சிறுகதை

Friday, March 28, 2014

காட்சி பிழை - 1

"நா இந்த கோர்டுக்கு மொதோ  வந்தப்பயே மனசு ஒரு மாறி அமைதி இல்லாம அளஞ்சுச்சு.... அன்னைக்கே அதையும் பாத்தேன்.... மொழங்கால் உசரத்துக்கு சுத்தி compound சுவர் நடுவுல சமாதி மாதிரி.... முத்துசாமி அண்ணன் கிட்ட கூட என்னான்னு கேட்டப்போ பழைய பாத்ரூம் இடிஞ்சு கேடக்கு.. பாம்பு.. பூச்சி பொட்ட இருக்கும் அந்த பக்கம் போகாதேன்னு சொன்னார்.... அப்புறம் டெய்லி நைட் ஒன்னு ரெண்டு மணிக்கு மேல ஜல் ஜல்ன்னு காதுகிட்ட தூக்கத்தில இருந்தாலும் கேட்கும்... ஒரு நாள் இப்படி தான்... அன்னிக்கு எனக்கு நைட் டூட்டி... அகஸ்துமாத்தா 4.30 மணிங்க...  மசூதில கூட குரான் வாசிச்சுகிட்டு இருந்தாங்க.... எழுந்து பாத்ரூம் போனே... ஹ ஹ ஹ ன்னு ஒரு சத்தம்... யாரோ ஜன்னல் பக்கத்துல நின்னுகிட்டு கத்துன மாறி இருந்துச்சு.... அப்படியே ஜிவ்வுன்னு நரம்பெல்லாம் இழுத்துடுச்சு.... 10 நிமிஷமா இன்ச் நகராமா அங்கேயே நின்னேன்.... ஹ ஹ ஹன்னு கேட்டு கிட்டே இருந்துச்சு.... ரூமுக்கு  போகவும் பயம்.... அந்த ஜன்னல தாண்டி தான் திரும்பி ரூம்க்கும் போகணும்....

"அப்புறம் போனீங்கள இல்லையா..."

"போய்டேன் அங்கேயே...." என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை

"என்னங்க விசாரணைக்கு ஹெல்ப் பண்ணா.... உங்களுக்கு சிரிப்பு வருதா..."

"சார் நீங்க கோர்ட்ஸ்டாப்.... இதெல்லாம் கேசுக்கு சல்லி போறாது.. உங்களுக்கே தெரியும்...."

"தெரியும் சார்.... இது எப்போ உங்களுக்கு கேஸ் ஆச்சு... இது ஒரு நேச்சுரல் death... அடிக்கடி உடம்பு முடியாம போகும்.... தீடீர்னு நைட் கால் பண்ணுவார்.. ஓடி போய் அவர் டாக்டர் கிட்ட செப்போம்.. திரும்பி வந்து இங்கயே உட்க்காந்துக்குவாறு..."

" அன்னிக்கு நைட் கூட உங்களுக்கு கால் பண்ணி இருக்காரு இல்லையா..?"

"ஆமா சார் அன்னைக்கு நான் தான் நைட் டுட்டி.... கோர்ட் பாரா "

"அஞ்சு தடவ கால் பண்ணி இருக்காரு...".

தலையை சொரிந்தார்....

"தூங்கிட்டேன் சார்.. போன் பாத்தவுடன் உடனே ஓடி போனேன்.. அவரே வெளில வர ட்ரை பண்ணி இருக்காரு.. கீழ விழுந்ததுல சின்ன அடி... மயங்கி கெடக்காரு நெனச்சு.. பக்கத்து கோர்ட்ல பாரா பக்குரவங்கள உதவிக்கு கூப்ட்டு ஹாஸ்பிடல்ல செத்தோம்...அப்புறம் தான் தெரிஞ்சுது போய்ட்டார்ன்னு,...."

"முகத்துல சின்ன சின்ன கீறல் இருக்கே...."

"அதெல்லாம் தெரியாது சார்....."

"இத நீங்க natural டெத் அப்படீங்கறீங்க...?"

"அவருக்கு பிடிவாதம் சார் ... உடம்பு முடியல்ல.. பொண்டாட்டி புள்ளய தொரத்திட்டு தனியாவே இருந்தாரு... லீவ் போட மாட்டாறு... டாக்டர் கிட்ட போக மாட்டாறு... நாட்டு மருந்து... மூளிகைன்னு... quartersக்கு பின்னாடி ஒரு குட்டி போதரே வச்சு இருக்கார்.... அதுவும் அந்த சமாதி கிட்டேயே... அவங்க wife அவர்ட எவ்வளோ சண்ட போட்டாங்க தெரியுமா..quarters வேணா வேற வீடு போய்டுவோம்..... டாக்டர் கிட்ட போவோம்.. போகவே இல்லையே.... ரொம்ப பிடிவாதம் சார் அவரு"

"சோ நீங்க என்ன சொல்றீங்க..."

"இங்க இருபது வருஷமா இருக்கேங்கற முறையில சொல்லறேன்.... இந்த கோர்ட் compoundக்கு உள்ள... ஏதோ ஒன்னு இருக்கு.... அதுவும் அந்த சமாதி அவர் வீட்டுக்குநேர் பின்னாடி தான் இருக்கு... அவர் வீட்டுக்குள்ள கூட வருமாம்... அதான் அவசரப்பட்டு மந்திரவாதி எல்லாம் கூப்ட்டு மந்திருச்சு கயிறு கட்ட போய்..... உசுர விட்டுடாரு...."

"நீங்க சொல்லறத பாத்த எனக்கு உங்க மேல சந்தேகம் வருது..."

"சார்.. என்ன போய்...." வாயில் கைவைத்தார்

"யார்ட்ட வேணா கேட்டு பாருங்க.... மகாலிங்கம்னா ஒரு பேர் இருக்கு சார்.. இப்போ தஞ்சாவூர் district ஜட்ஜ் வேணு கோபால் இருக்காரே.. அவர் இங்க பட்டுகோட்டையில majistrate-ஆ இருந்தப்ப இருந்து இங்க இருக்கேன்... அவர்ட்ட வேணா கேட்டு பாருங்க இன்னும் என்ன ஞாபகம் வச்சு என்ன பத்தி சொல்லுவார்.... இதே போஸ்ட்ல இதே வீட்ல இருந்த கருணாகரன் என்ன ஆனாருன்னு தெரியுமா... நல்ல மனுஷன்.. திடீர்னு பத்த வச்சு கிட்டாறு.. அதுக்கு முன்ன இருந்தவரு... சொல்லிக்காம கொள்ளாம resign பண்ணிட்டு போயிட்டாரு..  எங்க போனாருன்னே ஆள் அட்ரஸ் இல்ல.... காத்தடிக்குது வெளில வந்து பாருன்னா.. வெளில வந்த தானே சார் தெரியும்... நீங்க வேணா இன்னிக்கு பாஸ்ட் ட்ராக் ஜட்ஜ் quarters-ல தங்கி பாருங்க...... உங்களுக்கே தெரியும்...."

வேலைக்கு சேர்ந்து வந்த முதல் கேசில் வந்த முதல் சவால் விடுவேனா...??

"கண்டிப்பா தங்குறேன்.... " என்றேன்


No comments: