சிறுகதை

Tuesday, September 24, 2013

குற்றம் நடந்தது என்ன?

உமேசின் விவகாரம் பள்ளிகூட நண்பர்கள் வட்டாரத்தில் பரவி துக்கம் விசாரிக்க வந்துவிட்டனர். அதுகுள்ளயேவா.. இந்த சின்ன வயசுலயா.. இப்படி ஆயிடுச்சே.... ஏண்டா நீயாவது காப்பாத்தி இருக்க கூடாத என்று நோந்த என்னை மேலும் நோகடித்தனர் . "என்னடா சக்கு பண்றது.... அவன் சரியா ஹன்ட்ல் பன்னல.... முன்னாடியே தெரிந்து இருந்தா காப்பாத்தி இருக்கலாம் கடைசி நேரத்துல தான் தெரிஞ்சது.... கிரிடிக்கல் ஸ்டேஜ் கப்பாத்த முடியல".

சொந்த பந்தங்கள் அனைவரும் கூடிவிட்டனர்..... பெரியம்மாக்களும் சித்திகளும் குறுக்கும் நெடுக்குமாய் சென்று கொண்டிருந்தனர்... தாத்தாவை காரில் அழைத்துவர அப்பா சென்றுள்ளார்.... அத்தை அவனிடம் பேசாமல் முறைத்துக்கொண்டு என்னிடம் வந்து நீயாவது புத்தி சொல்லி இருக்க கூடாதா பப்பு எனக்கேட்டாள்... எனக்கே தெரியாது மாமி என்றேன்.... நான் அவன் நண்பன் மட்டும் அல்ல கசின்..சின்ன வயசில் இருந்தே ஒரே ஸ்கூல், பி.டெக் வேறு வேறு கல்லூரி என்றாலும் MSஇல் சேர்ந்துகொண்டோம்.

அதிர்ச்சியில் உறைந்து இருந்தேன்.... என்னால் நம்பவே முடியவில்லை... முதல் நாள் இரவு தான் சென்னையில் தரை இறங்கினோம். அப்பொழுது வரை எனக்கே தெரியாது அவன் காதலிப்பது... தீடீர்ன்னு நிச்சயதார்த்தம் என்கிறான் கல்யாணம் என்கிறான்.

 தங்கைகள் அவனை சுத்திக் கொண்டு "எப்படி ப்ரோபோஸ் பண்ண....எப்படி ப்ரோபோஸ் பண்ண.." என்று நச்சரித்தார்கள்....

"ஊமை குசுபண்டா நீ.... பொண்ண பாத்தா மன்ன பாத்து நடக்குறவே.... உம்மன்னா மூஞ்சி மாறியே இருந்துட்டு எப்படி லட்டு மாறி புடுச்சுருக்கான் பாரு....." என்று சிலர் வாழ்த்துகிறார்களா திட்டுகிறார்களா என்பதே தெரியாமல் கன்னத்தில் குத்தி விட்டுஅப்படியே என்னையும் நீயும் இருக்கியே உதாவக்கரை என்பது போல் பார்த்துவிட்டு சென்றனர்.

நான் தின்னைய புடிச்சு நடந்தப்ப என்னைய புடிச்சு  நடந்த பய..... இப்படி செய்துட்டானே. வருபவர்களை சிரித்துகொண்டே வரவேற்று கொண்டிருந்த அவனருகே போய்  "நைட் வரைக்கும் என் கூட  தானேடா இருந்த.... நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாத்திலையும் காதல் வெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இப்படி பண்ண முடியும்...."

"மச்சான் நடந்தது என்னன்னு தெரியாம பேசாத.... பொறுமையா அப்புறம் சொல்றேன் மச்சா.. மாப்பிள தோழனா லட்சணமா ரெடி ஆகு.."

"பொம்பள டிரஸ் போட்டு நித்யாவுக்கு தோழியா கூட நிப்பேன்.... துரோகி... லவ் பண்ற பொண்ண friend கிட்ட சொல்லாத நீயெல்லாம் ஒரு நன்பனாடா..?!இத்தன வருஷம் கூடவே இருந்த என் கிட்டேயே மறைச்சுட்டேல..."

டூ விட்டு சென்று விட்டேன்...  ஸ்கூல் படிக்கும் பொழுதிலிருந்தே எனக்கும் காதலுக்குஅடிதடி.. இத்தனைக்கும் நான் யாரையும் காதலித்தது இல்லை.. எங்க...?! கொஞ்சம் உஷார் ஆகி இந்த பொண்ணு அப்படின்னு பிக்ஸ் பன்றதுக்குல.... மச்ச ஏ ஆளு போற பார்ரான்னு... எவனவாது ஒரு ராஸ்கல் முந்திடுவான்.அந்த பொண்ணுங்க போற லேடி பேர்ட நாங்க ஹெர்குலஸில் follow பண்ணுவோம். பின்னாடி ரோமீயோக்கள் உட்கார்ந்து கடலை போட்டுக்கொண்டே வர நான் சைக்கிளை மிதித்துக்கொண்டு வருவேன். கரெக்ட் ஆய்டுச்சுன்னா நம்மள கழட்டிவிற்று வாங்க..... கலட்டி விட்டுருச்சுன்னா  திரும்பி நம்ம கிட்ட வந்து முதுக சொறிவானுங்க.

