எண்ணில் அடங்கா கவிதைகள்....
எண்ணற்ற கனவுகள்....
என்னில் முழ்கியது ....
நீ என்னை விட்டு பிரிந்ததும்....!!!
எப்படினே இருக்கு.... மானிட்டரில் முழ்கி இருந்தவர்... என்னை பார்த்தார்....
"எங்கூட வா...." பிரேக் அவுட் ஏரியாவுக்கு இழுத்துட்டு போய்
"என்னாச்சு சொல்லு.....?"
"ஒண்ணுமில்லனே சும்மா... நா எப்பயோ எழுதுனது.. ஞாபகம் வந்துச்சு... சொன்னேன்...."
நான் எதையோ மறைப்பது போல் பார்த்தார்....
"எனக்கு தெரியும்...." என்றார்
தாடையில் கை வைத்து தாடியை சொரிந்தேன்....
"இன்னிக்கு காலையில என்னிக்கும் இல்லாம அதிசயமா .... ஏன்டா சீக்ரமா எழுந்து கோவிலுக்கு போன..."
"என்னிக்கும் இல்லாம அதிசயமா.. சீக்ரம் எழுந்துட்டேன்ல.. அதான்....ரொம்ப நாள் வேண்டுதல்னே...சீக்ரம் எழுந்திருக்கனும்னு..."
"ஹ்ம்ம்...சொல்லமாட்ட ....."
மௌனமாய் நின்றேன்... "பிரபா சொன்னான்...."என்றார்.
"இன்னிக்கு அவ பொறந்த நாள்னே...!!!"
அவர் தோளில் சாய்ந்து லேசாய் ரெண்டு சொட்டு தண்ணீர் தெளித்தேன்.
"டேய்... என்னடா இது சின்ன புள்ள மாறி.....!!"
"போன வருஷம் இந்நேரம்... நாள் முழுக்க என்னோட தான் இருந்தா...ஒரு செகண்ட் கூட பிரியல.... கல்யாணத்துக்கு அப்புறம் இப்படியே இருப்பியா என்ன...? என்னையெல்லாம் கண்டுக்கவே மாட்ட.... அப்படின்னு சொன்னா... லூசு இப்போ தான் என்னால உன்ன சரியா பாத்துக்க முடியல... கல்யாணம் ஆயிடுச்சுனா... யூ ஆர் மை ப்ரோபெர்ட்டி... எப்படி கவனிக்கிறேனு பாருன்னு சொன்னேன்.. இப்போ ஒரு விஷ் கூட பண்ணலை....."
"டேய்.. நீ இன்னும் அவள லவ் பண்றீயா...?"
"என்ன கேள்வினே இது.....லவ் என்ன சுவிட்சா வேணாநோன ஆப் பன்னிட்டு போறதுக்கு.... அவ லவ் பண்றதுக்கு முன்னாடியும் நா அவள லவ் பண்ணேன்... இப்போயும் அவள நா லவ் பண்ணறேன்.....!!!"
"அப்புறம் என்னடா... அவளும் உன்ன லவ் பன்னாதனே...போ போய் அவள்ட்ட பேசு.. அவங்க வீட்ல பேசு.... "
"லவ் பண்ணா... அப்புறம் ஏன்னே விட்டுட்டு போனா.... போன பிறந்தநாள் அப்போ நாங்க வெளில சுத்துநோம்னு சொன்னேன்ல... அப்போ அவங்க அண்ணன் பாத்துட்டனாம்.... திட்டினானாம்...அதுவும் கசின்... அதுக்கு போய்...சாரி கோபி... சரி பட்டு வராது அப்படினுட்டு ஜாலியா போய்ட்ட...."
அவர் ஏதோ பேச வந்தார்... அவரை தடுத்து...
"வீட்டுக்கு..தெரிஞ்சா என்ன..எப்படி இருந்தாலும் தெரிய போறது தானே... இப்போ உங்க அண்ணனுக்கு தெரிஞ்சது நல்லதுதான்.... நம்ம ஜெனரேஷன்..புரிஞ்சுக்குவான்னு.. அவன் நம்பர் வாங்கி பேசுனா... என்னென்னமோ பேசுறான்....அப்புறமா அவ ப்ளீஸ் கோபி விட்டுடு... இனிமே வேணானு ...சொல்லிட்டு கட் பண்ணிட்டா.... என்னமோ நடந்துருக்கு...."
" ஆனா இன்னும் நீ அவள தானே நெனச்சுக்கிட்டு இருக்க...."
"சாமி நாம வேண்டிக்றது எல்லாம் கேக்குதா இல்லையான்னு.. நமக்கு தெரியுமா என்ன...? இன்னும் நாம தெனக்கும் சாமி கும்பிடல... அது மாறி தான்... என் லவ் வேண்டுதல் மாறி... நடந்தாலும் நடக்காட்டியும் வேண்டிகிட்டே இருப்பேன்...!!"
