சிறுகதை

Saturday, March 29, 2014

காட்சி பிழை 3

டிஸ்கவரி சேனல் க்ளோஸ் அப் ஷாட்டில் கூட பாம்பை இவ்வளவு அருகில் பார்த்ததில்லை...!!!

பேலன்ஸ் தவறி முட்புதரில் விழுந்ததில்.. உடம்பெல்லாம் முட்கள் குத்தி என்னால் எழுந்திரிக்க முடியவில்லை... பாம்பு கிளையில் இருந்து நழுவி என் காலில் விழுந்தது.... அடித்தொன்டையில் இருந்து கத்தியதால் என்னவோ வடிவேலு பெண் வேடம் போடும் போது வரும் குரலில் கத்திக்கொண்டிருந்தேன்.

மிஸ்டர் முருகானந்தம் பரபரப்பாக அதை தள்ளி விட குச்சியை தேடி கொண்டிருந்தார்.... பதட்டத்தில் நான் முண்டியதில் முட்கள் உடல் முழுவதும் ஏறிக்கொண்டிருந்தன.... ஏறுவது முள் தானா இல்லை பாம்பின் பற்களா என்று கூட தெரியவில்லை... நரகம்.... 200 பெர்சென்ட் நரகம்...!!!

தீடீர் என்று பாம்பு என் உடம்பில் இருந்து விலகியது.... அந்தரத்தில் என் முகத்திற்கு நேரே மிதந்து கொண்டிருந்தது.... இல்லை இல்லை யாரோ ஒருவருடைய கை அதை பிடித்துக்கொண்டிருந்தது. தலையை அசைக்க முடியவில்லை.... கண்களை முன்னுத்தி அறுபது டிகிரி உருட்டி பார்த்தேன்... 16 வயது இருக்கும்... பொடியன்... 6 அடி பாம்பை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.

முற்புதரில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ளவே பத்து நிமிடம் ஆகி விட்டது.. "யோவ் முருகானந்தம் சீக்ரம் யா... பாம்பு கடுச்சுருக்க போகுது... செத்துட போறேன்... "

"இந்தா இந்தா சார்.... " என்று ஏதோ செய்து கொண்டிருந்தார்

இன்னும் அந்த பாம்பை கையில் வைத்திருந்த அந்த சிறுவன்...

"ஐயோ அண்ணா.. இது சாரப் பாம்பு.. விஷம் கிடையாது...."

அவன் மட்டும் இதை சொல்லி இருக்காவிட்டால்.. இந்நேரம் செத்திருப்பேன். உடபெல்லாம் வின் வின் என்று தெரித்தது.... நல்ல வேலை வேறு யாரும் பார்க்கவில்லை...!!!

"தம்பி நீ யாரு...."

"மஜிச்ற்றடே பையன்..... மாடில படிச்சுகிட்டு இருந்தேன்.....நீங்க வராதுக்கு முன்னாடியே பாம்பு அங்க ரொம்ப நேரமா தொங்குச்சு நீங்க பார்க்கவே இல்ல.. அதான் ஓடி வந்தேன்..."

நான் முருகானந்தத்தை பார்த்தேன்.. அவர் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டார்....
"இத தான் அப்பயும் பன்னிருகீங்க...."

"தம்பி ரொம்ப தேங்க்ஸ் பா... உனக்கு எப்புடி பாம்பு புடிக்க தெரியும்.. அத போய் கைல வச்சு கிட்டு.. தூக்கி போடுப்பா அத...." என்றேன்

"ஹாபினா.. சின்ன வயசுல இருந்தே இசியா புடுசுடுவேன்..." என்று சொல்லி கொண்டே பாம்பை தூர வீசினான்

"இது எல்லாம் இப்ப ஹாபி லிஸ்ட்ல சேந்துடுச்சா.. சூப்பர்.. எல்லாம் டிஸ்கவரி சேனல் பண்ற வேல...." அவன் சிரித்தான் நான் "இன்னும் ஒரே ஒரு உதவி...."

"சொல்லுங்கண்ணா.."

"இந்த மேட்டரு..ப்ளீஸ்..." என்று கெஞ்சலாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்

"sure.... டியூஷனுக்கு டைம் ஆச்சு பாப்போம்.. " என்று ஹெர்குலஸ் சைக்கிளை ஓட்டி சென்று விட்டான்.