அதிலும் இந்த உமேஷ் சுத்தாத பொண்ணு இல்ல.. போகாத ஸ்கூல் இல்ல.... இவனுக்காக நான் மிதித்த கிலோமீட்டர்களை கணக்கிட்டால் ஹிமய மலையை கடந்து சீனா பார்டரை ஊடுறுவியிருக்கும். இருந்தும் ஒரு பொண்ண கரெக்ட் பண்ண துப்பில்லை....அதனால நானும் அவனும் க்ளோஸ் friends. எனக்கு அவன் மேல நம்பிக்க அவனுக்கு என் மேல நம்பிக்க.. இருவரும் எங்கள் எதிர் காலத்திற்கு பெற்றோர்களையே நம்பி இருந்தோம். ஒரு நாள் இரவில் என் நம்பிக்கையை போட்டு உடைத்ததை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை...!!!

நான் நித்யா உமேஷ்  மூவரும் ஒரே பல்கலைகழகதில் வேறு வேறு பிரிவில் MS பட்டம் பெற்று கையில் வேலையுடன் ஒருமாத விடுப்பிற்கு இந்தியா வந்தவர்கள். ஓஹயோ, US-ல் இருந்து கிளம்பி நேற்று முன்னிரவில் டாட்டா சொல்லி சென்னையில் விடு படும் வரை அவர்களுடன் தான் இருந்தேன்.

நித்யாவின் அப்பாஅவளுக்கு ஐயோவாவில் Rockwellஇல் வேலை பார்க்கும் ஒருவனை  பேசி முடித்திருந்தார். பிசினஸ் டீல் எல்லாம் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு இன்னும் சில தினங்களில் அந்த பெயர் தெரியாத மாப்பிள்ளைக்கும் இவளுக்கும் நிச்சயம் பேசப்பட்டு இருந்தது. அவளுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை எப்படியாவது நிறுத்த வேண்டும்... மாறல் சப்போர்டுக்கு என்னையும் அழைத்தாள். வரதே 30 நாலு தான் என்று வர முடியாது என்று நழுவி விட்டேன.பாவம் உமேஷ் மாட்டிக்கொண்டான்.

ஒரே ஒரு நாள் தான்.. வந்தேனா என் லைப்பே மாறிடும் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என்று கெஞ்சினாள். நம்ம உமேஷ் பச்சாம்பசளி எள்ளுக்கும் கொல்லுக்கும் வித்யாசம் தெரியாது  அப்பாவியான அவனை கூட்டிக்கிட்டு போய் கல்யாணத்த நிப்பாட்ட போறேன் என்று கடைசியில்அவனையே அவள்  திருமணம் செய்ய போவதாக வந்து நின்றாள். அவனுக்கு விசித்திரமான சில பழக்கங்கள் உண்டு ஓட மாட்டான் ஓடவே மாட்டான். ஓடுவது என்பது அவனுக்கு ஓடுறமாறியே  அசைவுகள் மட்டும் செய்வது. பஸ் பிடிக்க கூட உடம்பை ஆட்டிக்கொண்டு டான்ஸ் ஆடிவிட்டு ஓடி தான் வந்தேன் என்று அடம் பிடிப்பான். மற்றொன்று தப்பு செய்து மாட்டினாலும் தப்பு செய்யாமல் மாட்டினாலும் வாய்யையே திறக்க மாட்டான்.. மங்குனி.. எப்போதும்வாயில் கொழுக்கட்டை தான்.

அவனிடம் நான் எவ்வளவு துருவினாலும் நடந்ததை சொல்ல மாட்டான்...அதான் நடந்தது என்ன....?? குற்ற புலன் விசாரனையில்  இறங்கினேன்.

Accused No. 1: நித்யா

மாடி ரூமில் அலங்காரம் பண்ணிக்கொண்டிருந்தாள்.... மேலே போனேன்.
"வா வா பப்பு.... உன்னதான் பாக்கணும்னு இருந்தேன்..."
"ஓஹோ நாங்கெல்லாம் கண்ணுக்கு தெரிறோமா..கூட தான்டி இருந்த.. லவ் பண்றோம்னு ஒரு வார்த்த சொல்லி இருந்தா அழகா ஸ்கெட்ச் போட்டு கச்சிதமா சால்வ் பன்னிருப்பேன்ல...... ஏண்டி மறச்ச..?"
"எனக்கே ஷாக் தான் பப்பு....உமேஷ் இப்படி திடீர்ன்னு propose பண்ணுவான் நான்  எதிர் பார்க்கவே இல்ல..."
"என்ன அவன் உன்ன propose பண்ணானா.... ஒ மை காட்.."
"அதுவும் எங்க  அப்பா முன்னால.. எங்க அப்பாவே உறைஞ்சு போய்ட்டார்..."
உமேஷ் அப்படி பட்டவன் இல்லையே.. தேடி வந்த பானுவையே மிஸ் கிட்ட மாட்டி விட்டவன் ஆச்சே..!!!!
"மேல மேல.."
"அப்போ  எங்க அப்பா கிட்ட தெரியாதவண்ண ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்...கல்யாணம் வேணாம்ன்னு சண்ட போட்டு கிட்டு இருந்தேன்....அப்போ அப்பா நீ யாரையாவது லவ் பன்றியான்னு கேட்டார்...இல்ல தெரிஞ்சவன்னா ஓகேவான்னு கேட்டார்...அப்போ டைமிங்ல நச்னு சொன்னான் பாரு....செம.."
"நீ என்ன சொன்ன அதுக்கு..?"
"எனக்கு தெரியாது..இப்போ தான்பா ப்ரோபோசே பன்றான்னு சொன்னேன்.."
"ஹ்ம்ம்...அதுக்கு உங்க டாடி எப்படி ரியாக்ட் பண்ணார்..?"
"நான் எதிர்பார்கவே இல்ல.. அப்பா புகழ்ந்து தள்ளிட்டார்... உங்க தைரியம் புடிச்சிருக்கு... தனம்பிக்க புடுச்சிருக்கு.. போட்டுருக்குற பேன்ட் புடுச்சிருக்குன்னு...பழைய படம் ஹீரோயின் டையலாக் எல்லாம் விட்டுட்டு தம்பியதான் உனக்கு நல்ல தெரியுமே ஓகேவா" என்றார்

"why not..? ok சொல்லிட்டேன்"

"okன்னு ஒரு வார்த்தையில ஒருகொலையே பண்ணிட்டியேடி..?"

Side Accused No. 2: கார்மேகம் - நித்யாவின் அப்பா

நித்யாவின் ஊர் ஈரோடு, பாவனி பக்கத்தில் அந்தியூர். அவள் அப்பா நெசவு தொழிற்சாலை வைதிருந்தார்.பேசுவதில் கோயம்புத்தூர் பாசை தெரிந்தது.... . பெண்களை பெற்ற எல்லா அப்பாகளும் அய்யனார் மாறி இருக்கங்களா இல்ல நாம வில்லங்கம்மா யோசிக்கிறதுனால வில்லனனுங்களா தெரியுறாங்கலா. அவளின் அப்பாவும் அய்யன்னர் தான்.. முனி ராஜ்கிரண் போல் இருந்தார்.. முரட்டு பாசக்காரர் போல... தட்டி தட்டி அவர் பேசியதில் அணைத்து மூட்டுகளும் புலம் பெயர்ந்துவிட்டன.

இந்த பெண்களை பெற்ற அப்பகளிடம் ஒரே தப்பு என்ன தெரியுமா அவர்கள் அதிகம்  பாசம் வைத்து விடுவார்கள், அதனால் காதல் கீதல் என்று வந்தால் அடிக்க முடியாது ஆனா அடிக்க ஆள் வேணும். அப்போ தான் நாம கரெக்டா என்ட்ரி குடுப்போம் "அங்கிள் உங்க பொண்ண நான் ரொம்ப சின்சியரா லவ் பண்ணறேன்" ஆரம்பிக்கும் பொழுதே.... உன்ன தான் ராசா தேடிக்கிட்டு இருந்தேன் என்று  ஆரம்பித்து விடுவார்கள். இவன் எப்படி அடிவாங்காமல்...??? ஒரு வேல உள்காயமா இருக்குமோ...??!!

அவரிடம் சென்று என்னை அறிமுக படுத்திக்கொண்டேன். கட்டான மீசை... கை நீட்டும் அளவு அளவு தள்ளி நின்றாலும் இடிக்கும் தொப்பை.. வேலைகாரர்களை திட்டும் தோரணை.. அக்மார்க் பெண்களின் அப்பா.

"அங்கிள் அந்த கோவில்ல என்ன நடந்துச்சுன்னும் அப்படியே உங்க வருங்கால மாபிள்ளயா பத்தி என்ன நெனைக்குரீங்கன்னு சொன்னீங்கன்னா ரெக்கார்ட் பண்ணி அவங்களுக்கு வெட்டிங் ப்ரெசென்டா  பண்ணலாம் இருக்கேன்.."