தோளை தட்டிக்கொடுத்தார்....
"அப்ப ஒருவேள அவளே திரும்பி உங்கிட்ட வந்தா....."
"ஒத்துக்கமாட்டேன்...."
"ஏண்டா...?!"
"இன்னமும் அவள நா லவ் பன்றேந்தான்... ஆனா நம்பிக்க.... அன்னிக்கு கடைசியா அவள ஆட்டோ எத்திவிட்டப்ப... அழுதுகிட்டே டாட்டா காமிச்சுட்டு போன... அப்ப எனக்கு என்ன தோணிச்சு தெரியுமா.. இந்த உலகமே எதிர்த்தாலும் அவ என்ன விட்டுட்டு போக மாட்டானு தோணிச்சு.... அடுத்த ஒரு மணி நேரத்துல கால் பண்ணா....சாரி கோபி விட்டுடுன்னு... அப்போ அந்த கண்ணீர்.. எல்லாம் பொய்யா.. நம்பிக்க போச்சுனே.... கசங்குன பேப்பர் மாறி ஆயிடுச்சு.. இனிமே என்ன தான் நேர் பண்ணாலும் பிரிண்டருக்கு யூஸ் ஆகாது....!!!"
"டேய்..உன்ன மாறி ஒரு நல்ல பையன மிஸ் பண்ணிடாடா அவ...."
நான் பேச எத்தனித்த பொழுது .... என் கைபேசி சினிங்கியது..... மெசேஜ்....unknown நம்பரில் இருந்து...
"கோபி... நாளைக்கு காலைல புனேல இருப்பேன்... பஸ் புடிச்சுட்டேன் ..
-G3"
"அண்ணே..அவளே... மெசேஜ் பண்ணிருக்கா... நாளைக்கு புனே வாரலாம்...!!!!
தாவி குதிக்கலாம் போலிருந்தது எனக்கு....
"அய்யயோ... நீ தான் இனி அவள்ட்ட பேச மாட்டியேடா.. இப்போ என்னாடா பண்ண போற...."
"ஆமா.. நா எதுக்கு அவள பாக்க போகணும்... நா போக மாட்டேன்... அவள பாக்க மாட்டேன்... அவள்ட்ட பேச மாட்டேன்...."
ஆபீஸில் இருந்து இருந்து பைகில்வந்துகொண்டிருந்தோம்... அவள மற ...அவள மற...அவள மற மனதிற்குள் சொல்லிக்கொண்டே வந்தேன்... அண்ணன் அவர்கள் அவளை எப்படி எல்லாம் அவாய்ட் பண்ணுவது என்று ஐடியா தந்து கொண்டே வந்தார்....
அவரிடம் திரும்பி கேட்டேன்....
"இந்த பெங்களுருல இருந்து வர பஸ்செல்லம் எங்க வந்துனே இறக்கிவிடும்....!!!!"
" இந்தா இந்த சிக்னல் ரைட் போயி... டேய் டேய் எங்கடா ரைட்ல திரும்புற....."
"டேய்..வேணாண்டா கோபி.... திரும்பா போய் சிக்கல்ல மாட்டாத..."
"அண்ணே.... அவள பாக்க வர்லனே.... ஓரமா நின்னு.. தெரியாம பாத்துட்டு போய்டலாம்....."
ஓவர் bridge ஆரம்பிக்கும் இடத்தில் பஸ் நிக்கும் இடம் இருந்தது ....பெங்களூரில் இருந்து மும்பை செல்லும் வழி... இந்த இடத்தில புனே டிக்கெட்டை எல்லாம் இறக்கிவிடுவார்கலாம்.... நடு ரோட்டில் வண்டியை நிப்பாட்டி இறங்கினேன்....
"டேய்..இது தான் உங்க ஊர்ல ஓரமா......"
அவரை பார்த்து சிரித்தேன்....
"பஸ்சு காலைல தாண்டா வரும்.. இப்பயே ஏண்டா வந்து நிக்கிறா வாடா ரூமுக்கு போகலாம்....."
"பஸ் எத்தனமணிக்கு வரும்னே தெரில.... மிஸ் பண்ணிட்டோம்னா...."
"மெசேஜ் பண்ணி கேளு...."
"அது தப்பு...அது தப்பு....""
"டேய் இல்லனா... அவளே மெசேஜ் பன்னுவாடா வாடா....."
"மோசாமான இடம்ணே.... அவ மெசேஜ் பண்ணி நா வரதுக்குள ஏதாவது ஆயிடுச்சுனா...."
முறைத்தார்.....
"மணி ஒன்பது தான் ஆகுது..... பசிக்குதுடா.......ப்ளீஸ் டா...."