"சார்... புக்ஸ் எல்லாம் பேக்ல எடுத்து வச்சு பொறுமையா வந்துருக்கான் பாருங்க சார்...." என்றார் முருகானந்தம்

அவரை பார்த்து முறைத்தேன்.... "அவ மட்டும் வரலைனா இன்னும் நீங்க குச்சிய தேடிகிட்டு இருந்துருபீங்க...மிஸ்டர் முருகானந்தம்.."

அக்ஷிதா மீண்டும் கால் பன்னாள்.... பிஸி என்று செய்தி அனுப்பினேன்.

டாக்டரிடம் போய் உடம்பிற்கு எந்த சேதாரமும் இல்லை என்று உறுதி செய்த பின் வீட்டிற்கு சென்றேன்.

இன்று நடந்த சம்பவங்களை அசைத்து கொண்டே தூங்கியாதால்.. எம்மி ஜாக்சன் கனவில் மேரியாக வந்து என்னை எம்பி எம்பி துரத்தினாள். எந்த திசையில் ஓடினாலும் இறுதியாக அந்த சமாதியே வந்து தொலைத்து. வேறு வழி இல்லாமல் அந்த மொழங்கால் அளவு குட்டை கம்பவுண்டு சுவரை தாண்டி குதித்தேன்..... அது முடிவில்லாத அதல பாதாளாமாய் போய் கொண்டே இருந்தது..கிழே..வா வா என் சமாதிக்குள் வா... என்றாள் மேரி. எழுந்துவிட்டேன.

முகமெல்லாம் வியர்த்திருக்க .. அதற்குள் விடிந்திருந்தது... அருகில் அக்ஷிதா குளிருக்கு இழுத்து போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள்... ஒரே ஒரு முடி கீற்று அவள் முகத்தில் படறி இருந்தது... எவ்வளோ அழகாக இருக்கிறாள்.... கல்யாணம் ஆகி சில மாதம் தான் ஆகுது... அதற்குள் என்னை முழுதாக புரிந்து கொண்டவள்.... அப்பப்போ லைவ் status இன்னும் உயிருடன் தான் இருக்கேன் என்று அனுப்பினால் போதும்.. மற்றபடி வேறு தொந்தரவு ஏதும் செய்ய மாட்டாள். அவளுக்கு ஏதோ நான் தினம் வீரப்பன்களோடு சல்லாபம் புரிவதாக நினைப்பு.

அம்மா இவ்வளோ அழாகாக ஒரு மனைவியை பார்ப்பாள் என்று தெரிந்திருந்தால் பல அடிகளும் பீயர்களும் மிஞ்சி இருக்கும்..... இன்னும் தூங்காமல் எத்தனை பேர் இவள் தீடிர் கல்யாணத்தை நினைத்து என்னை தண்ணி அடித்துக் கொண்டு சபித்துக் கொண்டு இருகிறார்களோ தெரியவில்லை, ஒரு நல்ல கொலை கேஸ் என்று பார்த்தால்... பயங்கரமான பேய் கேசாக வந்து தொலைத்து விட்டது.

காபி போட்டு குடித்துக்கொண்டே..... அன்றைய செய்தித்தாளை எடுத்து புரட்டி கொண்டிருந்தேன்..அப்பொழுது அந்த செய்தி கண்ணில் பட்டது...

"சீரிய பாம்பு..!! சிதறிய காக்கி...!!!"





Friday, March 28, 2014

காட்சி பிழை 2

கோர்ட் கான்ஸ்டபள் முருகானந்தமும் நானும் fastrack குவார்டர்ஸுக்கு  நடந்து சென்று கொண்டிருந்தோம்.

"மேஜிஸ்ட்ரேட், முன்சிப், சப்-ஜட்ஜ், பாஸ்ட் ட்ராக்ன்னு மொத்தம் நாலுகோர்ட் இருக்கு சார்.... முன்சிப் கோர்ட் பில்டிங் அந்த காலத்துல ப்ரிடிஷ் கட்டினது.... மீதி மூணு கோர்ட்டும் புது பில்டிங்ல ஓடுது.... நாலு கோர்டுக்கும் குவார்டர்ஸ் பின் பக்கம் இருக்கு.. அதுக்கும் பின்னாடி பழைய பிரிட்டிஷ் காலத்து இடிஞ்ச பங்களா...."

"பங்களாவா இப்ப அங்க யாரு இருக்கா..."

"யாரும் இல்ல சார்..."

"அங்கயும் வாக்கிங் போகுதா அந்த பேயி.."

"அது மட்டும் இல்ல சார்.... சுத்தி 4 ஏக்கர் புதர் மண்டி காடு.. பாம்பு.. எக்கச்சக்கமா பாம்பு...."

"ஓஹோ..." அவர் சொல்வதை நான் சரியாக காதில் வாங்கி கொள்ளவில்லை... காரணம் அக்ஷிதா (aksithaa)  "சீக்ரம் வா.. சீக்ரம் வா" ன்னு அவள் அனுப்பிய எஸ்எம்எசில் இன்பாக்ஸ் நிரம்பி வழிந்தது... ஏகப்பட்ட மிஸ்டு கால்... அதற்குள் மணி ஆறு ஆகிவிட்டது. முன்சிப் கோர்ட்டை தாண்டி வந்துவிட்ட எங்களுக்கு அந்த இடம் நள்ளிரவு போல  இருட்டி விட்டிருந்தது வியப்பாக இருந்தது. பெரிய பெரிய தூங்கு மூஞ்சி மரங்கள்.... சில குட்டையான அரச மரங்கள்.. பெயர் தெரியாத இன்னும் சில மரங்கள் மேலே பரண் போலே வெளிச்சம் புகாத அளவுக்கு மூடி இருந்தது. quarters அருகில் சென்றதும்.. இது வரை நான் அறிந்திராத நறுமணம்.... மயக்கமே வந்து விட்டது எனக்கு.....  

"முருகானந்தம் உனக்கு ஏதும் வாசனை வருதா...."

"மகிழ மரம் சார்.. " என்று நாலு அடி  தூரத்தில் இருந்த மரம் ஒன்றை காமித்தார் 
அதை சுற்றி சட்டை பட்டன் சைசுக்கு சின்ன சின்னதாய் பூக்கள் கிடந்தன. 

ஒன்றை எடுத்து கையில் கொடுத்தார்.... துபாய் செண்டை விட காரமாக இருந்தது....

"இந்தவாசனைக்கு.. ஏகப்பட்ட பாம்புவந்து.. மரத்தடியில மயங்கி கெடக்கும் சார்..." அவர் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே ஏதே ஒன்று வேகமா ஊர்ந்து செல்வதை போன்று இருந்தது..... 

"அங்கிருந்து சீக்ரம் வா..." என்றாள் அக்ஷிதா

பாஸ்ட் ட்ரக் குவார்டர்ஸ் 2000-ல் கட்டப்பட்டது.. நன்றாக உதிர்ந்து பெயர்ந்து தமிழ்நாடு PWD-ன் கைவண்ணத்தை எடுத்துக்காட்டியது.. வீட்டிற்குள் லா புக்ஸ் இருக்க வேண்டிய ஷெல்பில் பல மூல்லிகை வேர்களை அடுக்ப்பட்டிருந்தன.... வீட்டில் இருக்கும் அத்தனை ஆணிகளிலும் நாட்டில் உள்ள அணைத்து சாமி படமும் மாட்டப் பட்டிருந்தது. முன் கதவின் மேல் அந்த மந்திரித்த கயிறு கட்டப்பட்டிருந்தது. முன்னால் சின்ன போர்டிகோ... நுழைந்தவுடன் ஆபீஸ் ரூம்.. பின்னால் ஹால்.. ரெண்டு பெட்ரூம்... கிட்சென்... அதை ஒட்டி கொள்ளை புற கதவு.... கதவை திறந்தவுடன் மீண்டு மகிழ பூவின் சுகந்தம். 

"முருகானந்தம்... பின்னாடியும் மகிழ மரம் இருக்கா.. "

ஆமாம் என்று அவர் சுட்டி காட்டிய திசையில் மிக பெரிய மகிழ மரம் ஒன்று இருந்தது.. அதன் மடியில் அந்த சமாதி. மகிழம் பூவின் சுகந்தத்தின் கிரகம்மா.. இல்லை காலையில் மகாலிங்கம் விட்ட சவாலா எது அப்படி செய்தது என்று தெரியவில்லை முருகானந்தம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நடக்க முடியாத அளவுக்கு மண்டியிருந்த புதர்களை தாண்டி அந்த சமாதி அருகே சென்று விட்டேன். 

சுற்றி சின்னதாய் சுற்று சுவர்.. நடுவில் சற்றே இடிந்து விரிசல்களில் முளைத்து இருந்த அரச மரங்களை தாங்கி கொண்டு இருந்தது அந்த சமாதி . அதன் முன்னே கல்வெட்டு போன்று ஒன்று இருந்தது. குச்சி ஒன்றை கையில் எடுத்து அதன் மேல் படர்ந்திருந்த காட்டு கொடி ஒன்றை விளக்கி டார்ச் அடித்து படித்தேன். சரியாக படிக்க முடியவில்லை... ஒரு சூ காலை காம்பவுண்டுக்குள் வைத்து... சற்று குனிந்து அரைகுறையாக அமர்ந்து படித்தேன்...

"Mary Adella Margret , Daughter of Justice Gregory Singlet, Died because of disease at the age of 19 years 6 months 23 days on September 5, 1893...."

மீண்டும் sms "reply ப்ளீஸ்... worried..:-("

"சார்..."  என்று முருகானந்தம் அலறினார் 

ஏற்கனவே சிறிது பேலன்சில் அமர்ந்திருந்த நான் சற்று தடுமாறினேன்..  மகிழ மரத்தின் தாழ்வான கிளையில் இருந்து தொங்கி கொண்டிருந்த பாம்பு என் முகத்திற்கு நேர் எதிரே நாக்கை நீட்டி சீறிக் கொண்டிருந்தது.


காட்சி பிழை - 1

"நா இந்த கோர்டுக்கு மொதோ  வந்தப்பயே மனசு ஒரு மாறி அமைதி இல்லாம அளஞ்சுச்சு.... அன்னைக்கே அதையும் பாத்தேன்.... மொழங்கால் உசரத்துக்கு சுத்தி compound சுவர் நடுவுல சமாதி மாதிரி.... முத்துசாமி அண்ணன் கிட்ட கூட என்னான்னு கேட்டப்போ பழைய பாத்ரூம் இடிஞ்சு கேடக்கு.. பாம்பு.. பூச்சி பொட்ட இருக்கும் அந்த பக்கம் போகாதேன்னு சொன்னார்.... அப்புறம் டெய்லி நைட் ஒன்னு ரெண்டு மணிக்கு மேல ஜல் ஜல்ன்னு காதுகிட்ட தூக்கத்தில இருந்தாலும் கேட்கும்... ஒரு நாள் இப்படி தான்... அன்னிக்கு எனக்கு நைட் டூட்டி... அகஸ்துமாத்தா 4.30 மணிங்க...  மசூதில கூட குரான் வாசிச்சுகிட்டு இருந்தாங்க.... எழுந்து பாத்ரூம் போனே... ஹ ஹ ஹ ன்னு ஒரு சத்தம்... யாரோ ஜன்னல் பக்கத்துல நின்னுகிட்டு கத்துன மாறி இருந்துச்சு.... அப்படியே ஜிவ்வுன்னு நரம்பெல்லாம் இழுத்துடுச்சு.... 10 நிமிஷமா இன்ச் நகராமா அங்கேயே நின்னேன்.... ஹ ஹ ஹன்னு கேட்டு கிட்டே இருந்துச்சு.... ரூமுக்கு  போகவும் பயம்.... அந்த ஜன்னல தாண்டி தான் திரும்பி ரூம்க்கும் போகணும்....

"அப்புறம் போனீங்கள இல்லையா..."

"போய்டேன் அங்கேயே...." என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை

"என்னங்க விசாரணைக்கு ஹெல்ப் பண்ணா.... உங்களுக்கு சிரிப்பு வருதா..."

"சார் நீங்க கோர்ட்ஸ்டாப்.... இதெல்லாம் கேசுக்கு சல்லி போறாது.. உங்களுக்கே தெரியும்...."