"பலே பலே.. இந்த வீட்டு தம்பிக எல்லாம் படு சுட்டி....எடுங்க எடுங்க"

அருகில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்து விறைப்பாக பார்த்தார். மீசையை சீப்பால் சீவிக்கொண்டார்... "மங்களத்தையும் கூப்டனுமா...?"
"இது என்ன ஜோடி நம்பர் ஒன்னா அங்கிள்.. அதெல்லாம் வேணாம்."
"ரெடியா.."
"ஒரு நிமஷம்...."
"ஹ்ம்ம் ரெடி அங்கிள்...ஸ்டார்ட்..."
" நம்ம புள்ள இருக்கே தங்கம்.. தங்கம்னா தங்கம் பத்திர மாதத்து தங்கம்.... எனக்கு இருக்கே நெலம் புலன் இதெல்லாம் சொத்து இல்ல... எ புள்ள தான் எனக்கு இருக்க ஒரே சொத்து.... முகராசிக்காரி.. லெட்சுமி... அவ பிறக்குறதுக்கு முன்னாடி சைக்கிள்ள கடை கடையா போய் ஆர்டர் எடுப்பேன்.... அவ வந்ததுக்கு அப்புறம் தான்... என் முழு சம்பாத்தியம் எல்லாமே..... அவ மேல படிக்க வெளிநாடு போகனும்னு சொல்லும் போதே கிலியாத்தான் இருந்துச்சு... அவ படிப்புக்கு மாப்பள கிடைக்குமான்னு.... இப்போ வந்து கல்யாணம் வேணாம்ன்னு சொல்லு போது... காதலா இருக்குமோன்னு கொஞ்சம் சஞ்சலம் துளிர் விட்டுச்சு.... எம் புள்ள உண்மையதான் சொன்னா இல்லேன்னு.... அவ எப்ப உண்மை சொல்றா பொய் சொல்றாங்குறது  எங்களுக்கு தெரியாதா.. அப்போ என் முன்னாடியே.. ந உன்ன கதிலிக்கிறேன்னு சொன்ன மாப்பள தைரியம்.. அது  உண்மையா காதலிச்சா தான் வரும். எம் புள்ள உங்க இஷ்டம்ன்னு சொல்லிட்டா... அவளுக்கும் விருப்பம் இருக்குன்னு புரிஞ்சுது..... சந்தோசம்.... கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்தா ரொம்ப சந்தோசம். " என்றவர் தொடர்ந்து
"போதுமாப்பா இல்ல நா வேணா.. ஒரு தடவ எழுதிட்டு வந்து பேச வா.. ஒரு கோர்வையே  இல்லாம இருக்கு.."
"இல்ல இல்ல அங்கிள்... கேன்டிட்டா வந்துருக்கு.. நல்லாருக்கும் ".

அப்பொழுது உமேஷ் வந்தான்.. "வாங்க மாப்புள உங்கள பத்தி தான் பேசிகிட்டு இருந்தேன்...." அவன் தோலில் கையை போட்டு  என்னை பார்த்து சொன்னார் "ரெண்டு வருஷம்மா லவ் பண்றாராம்.... ஒரு வார்த்த சொல்லலியே.. நேரே என் முன்னால சொன்னார் பாரு.... பச்ச்ச்ச் கலக்கிடீங்க மாப்ள..."
"ரெண்டு வாருஷமா...?" என்று அதிர்ச்சி ஆனேன் அவன்  மலுபலாய் சிரித்தான்.

Main Accused: உமேஷ் எனும் துரோகி

 நிச்சயம் ஒரு வழியாக முடிந்தது....அனைத்து குற்றதிற்கும் காரணம் அவன் தான் என்று புரிந்தது.... அவன் புழு மீசை வைத்து இருப்பவர்களை பார்த்தாலே பயப்படுவானே.... இந்தாள்கிட்ட இவ்வளவு தைரியமா எப்படி..எப்படி ...?

அவனிடம் "உண்மைய சொல்லு.. அடி இல்ல.... திட்டு இல்ல....சொல்லல... வெட்டு குத்து தான் பத்துக்க..."


பல மணி நேர கெஞ்சலுக்கும் மிரட்டலுக்கும் பிறகு.... ப்ளீஸ் யார் கிட்டயும் சொல்லிடாத.... என்று ஆரம்பித்தான்