"வாங்க அங்க ஹோட்டல் இருக்கு சாப்பிடுவோம்......"சாபிட்டோம்.... மணி பத்து.....
ஓவர் bridge சுவரில் அண்ணன் சாய்ந்து அமர்ந்தார்... நான் எதிரில் பைக்கில் சாய்ந்தேன்.....
"டேய் பசங்களுக்கு போன் போட்டு சொல்லலாமா....."
"வேணாண்ணே அவங்களுக்கு தெரிஞ்சா திட்டுவானுங்க.. வந்து நம்மள இழுத்துட்டு போய்டுவானுங்க...."
அவர் முகத்தில் ஒரு சந்தோஷம்..பிரபா சீக்ரம் வந்து என்ன காப்பாத்துடா என்று அவசரமாக போன் போட்டார்... பிடுங்க போனேன்.. ஓடினார்... பிடித்துவிட்டேன்...
"என்ன யெங்ககிட்யெவா.. போங்க தல போய் கம்முனு உட்காருங்க...."
"டேய் என்ன விட்டுடுடா..."
"சேரி...இந்தாங்க பைக் சாவி...நீங்க போங்க..."கொடுத்துவிட்டு சிரித்தேன்..."நக்கலு... பைக் ஓட்ட தெரிஞ்சிருந்தா.. எப்பயோ நா கேளம்பிருப்பேனேடா.. உங்கிட்ட ஏன் தொங்கிகிட்டு இருக்க போறேன்...மை fate.. இன்னிக்கு நடு ரோட்டில தான் [பொழுது விடிய போகுது..."
போனில் பாட்டை போட்டார்.....
"உங்களுக்கு போர் அடிச்சுசுனா.. நா வேணா என் லவ் ஸ்டோரிய சொல்லவா...."
"கொண்டேபுடுவேன்...ஓடி போய்டு....."
மணி 12.....
அவரது போனில்....ராக் ஸ்டார் பாட்டு பாட ஆரம்பித்தது...... டக்கென்று மாற்றினார்.....
"ஏன்னே..."
"நீ தா இத கேக்கமாடியே....."
"அது அப்ப.. இப்ப போடுங்க...."
முறைத்துக்கொண்டே போட்டார்.....
"இந்த படத்துக்கு ஒரு ஹிஸ்டரி இருக்கு தெரியுமானே..."
"என்ன... சொல்லி தொல ..."
"நாங்க மூனாவதா பாத்த படம்... இது..."
"அதனால தா நீ இந்த பாட்ட கேக்கலையா..."
"அப்படினா... நா பல படத்தோட பாட்ட கேக்காமா இருக்கணும்....அது இல்லானே..."
"அப்புறம்... ?"
"நாங்க ரெண்டாவதா பாத்த படமும் இதுதான்.... நாங்க எங்க போனாலும் இந்த படம் தான் ஓடி கிட்டு இருக்கும்... பஸ்ல போனா பஸ்ல ஓடும்... ஹோட்டலுக்கு போனா அங்க ஓடும்.. அதனால இத எங்க பாமிலி படமா declare பண்ணியிருந்தோம்...."
"கலிகாலம்.....அப்ப நீங்க பாத்த முத படம்..."
"ஹி..ஹி... ராக் ஸ்டார்..."
"அட கிராதகா....ஹிந்தி படமாச்சே உனக்கு புரியாதே...." என்று யோசித்தவர்... டக்கென்று மிரட்சி ஆனார்... " இதுக்கு மேல என்னால தாங்க முடியாதுடா.... நா நடந்தே போறேன்...."
நடக்க தொடங்கினார்....
"ப்ச்ச்ச்... வாங்கன்னே.. இதுக்கு போயி.... வாங்க.. டீ வாங்கி தரேன்..."
"ஏண்டா.. ஏதோ ப்ரிட்ன்டறு.. பேப்பருனு டயலாக் விட்ட... இந்த பிரிண்டர்.. எத குடுத்தாலும் ஏத்துக்கும் போலயே...". நக்கலடித்தார்
"ஏண்டா.. ஏதோ ப்ரிட்ன்டறு.. பேப்பருனு டயலாக் விட்ட... இந்த பிரிண்டர்.. எத குடுத்தாலும் ஏத்துக்கும் போலயே...". நக்கலடித்தார்
மணி 3..
நல்லா தூங்கி கொண்டிருந்தார்....
நல்லா தூங்கி கொண்டிருந்தார்....
அவசர..அவசரமாக.. அவரை எழுப்பினேன்...
திடிக்கிட்டு எழுந்தவர்...
"என்ன வந்துட்டாளா...?"