"தெரியும் சார்.... இது எப்போ உங்களுக்கு கேஸ் ஆச்சு... இது ஒரு நேச்சுரல் death... அடிக்கடி உடம்பு முடியாம போகும்.... தீடீர்னு நைட் கால் பண்ணுவார்.. ஓடி போய் அவர் டாக்டர் கிட்ட செப்போம்.. திரும்பி வந்து இங்கயே உட்க்காந்துக்குவாறு..."

" அன்னிக்கு நைட் கூட உங்களுக்கு கால் பண்ணி இருக்காரு இல்லையா..?"

"ஆமா சார் அன்னைக்கு நான் தான் நைட் டுட்டி.... கோர்ட் பாரா "

"அஞ்சு தடவ கால் பண்ணி இருக்காரு...".

தலையை சொரிந்தார்....

"தூங்கிட்டேன் சார்.. போன் பாத்தவுடன் உடனே ஓடி போனேன்.. அவரே வெளில வர ட்ரை பண்ணி இருக்காரு.. கீழ விழுந்ததுல சின்ன அடி... மயங்கி கெடக்காரு நெனச்சு.. பக்கத்து கோர்ட்ல பாரா பக்குரவங்கள உதவிக்கு கூப்ட்டு ஹாஸ்பிடல்ல செத்தோம்...அப்புறம் தான் தெரிஞ்சுது போய்ட்டார்ன்னு,...."

"முகத்துல சின்ன சின்ன கீறல் இருக்கே...."

"அதெல்லாம் தெரியாது சார்....."

"இத நீங்க natural டெத் அப்படீங்கறீங்க...?"

"அவருக்கு பிடிவாதம் சார் ... உடம்பு முடியல்ல.. பொண்டாட்டி புள்ளய தொரத்திட்டு தனியாவே இருந்தாரு... லீவ் போட மாட்டாறு... டாக்டர் கிட்ட போக மாட்டாறு... நாட்டு மருந்து... மூளிகைன்னு... quartersக்கு பின்னாடி ஒரு குட்டி போதரே வச்சு இருக்கார்.... அதுவும் அந்த சமாதி கிட்டேயே... அவங்க wife அவர்ட எவ்வளோ சண்ட போட்டாங்க தெரியுமா..quarters வேணா வேற வீடு போய்டுவோம்..... டாக்டர் கிட்ட போவோம்.. போகவே இல்லையே.... ரொம்ப பிடிவாதம் சார் அவரு"

"சோ நீங்க என்ன சொல்றீங்க..."

"இங்க இருபது வருஷமா இருக்கேங்கற முறையில சொல்லறேன்.... இந்த கோர்ட் compoundக்கு உள்ள... ஏதோ ஒன்னு இருக்கு.... அதுவும் அந்த சமாதி அவர் வீட்டுக்குநேர் பின்னாடி தான் இருக்கு... அவர் வீட்டுக்குள்ள கூட வருமாம்... அதான் அவசரப்பட்டு மந்திரவாதி எல்லாம் கூப்ட்டு மந்திருச்சு கயிறு கட்ட போய்..... உசுர விட்டுடாரு...."

"நீங்க சொல்லறத பாத்த எனக்கு உங்க மேல சந்தேகம் வருது..."

"சார்.. என்ன போய்...." வாயில் கைவைத்தார்

"யார்ட்ட வேணா கேட்டு பாருங்க.... மகாலிங்கம்னா ஒரு பேர் இருக்கு சார்.. இப்போ தஞ்சாவூர் district ஜட்ஜ் வேணு கோபால் இருக்காரே.. அவர் இங்க பட்டுகோட்டையில majistrate-ஆ இருந்தப்ப இருந்து இங்க இருக்கேன்... அவர்ட்ட வேணா கேட்டு பாருங்க இன்னும் என்ன ஞாபகம் வச்சு என்ன பத்தி சொல்லுவார்.... இதே போஸ்ட்ல இதே வீட்ல இருந்த கருணாகரன் என்ன ஆனாருன்னு தெரியுமா... நல்ல மனுஷன்.. திடீர்னு பத்த வச்சு கிட்டாறு.. அதுக்கு முன்ன இருந்தவரு... சொல்லிக்காம கொள்ளாம resign பண்ணிட்டு போயிட்டாரு..  எங்க போனாருன்னே ஆள் அட்ரஸ் இல்ல.... காத்தடிக்குது வெளில வந்து பாருன்னா.. வெளில வந்த தானே சார் தெரியும்... நீங்க வேணா இன்னிக்கு பாஸ்ட் ட்ராக் ஜட்ஜ் quarters-ல தங்கி பாருங்க...... உங்களுக்கே தெரியும்...."