"அவள் குல தெய்வம் இருந்த கோவிலுக்கு போனோம்... கற்கோவில்.... சாமி கும்பிட்டுவிட்டு கோவிலை சுற்றி கொண்டிருந்தோம்.. அவள் கல்யாணத்தை பற்றி பேச்சை ஆரம்பிக்க முயற்சித்தாள்.. அதற்குள் அவள் அப்பா வர வெள்ளிகிழம மாப்பிள வீட்டுக்காரங்க வராங்க நீங்களும் இருங்களேன் என்று என்கிட்ட கேட்டார். அதற்குள் அவள் "அப்பா இப்போ கல்யாணம் வேணாம்ப்பா..." என்று கெஞ்சினாள்.  அவரும் அவள் தலையை வருடி விட்டு " அமெரிக்காவுக்கு படிக்க போறேன்னு சொன்ன.. ஏதாவது சொன்னேனா....?"
"அதுவந்து.. அது வேற..."
"சொன்னேனா.."
"இல்ல.."
"உன்கூட படிச்ச சங்கீதாவுக்கு ரெண்டு புள்ள நேத்து வந்தாலே பாத்தில்ல.."
"நீ இதுக்கு மேல படிச்சா உனக்கு மாப்பிள பாக்குறது கஷ்டம்.. இதுக்கு மேல வயசானாலும் மாபிள்ள பாக்குறது கஷ்டம்.... இதுக்கு மேல உனக்கு காரணம் கண்டுபிடிக்கிறதும் கஷ்டம்... என்ன நீ யாரயாவது லவ் பண்றியா....."
அவள் வேறு என்ன காரணம் சொல்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தாள்.
"சொல்லு என்ன முழிக்கிற.."
அதுவரையில் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த அவளது அம்மா
"அடிப்பாவி சொல்லுடி...ஏம்பா தம்பி நீயாவது சொல்லேன் அவ லவ் பன்றாளா ..?"
அப்பொழுது தான் நான் சொன்னேன் "I Love You"என்று

"எப்படி டா சம்பந்தமே இல்லையே....."

"முழுசா கேளு மச்சான் .... அந்தாள பாத்தால்லே நடுங்குதுடா எனக்கு.... வந்து கிந்திர போறான்.. " கதவை சாத்திவிட்டு மேலும் தொடர்ந்தான்.

"அவர்கள் பேசுனதை கொஞ்சம் கூட நான் கேட்கவில்லை ஒரு சூப்பர் பிகர் ஒன்னு கோவிலுக்குள்ள போச்சு அது திரும்பி வருமான்னு அப்படியே பார்க்க...பாத்துக்கிட்டே.. கோவில் சுவத்துல நோட்டம் விட்டு கிட்டு இருந்தேன்."

"இங்கு சிறுநீர் கழிக்காதீர்.... வேன்கோப் சிக்கென்..... குட்டிபுலி.... இன்ப நிலா.... எப்பயாவது எதையாவது சம்மந்தமே இல்லம சத்தம் போட்டு படிச்சுருக்கியா....."

 நான் புரியாமல் விழித்தேன்

"நான் படிச்சேன் I Love youன்னு கோவில் சுவத்துல எழுதி இருந்ததை" என்றான் புரிந்தது நம்ம ட்ரைனிங் ஆச்சே சும்மாவா பின்ன.....நண்பன்டா கட்டிகொண்டேன்.  இவன் நடந்ததை யாரிடமும் சொல்ல மாட்டன் சொல்லவே மாட்டான்.

Monday, September 23, 2013

பொக்கிஷம்4- என் காதலின் மரணசாசனம்


தை எங்கோ தவறாக போவதை உணர்ந்த நான்... வேகமாக பக்கங்களை புரட்டினேன்.. அப்பொழுது நான் அமர்ந்திருந்த இடத்தில ஒரு பரபரப்பு ஏற்ப்பட்டது.... பலர் அருவியை நோக்கி ஓடி கொண்டிருந்தனர்.... எங்கிருந்தோ வந்த ஆம்புலன்ஸ் வேகமாக கிராஸ் செய்தது..... என்ன வென்று ஒருவனிடம் விசாரிக்கையில் "யாரோ ஒருத்தே மப்புல மேல இருந்து கீழ குதிச்சுட்டானாம்...." என்றார்.

ஒரு கணம் விக்கியா இருக்குமோ என்று மனம் திடிகிட்டது... அது ஏனோ அறியாதவர்களுக்கு விபரீதம் ஏற்படும் பொழுது பட படபடக்காத மனது.. சிறிது பழக்கப்பட்டவர்களுக்கு ஏதோனும்  நொந்து நூட்லஸ் ஆகி விடுகிறது. ரயில் சிநேகிதம் போல் கடந்த 20-25 நிமிடங்களில் என்னுடன் ஒற்றையாக உரையாடிக்கொண்டிருந்த விக்கியாக அது இருந்து விடக்கூடாது என்று மனது வழியில் வந்த பெயர் தெரியாத கடவுளிடம் வேண்டிக்கொண்டது.

நான் இந்த டைரி எடுத்த இடத்திற்கு வெகு அருகில் கும்பல் கூடி இருந்தது..... கன்னடத்தில் சிலர் பேசிக்கொண்டிருந்தனர்... தமிழும் அதிகம் புழக்கம்....

