங்க்லே சார் என்ன கிழிச்சிட்டீங்க....காலேஜ்ல ஏதாவது ஒரு பொண்ணு பேசிருக்காட உங்கிட்ட ..எல்லாம் அலறி அடிச்சுகிட்டு ஓடும்.... இதுல அந்த ஊரு பொண்ணுங்க...?! நம்மள....?! ப்ப்பூ....நம்மளாம் கண்ணுலேயே படமாட்டோம்..."

"பீ பாசிடிவ் மச்சான் ..போறோம் புனேக்கு..எல்லாரும் அங்கேயே செட்டில் ஆரோம் ...மகாராஷ்டிரா அபீசியல் லேன்குவேஜ் தமிழ்னு மாத்துறோம்...!!!"

மூவரும் ஸ்மாஷ் அடித்தோம்....கிளம்பினோம் புனேக்கு....!!!!


Thursday, March 7, 2013

புனே டைரீஸ் : சரக்க போடே.....!!!!

சரக்க போடே.....சரக்க போடே .....
இந்த மங்களகரமான வார்த்தைகளில் தான் ஆரம்பிக்கும் எங்கள் ஒவ்வொரு நாளும்....புனேயில்...!!!!

சரக்க போடே  என்றால் உள்ளே போ என்று அர்த்தமாம் மராத்தியில் ....கண்டக்டர் தினமும் ஆபீஸ் வருவதற்குள் நூறு முறையாவது காதில் கத்துவான் ....

பஸ் பயணம்....மிக கொடுமை புனேயில்... சத்தியமங்கலம் காட்டுக்குள் யானைகளை தேடுவது போல் பேருந்துகளை தேடவேண்டும் புனேயில்...!!! ரொம்ப ரேர்...!!! அதனால ஷேர் ஆட்டோ தான்...அதுவும் phase 3 hinjewadiக்கு கிடைக்காது....ஆளுங்க கம்மிய வருவாங்க...லேட்டா தான் எடுப்பான்....

ஒவ்வொரு நாளும்...ஆட்டோவா..பஸ்ஆ  என்று முடிவெடுப்பதற்குள் அல்லோலப்பட வேண்டிவரும்...பஸ் எங்க வர போகுதுனு ஆட்டோல ஏறி உட்காந்தா ...பஸ் வரும்..ஓடி போய் எறிடலம்னா ...ஏறவிடமாட்டனுங்க....முன் பக்கம் ஏறுனா கண்டக்டர் கழுத்த புடிச்சு வெளில தள்ளுவான்.....நீச்சே சல்....வேகமா பின்னாடி ஓடுனா...முகமூடி கும்பல் (அதாங்க லேடீஸ்...) சரா மாரியா ஸ்டேப்ஸ்ல தொங்கிகிட்டு இருப்பாங்க...அவர்கள் மேல் கை பட கூடாது...கால் பட கூடாது...ஆனா ஸ்டேப்ஸ்ல எப்டியாவது கால place பண்ணிடனும்.....TCS ல கூட easyah பிலெஸ்  பண்ணிட்டேன் ஆனா இந்த placement ரொம்ப கஷ்டம்ங்க ....கஷ்டப்பட்டு எப்டியாவது ஏறிடோம்னாலும்..ஒரு வித யோகா பண்ற போஸ்லயே ஆபீஸ் வர வரைக்கும் நிக்கணும்....!!!

சிலநேரங்களில் ஓடி போவதற்குள் பஸ்சும் போய் விடும்...திரும்பி பார்த்தால் ஆட்டோவும் இருக்காது...பல்பு ஆப் தி டே கொடுத்துருவாய்ங்க ..

கும்பலா இருந்தா நம்ம ஊரு கண்டக்டரே நம்ம மேல எரிஞ்சு எரிஞ்சு  விழுவாறு...இதுல புனே கண்டக்டர் எல்லாம் கேட்கவாவேனும்....ஏற்கனவே அம்மன் படம் வில்லன் மாறி பெரிய பொட்டு (திலகம்...) வச்சிட்டு பாக்க பயங்கரமா...பிரம்மாண்டமா..இருப்பாங்க...!!!!

ஸ்டெப்ஸ்ல நின்னுகிட்டு அக்ரோபடிக்ஸ்...எரோபடிக்ஸ்...எல்லாம் பன்னி...கண்டக்டர்கிட்ட காச கொடுத்தா...உள்ள இருக்க அவருக்கு நம்ம கை மட்டும் தான் தெரியும்...காச வாங்கிட்டு டிக்கெட் கொடுக்கமாட்டான்....ஹிந்தி சுட்டு போட்டாலும் வராது...மராத்தி..ஹி ஹி ஹி....அதனால நம்ம நடிகர் திலகம் சிவஜி மாறி(சிம்புனனு  சொல்லிருக்கலாம்...!!) கைலையே பேசி சார் டிக்கெட் இன்னும் கொடுக்கல....என்பதை புரியவைக்க வேண்டும்...கைல பிரேக் டான்ஸ் ஆடுனாலும் புரியாது...திரும்பி  சரக்க போடே.....சரக்க போடே .....என்று கத்த ஆரம்பித்துவிடுவான்...

கைல டான்ஸ்,காமெடி சீக்குவேன்செல்லாம் முடித்து...அடுத்தது அதிரடியை கையில் எடுத்தால் தான் நாம் இருப்பது அவன் கண்ணுக்கு தெரியும்..முதுகில் லேசாய் ஒரு அடி...

கரே முரே என்று சரியாய் டியூன் பண்ணாத FM கேட்பதுபோல் இருக்கும்...கடைசியாய் டிக்கெட் கையில் வந்து சேரும் ......டேய் சில்லற எங்கடா என்று கேட்பதற்குள் வேறு யாரையோ திட்டி கொண்டிருப்பான்....கண்டிப்பா நம்ம தமிழ்  பயபுள்ளயாதா இருக்கும்...:-)