வேலைக்கு சேர்ந்து வந்த முதல் கேசில் வந்த முதல் சவால் விடுவேனா...??

"கண்டிப்பா தங்குறேன்.... " என்றேன்


Saturday, March 8, 2014

ஒ.சி.க. : கௌரி

பிரபா கால் பண்ணான் "மச்சான் கல்யாணத்துக்கு என்ன பிளான்..?"
"கல்யாணமாடா.. இப்போதைக்கு பிளான் எதுவும் இல்ல மச்சா.. இன்னும்  2 வருஷம் ஆகும்ன்னு நெனைக்கிறேன்...."

"டேய்... உன் கல்யாணம் இல்லடா.. நந்தினி கல்யாணத்துக்கு என்ன பிளான்ன்னு கேட்டேன்... 24 மணி நேரமும்  அதே நெனைப்பு தானா...."

வாயை கொடுத்து மாட்டிக்கொண்டேன்.... நந்தினி கல்யாணத்தில் ஆரம்பித்து.. என் காதல், கல்யாணம் , first நைட் வழியாக பிரபா கல்யாணம் வரை போய் ஒருவழியாக கோயம்பத்தூரில் திங்ககிழமை 6 மணி கல்யாணத்துக்கு நானும் பிரபாவும் ஞாயிற்றுகிழமை காலை 8 மணிக்கெல்லாம் மண்டபத்தின் வாசலில் நின்றோம்.

கோபி, அண்ணாமலை எல்லோரும் புனேயில் இருந்து சென்னை மாறி ஒரு  வருடம் ஆகிறது. அவர்கள் ஏதோ  பெயர் தெரியாத எக்ஸ்ப்ரஸில் வந்து கொண்டிருகிருக்கிறார்கள். மண்டபத்திற்கு முன் பெரிய கிரிக்கெட் கிரௌண்ட் அளவிற்கு கேப் விடப்பட்டு அதற்கு முன் ஏறி குதிக்க முடியாத அளவிற்கு பெரிய கேட்டில் திண்டுக்கல் பூட்டு தொங்கி கொண்டிருந்தது. கோயம்பத்தூரில் இறங்கி எப்படியாவது அனைவரும் மண்டபத்திற்கு வந்துவிடுவது அப்புறம் அனைவரும் சேர்ந்து ரூம் போட்டுக்கொள்வது என்பது பிளான். வாசலில் பெரிய பானரில் நந்தினியும் வருங்கால கணவரும் சிரித்துக்கொண்டிருக்க அந்த முகத்தை எங்கோ பார்த்தது போல் இருந்தது.

"டேய் மாப்பள யாரு டா...உன் காலேஜ் தானா...?"
"ஆமாண்டா.. செகண்ட் இயர்ல  இருந்தே லவ்வு... குருசரண்... மெக்கு..."
குருசரண்... மெக்கு... இந்த வார்த்தைகள் மூளையில்  ஒரு மூலையில் இருந்த நியுரான்களை தட்டிவிட்டு என் ஆள் சொன்னது பிளாஷ் ஆனது.
"குருசரன்னு ஒருத்தன்... மெக்கு.. எத்தன வருசமா என் பின்னால அலஞ்சான் தெரியுமா.... நா ஒத்துக்கவே இல்லையே.... ஒரு தடவ என் கிளாசுக்குள்ள வந்து என்ன போட்டோ எடுத்துட்டான்.... அத ரவி பாத்துட்டான் (ரவி அவளை பார்க்கும் மற்றொருவன்..!!).. அப்புறம் பெரிய சண்டை ஆயிடுச்சு..."