"போட்டோவுக்கு போஸ் குடுக்குறேன்னு கம்பி தாண்டி வந்து வழுக்கி உளுந்த்ருப்பான் ..."

"suicideபா..."

"யாரவது தெரிஞ்சவங்க இருக்கீங்கல்லா....?"

"செம்ம சரக்கு.... சின்ன புள்ளயா தெரியுது....'

போன்ற  குரல்கள்.... வரையப்படாத எல்லை கோட்டை தாண்டாமல் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்கள்..... சிலர் செல் போன்னில் புகை படம் எடுதுகொண்டிருந்தனர்...
"யாரு முதல்ல பாத்தா..?" என்ற கேள்விக்கு பதில் இல்லை.
டேய் நீதானே என்று ஒருவன் நீட்டிய கை ... தட்டிவிடப்படது...
ஆம்புலன்ஸ்க்கு உள்ளிருந்து பல கருவிகளை எடுத்து முதலுதவி அளித்துக்கொண்டிருந்தார்கள்.... சில நிமிடங்களில் அவன்.. அவன் என்கிற மதிப்பை இழந்து "அதை வண்டியில் ஏத்துங்கப்பா...." என்றாகிவிட்டது.

என்னையும் அறியாமல் கண்கள் அஞ்சலி செலுத்தியது.... இது விக்கியாக இருக்ககூடாது  என்று மனம் இன்னும் மன்றாடியது..... டைரியின் கடைசி பக்கத்தை படித்தால் தெரிந்துவிடும்.... 
கடைசி பக்கத்தின் தலைப்பே என்னை உடைத்துவிட்டது.....

"என் காதலின் மரண சாசனம்...!!!

நானும் நீயும் காதலித்துக் கொண்டிருந்த சமயம்.... நீ கேட்டாய் நீ எப்படி தைரியமாய் என் அப்பாவிடம் வந்து பெண் கேட்ப்பாய் நீ தான் சரியான பயந்தாங்குளி ஆயிற்றே என்று... அதற்கு நான் சொன்னேன் உன் கண்களை காணத்தான் எனக்கு பயம்... அந்த கண்களை தினம் கண்டு அஞ்ச.... தைரியமாய் நான் யாருடனும் போரிட தயார் என்று....!!

நான் என் தைரியத்தை நிரூபித்தேன்.. ஆனால் நீ....?!

திடிரென ஒரு நாள் இனி நான் சிக்கன் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாய்.... ஏன் என்று கேட்டதற்கு சொல்லாமல் வெட்கபாட்டாய் ... உன்னை வற்புறுத்தி கேட்டபொழுது சொன்னாய் பிடித்த ஏதாவது ஒன்றை விட்டால் தான் பிடித்த மற்றொன்று கிடைக்கும்... சிக்கன்ன விட்டு உன்ன கேட்ருக்கேன் சாமி கிட்ட என்று.

என்னை விட அதிகம் கதலிக்கிறாயோ என்று பெருமிதம் கொண்டேன். ஆனால் அப்பொழுது தெரியவில்லை உன் பெற்றோருக்காக என்னை விட்டு விடுவாய் என்று. 

யாருமில்ல சாலையில் நீயும் நானும் நடைபலகையில் கேட்டேன்... நான் உன்ன விட சீக்கிரம் செத்து... கேட்பதற்குள் வாயைமூடி கண்ணீரை பதில் அளித்தாய். விடாமல் கேட்டேன் த்துட்டா..? நீ கோபமாய் என்னை அடிக்க வந்தாய்... உன்னை தடுத்து நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் என்றேன். அழுது கொண்டே ஓடிவிட்டாய். 

நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்... இன்று உனக்கு கல்யாணம்... !!!


மனிதர்கள் அழிப்பது காடுகளையும் 

விலங்குகளையும் மட்டும்மல்ல...
மனிதர்களையும் தான்...!!!

படித்து முடித்த பொழுது... ஆம்புலன்ஸ் சென்றிருந்தது.. கூட்டம் கலைந்து அவரவர் வேலையை பார்க்க சென்று இருந்தனர்.... நாய்கள் சிந்தியிருந்த ரத்த திட்டுக்களை மோப்பம் இட்டுக்கொண்டிருந்தன. இன்னும் ஏன் மனது அது விக்கியாக இருக்க கூடாது என்று வேண்டிக்கொண்டது. 

Wednesday, September 18, 2013

பொக்கிஷம் 3

ஜூலை 6, 2009
தஞ்சையில் 1000 ஆண்களுக்கு 
1033 பெண்கள் இருக்கிறார்களாம்..
இருந்தும்  ஏன் அனைவரும்
உன் பின்னால் சுத்துகிறார்கள்...?!

ஆகஸ்ட் 21, 2009
ஒரு பொய்யாவது சொல் பெண்ணே 
உன்  காதல் நான் தான் என்று...
அந்த சொல்லில் உயிர்வாழ்வேன்....

#அத பொய்ன்னு மட்டும் சொல்லிடாதே...:-)

செப்டம்பர் 24, 2009

நான் பிறந்த பொழுதே  எனக்கு விக்னேஷ் என்று பெயர் வைத்து என் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டாள் என் அன்னை. கல்லூரியே அவள் பின்னல் சுற்றும் பொழுது நான் அவள்  கண்ணில் கூட பட்டிருக்க மாட்டேன்... அவள்  பெயர் வைஷ்ணவி என்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால். நானும் அவளும் அடுத்த அடுத்த ரோல் நம்பர். அவளை  முதலில் பார்த்தது electronics லேப்பில் தான். batch த்ரீயா போய் அங்க உட்கார் என்று mam நீட்டிய திசையில் அவள் தனியாக அமர்ந்திருந்தாள்.

கண்டவுடன் காதல் வந்துவிடவில்லை. இவள்ளோ பேர் ஏன் சுத்துகிறார்கள் என்று தான் தோணியது. அவள் அமர்ந்திருந்த ஸ்டூலுக்கு ஒரு ஸ்டூல் தள்ளி தான் அமர்ந்தேன்.  அடுத்து வந்தான் வைஷாக்....  கண்களில் ஆண்களே பட மாட்டார்கள் போல. நேரே வந்தவன் அவள்  அருகே அமர்ந்தான்.... பேச ஆரம்பித்தவன் அடுத்த இரேண்டரை நேரம் நிறுத்தவே இல்லை. இவன் இருக்கும் பொழுது என்னால் அவளிடம் ஒரு வார்த்தை கூட  பேசி இருக்க முடியாது.  இருந்தும் கடவுள் என் காதல் கட்டங்களை நகர்த்தினார்.  

நான்  படிப்பில் கொஞ்சம் மட்டம்.. ஆனால் என் குரூப்பில் இருக்கும் மீதி இருவரும் என்னை  விட மகா மட்டம்...ஹி...ஹீ... அதனால் லேப்  செய்ய வேண்டியது என் பொறுப்பு.... அவளுக்கு  சொல்லி தர வேண்டியதும் என் பொறுப்பு. முதலில் அவள் தான் கேட்பாள் "எப்படி விக்னேஷ் " என்று...   ஆரம்பத்தில் ஒரு சேவையாக செய்த நான்...  பின்னாளில் ஒரு கடமையாக செய்ய ஆரம்பித்தேன்... அவள் கேட்காவிட்டாலும் நானாக சொல்லி கொடுக்க ஆரம்பித்தேன்.. அப்படியே கற்று கொள்ளவும் ஆரம்பித்தேன் காதலை.

கொஞ்சம் கொஞ்சம்மாக வைஷாக்கை ஓவர்டேக் செய்த நான் இப்பொழுதெல்லாம் அவனை பேச கூட விடுவதில்லை... நான் ஆவலுடன் பேசி கொண்டிருக்கையில் அவன் டவுட் என்கிற  பேரில் disturb செய்வான்.. அது ஏனோ என் காதில் விழுவதில்லை.

உன்னிடம் கற்றுக் கொள்ள 
வேண்டிய காதல் நிறைய இருக்கிறது 
தவறாமல் வா கல்லூரிக்கு...!!!
ஜனவரி 18, 2010

உன் பெயரென்ன மின்சாரமா 
யார் உச்சரித்தாலும் ஷாக் அடிக்கிறதே எனக்கு.

பிபரவரி 14, 20110
ஆடைகளை அழகாக்க பிறந்தவள் நீ...!!!

மார்ச் 28, 2010

சொல்லாத காதல் கடவுளை சேராது என்பார்கள்... என் காதலை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. I love you என்ற மூன்று வார்த்தைகள் என் காதலை முழுதாக பிரதிபலிக்க வில்லை. ஏன் தீந்தமிழில் கூட என் காதலை முழுதாக  தெரிவிக்க முடியவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அன்று மதியமே அணைத்து வகுப்புகளும் முடிந்து விட்டன. அவள் தஞ்சைக்கு பஸ் ஏறினாள். அதை கடையில் இருந்து பார்த்துகொண்டிருந்த நான்... வேகமாக ஓடி ஏறினேன். அவள் முன் சீட்டில் அமர்ந்திருந்தாள்.. என்னை கண்டதும் ஒரு  புன்னகையை உதிர்த்துவிட்டு திரும்பி கொண்டாள். என்னுடன் ஏறிய மற்ற இரண்டு பசங்க... அவள் அருகில் இருந்த சீட்டில் போய் அமர்ந்துகொண்டு... அவளை பார்த்து  "நீங்க வந்தா மட்டும் போதும்..." என்றனர்.