"இல்லனே பஸ் வர ஆரம்பிச்சிடுச்சு....." கடுப்பாகி வாயை ஜூஸ் குடிப்பதுபோல் சுருக்கி ஏதோ திட்ட வந்தார்... திட்டமால்.."நல்லா வருது...." என்று கூறி எழுந்து போனார்...
"எங்கண்ணே...."
"வருது டா.... எனக்கு வருது... " தலையில் அடித்துக்கொண்டு போனார்....
மணி 4.30
கையில் டீயுடன் இருவரும் அமர்ந்திருந்தோம்....
"டேய் மாப்ள.. இதோ ஒரு பொண்ணு வருது.... அதுவா....."
"ச்ச... இல்லன்னே..."
"ஆமான்னு சொல்லிருந்த... இங்கயே கொன்றுப்பே...."
"டேய்ய்ய்ய்ய்.... இவள மட்டும் சொல்லிடதடா......"
"என்ன நல்லதனே இருக்கு...."
"அதனால தான்.. உனக்கு கொஞ்சம் ஓவர்... அண்ணனுக்கு வீக் ஹார்ட்.. தாங்கிக்க முடியாது....!!!"
"ஹ்ம்ம்ம்ம்.... உங்களுக்கு தங்கச்சி... ஞாபகத்துல வச்சுக்கோங்க....."
மணி 6.....
"என் பாவம் உன்ன சும்மா விடாதுடா..... டேய்...."
பல்லை கடித்துக்கொண்டு உட்கதிருந்தேன்....
"எனக்கு முன்னாடியே தெரியும் ... யாரோ நம்மகிட்ட fun பன்னிருகாங்கன்னு...." என்றேன்...
"அடப்பாவி ..!!! கொலைகாரா....." என்னை அடிக்க வந்தார்... அப்போது கல்லடா வந்து நின்றது.....
"அண்ணே.. இதா லாஸ்ட்.. இதா லாஸ்ட்..."
லேசானா காற்று.... தாத்தா ஒருவர் லக்கேஜை சிரமாபட்டு இறக்கினார்... அடுத்தது பட்டியை இறக்கினார்.. அடுத்து பேத்தியை
"ஒ இம்சை பத்தாதுன்னு.. இவே வேற...."
அடுத்தது அவள் இறங்கினாள்.. அண்ணே "அவ தான்னே.. அவ தான்னே.. " கத்தினேன். அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு கிழே விழுந்தார்..."இவளா.... ரொம்ப ஓவர்...!!1"
அவள் எங்களை பார்த்து விட்டாள் "அய்யோ பாத்துட்டா... பாத்துட்டா... "
"ஏண்டா எல்லா டபுள் டபுள்ளா சொல்ற.. இதற்க்கு தானே காத்துக்கொண்டிருந்தாய் பாலகுமாரா..."
அவள் நேரே என்னிடம் வந்தாள்.... என்னை பார்த்து சிரித்தாள்
"யாருன்னே இந்த பொண்ணு.நம்மகிட்ட வந்து சிரிக்குது.... லூசா இருக்குமோ..." என்று கூறி முகத்தை திருப்பி கொண்டேன் .
"யாருன்னே இந்த பொண்ணு.நம்மகிட்ட வந்து சிரிக்குது.... லூசா இருக்குமோ..." என்று கூறி முகத்தை திருப்பி கொண்டேன் .
அதிர்ச்சியுடன் பார்த்தார்...
"டேய்..டேய்..டேய்ய்ய்ய்ய்... உலக மகா நடிப்புடா சாமீ....!!!!"
அவளும் முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாள்...
"யம்மா.. அவ கெடக்குறான்.... ஆட்டோ நிப்பட்றேன்.. நீ போ வேண்டிய இடத்துக்கு போ.. முடியல" என்று கூறி ஆட்டோ ஒன்றை நிப்பாட்டி ஏற சொன்னார்... அவள் கண்டுக்காமல் முகத்தை திருப்பி கொண்டு நின்றாள். ஆடோக்காரன் பொறுத்து பொறுத்து பார்த்து அண்ணனை திட்டிவிட்டு போய்விட்டான். நானும் அவளும் சிரித்தோம்.. என்னை பார்த்தார்... அவளை பார்த்தார்...
"சூப்பர் ஜோடி...!!! அவனுக்கு கொஞ்சம் கூட சலிக்கமா... நீயும் நல்லா செஞ்சுவுட்ரம்மா...!!! ஹ்ம்ம்ம் பஸ்சு வந்துடுச்சு ஜாலி.. வீட்டுக்கு போலாம்னு நெனச்சே... இன்னும் எத்தன மணி நேரமோ....."
(இன்னும் நாலு மணி நேரம் நின்று கொண்டிருந்தோம்....அவள் அண்ணன் அடுத்த பஸ்சில் வந்திறங்கி எங்களை பிடிக்கும் வரை.......:-))