அந்த குரு சரணா இவன்...
"டேய் இவன் நந்தினியை எப்போல இருந்து லவ் பண்றான்..."
"பஸ்ட் இயர்ல பாத்ததுல இருந்தே..."
நந்தினியையும் சும்மா சொல்லிவிட முடியாது.... ஏகப்பட்ட பேர் அவள் பின்னால் சுற்றினார்களாம்... நந்தினியும் என் ஆள் கௌரியும் ஒரே department தான்.
"எப்போ ப்ரோபஸ் பண்ணான்...."
"final இயர்ன்னு நெனைக்கிறேன்..."
"பிரபா இவன் என் ஆள் பின்னாடியும்  சுத்தி இருக்கான்டா..."
"டேய் எனக்கு அவன பிரஸ்ட் இயர்ல இருந்து தெரியும்டா... அவன் நந்தினியை தான் லவ் பண்ணறான்... ஆமா உன் ஆள் போட்டோவ என்னிக்காவது காமிச்சியா...?"
போனை எடுத்து நானும் அவளும் கருடா மாலில் எடுத்த போட்டோவை கமித்தேன்....
"அவசரர பட்டுடியே மச்சான்.. உனக்கென்ன ஆளா கெடைக்கல்ல.. FBல தமன்னா பிக் இருக்கும் போதே நெனச்சேன்....."  என்றானே பாக்கணும்.

பெங்களூர் வந்ததில் இருந்து ஒரு வருடம் நாய் போல சுத்தி.... அவளை பன்னிரெண்டாவதில் இருந்து லவ் பண்ணும் ரவியிடம் (முன்னே சொன்னேன்ல..) சண்டை போட்டு....உயிரை கொடுத்து ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிருக்கேன். நான் இதை எதிர் பார்க்கவே இல்லை...:-(

"டேய் என்னடா.. நேர்ல பாத்தேனா நயன்தாரா மாறியே இருப்பாட...."
"எ நைடில பத்தா நல்லருப்பான்னு சொல்லேன்...." ரொம்ப கூலா வானிலை அறிக்கை படிக்கிற மாறி சொன்னான்.
"டேய் ஏ அஞ்சலட அவ.." அவனை அடிக்க போனேன். அதற்குள் கோபி, அண்ணாமலை மற்றும் கூட எனக்கு தெரியாத சில பெண்கள் வர.. இப்போதைக்கு தப்பித்தேன்.

பொண்ணு வீட்ல இருந்தும் யாரும் வரல.. மாப்பள வீட்டில் இருந்தும் யாரும் வரல நாங்கள் போய் நின்றதை பார்த்து மண்டப செக்யூரிட்டி அதிர்ந்து விட்டார். மாப்பிளை பேரு சொல்லுங்க பொண்ணு பேரு என்ன.. மாப்பள எந்த ஊரு போன்ற கேள்விகள் கேட்டு திருப்திகரமான பதில் சொன்னதால் உள்ளே விட்டார். தற்கலிகமாக மாப்பிளை ரூமில் இடம் தந்தார்கள். அங்கேயும் ஆரம்பித்து விட்டான் பிரபா
"அண்ணே உங்களுக்கு.. டேய் ஹரி உன் ஆளு பேரு என்ன..."
"கௌரி..." கடுப்பாக சொன்னேன்
"ஹா.. கௌரின்னு ஒரு பொண்ணு... electrical department தெரியுமா...."
"யாருடா.. பெரிய கண்ணோட.... இடுப்பு வரைக்கும் சடை போட்டு இருப்பாளே அவளா..."
"அவ காயத்ரினே.. அவ இல்ல... கொஞ்சம் சுமாரா..."
"கொஞ்சம் சுமாராவா..." என்று அழுத்தி கூறி என்னை பார்த்து சிரித்து விட்டு "தெரியலையேடா பிரபா.." என்றார் அப்பொழுது கோபி முகம் கழுவி விட்டு வெளியே வந்தான்
"இந்தா கோபி கிட்ட கேட்போம்... நம்ம காலேஜ்லையே பெரிய database இவன்துதான்.... எல்லா பொண்ணு பேரு ஊரு department எல்லா தெரியும்.... டேய் கோபி பேரு கௌரி... department electrical.... டக்குன்னு சொல்லு ஆள் எப்படி இருப்பா...?"
அதிர்ச்சியாக பார்த்தான்.... "டேய் நம்ம காலேஜ் தானா... ?"
"ஆமாடா..."
"first time in my history.... no matches foundன்னு வருதுடா..."
அனைவரும் சிரித்தார்கள்.. எனக்கு கோபம் தலைகேறியது.....
"டேய் இந்த கல்யாண மாப்பிளையே.. என் ஆள் பின்னாடி சுத்துனவன் தாண்டா... தெரியும் இல்ல....?" என்று நான் கேட்கவும் அந்த மாப்பிளை உள்ளே வரவும் சரியாக இருந்தது.

அய்யோ கேட்டு இருப்பானோ.... "வாங்க மாப்பிளை... ஹாப்பி மாரீட் லைப்.." என்று ஏதேதோ உளறிகொண்டிருந்தேன். "மாப்பிளை மாறியா இருக்கேன்.. நான் குருவோட அண்ணன் சபரி.... கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு" என்று கூறி மிக சந்தோசத்துடன் அவர் மனைவியிடம் இதை கூற ஓடி விட்டார்.

பிரபா இந்த காதல் சந்தேகத்தை தீர்க்க குருவிடம் கேட்டு விடுவது என்று முடிவு எடுத்துவிட்டான். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. மாலை receptionக்கு இப்போதே கோட் சூட் போட்டு சின்ன தொப்பையுடன்.. நேற்று செய்த facial முகத்தில் மின்னும் அளவிற்கு கச்சித மாப்பிளையாய் வந்தான் குரு.

எப்போழுதும் அப்பா அம்மா தங்கச்சி என்று யாரோ ஒருவர் அவன் கூடவே நிற்க அவனிடம் எதுவும் பேச முடியவில்லை. எப்படியோ அவனிடம் காதோரமாக பேசி தனியாக அழைத்து வந்து விட்டான் பிரபா.
"என்னடா பிரபா... சரக்குக்கு காசு வேணுமா.. பார்ட்டியா.." எனக்கேட்டான் குரு
"அதுவும் தான்... அதவுட இன்னொரு மேட்டர்... உனக்கு கௌரின்னு ஒரு பொண்ணு... electrical department.. தெரியுமா...?"
குருவின் முகம் மாறியது.... "தெரியும்... நந்தினி கிளாஸ் தான் சொல்லு..."
"அவள எப்பயாவது போட்டோ எடுத்தியா...."
"எத்தன பேரு டா கேட்பீங்க.... "
"வேற யாரு டா கேட்டா..."
"நா அவள சத்தியமா போட்டோ எடுக்கல டா... நா எடுத்தது நந்தினிய... அந்த போட்டோ கூட இருக்கு..." போனில் எடுத்து கமித்தான்.... புல் போகஸில் நந்தினி வாயில் கைவைத்து சிரித்துக்கொண்டிருக்க.. அவுட் ஆப் போகஸில்.. இடது மூலையில் இருந்தாள் கௌரி.
"இந்த போட்டோ என் லவ் souvenir... எப்பயுமே வச்சுருப்பேன்... இப்படி தான் ரவின்னு ஒரு லூசு பய வந்து சண்ட போட்டான்.. ஒதைச்சு அனுப்பிச்சேன்.. உனக்கு யாரு சொன்னா..." என்று கையை முறுக்கினான் குரு . 
சொல்லிடாத...சொல்லிடாத என்று கை அசைத்தேன்.
"அதே ரவி தான்.." என்றான் பிரபா.

பெங்களூரில் அவளிடம் கேட்டேன்.... "நீ ஏன் FB-ல உன் பிக் வைக்கல..?"
அதிர்ச்சியாக என்னை பார்த்தாள்..... "ஒவ்வொருத்தன் போட்டோ போடாத.. FB-ய deactivate பண்ணு லவ்வர்ச நச்சுறாங்க.... நீ ரொம்ப கிரேட் டா..." சிரித்தாள்.. சிரித்தேன்.... "போட்டோ போட்டா நெறய பசங்க தொல்ல பண்ணுவாங்க அதான்... "
"ஹ்ம்ம்....(முடியல....)"
"நீ ஆச பட்டுடியே... நா வேணா இப்படி ஒரு போஸ் கொடுத்து போட்டுடவா..." என்று கைகளை வைத்து முகத்தை மறைத்து... கண்களை மட்டும் காட்டி கண்சிம்மிட்டினாள்..... யாருங்க சொன்னா தமன்னா பிக் இருந்தா மொக்க பிகர்ன்னு...?