காதல் ஒரு மதம் என்றால் 
அவள் எனக்கு தெய்வம் 

அவளையே அசிங்க படுத்தினால்....?! நான் வேகமாக அவர்களை நோக்கி நடந்தேன்... அதற்குள் ஒருவன் செல் போனை எடுத்து அவளை படம் பிடித்தான்.... செல் போனை பிடுங்கி வெளியில்  வீசி விட்டேன். 

இருவரும் சேர்ந்து அடிக்க தொடங்விட்டனர்.... நானும் அடித்தேன்.. இருந்தும் அடி வாங்கியது தான் அதிகம்...பஸ் நின்றுவிட்டது..... "வாடா #@#@# நாளைக்கு வருவேல செத்த.." என்று மேலும் கத்திக்கொண்டே  இருவரும் இறங்கி போனை எடுக்க ஓடினார்கள். நான் அவளை பார்த்துக்கொண்டே பின்னல் போய் அமர்ந்துகொண்டேன்.... பஸ் கிளம்பியது.

உடம்பு வலித்தது அதை விட வலித்தது மனது... பேருந்து நிலையத்தில் இறங்கி வேகமாக நடந்தேன்... கூபிட்டாள்... நடையை தொடர்ந்தேன்.... ஓடி வந்தாள்... அவள் பேச ஆரம்பிப்பதற்குள் கத்த ஆரம்பித்து விட்டேன்... "  உன்ன யாரு தனியா வர சொன்னது...." அவள் ஏதோ பேச ஆரம்பித்தாள்  'அந்த iswariyaa எங்க போனா... ஒரும நேரம் வெயிட் பன்னா காலேஜ் பஸ்லையே வந்துருக்கலாம்ல...இப்போ பாரு... லூசு.. இதெல்லாம் தேவையா...." கோபத்தை  முடியவில்லை..  தொண்டை அடைத்தது.... கண்களில் கண்ணீர் வழிந்தது..... கண்களை தொடைத்து கொண்டு நகர்ந்துவிட்டேன்.

தமிழால் கூற முடியாத 
என் காதலை....
பறை சாற்றியது கண்ணில் 
பூத்த கண்ணீர்...!!!


அதன் பிறகு டைரியில் கவிதையாக எதுவும் எழுதப்படவில்லை.. பக்கங்களை முழுவது கட்டுரை போல் சமூகத்தை திட்டியும்..... ஏன் காதலை எதிர்கிறார்கள் என்றும்  பல பக்கங்கள் எழுதப்படிருந்தது.....

ஒருத்தியை காதலித்த என்னை 
ஏன் யாரோ ஒருவனை காதலித்த 
ஒருத்தியுடன் வாழ சொல்கிறீர்கள்...? 

கதை எங்கோ தவறாக போவதை உணர்ந்த நான்... வேகமாக பக்கங்களை புரட்டினேன்.. அப்பொழுது நான் அமர்ந்திருந்த இடத்தில ஒரு பரபரப்பு ஏற்ப்பட்டது.... பலர் அருவியை நோக்கி ஓடி கொண்டிருந்தனர்.... எங்கிருந்தோ வந்த ஆம்புலன்ஸ் வேகமாக கிராஸ் செய்தது..... என்ன வென்று ஒருவனிடம் விசாரிக்கையில் "யாரோ ஒருத்தே மப்புல மேல இருந்து கீழ குதிச்சுட்டானாம்...." என்றார்.

தொடரும்.......

Tuesday, September 17, 2013

பொக்கிஷம்-2

அந்த டைரி ஜனவரி ஒன்றில் இருந்து எழுதப்பட்டு இருந்தாலும் ஒவ்வொரு குறிப்பிற்கும் வெவ்வேறு தேதி எழுதப்படிருந்தது... pen கலரும் அவ்வப்போது மாறி இருந்தது.... நான் பக்ககங்களை திருப்பி மேலும் படிக்க ஆரம்பித்தேன்....
மே 5, 2009
இன்று முதல் 23 நாளைக்கு விடுமுறை.. யாரை கேட்டு லீவ் விடுகிறார்கள்.... பலர் பொழுதுபோக்க கல்லூரி வருவார்கள்.. பலர் சைட் அடிக்க... சிலர் படிக்க.. நான் ஒரு லட்சியத்தோடு கல்லூரி வருகிறவன்... short term goal... ஒரு நாள் ஒரு வார்த்தை... long term.. கல்யாணம்.... ஒரு நாளில் ஒரு வார்த்தையாவது அவளிடம் பேசிவிடவேண்டும்...அது நீண்ட நெடிய கடலையாக இருக்கலாம்.. சின்ன ஹாய் பாய் ஆகா கூட இருக்காலாம்... ஆனா பேசி இருக்கணும்....சில பல நாட்களில் ஒரு நாள் ஒரு வார்த்தை திட்டம் செயல் படுத்த முடியாத அரசு திட்டம் போல் படுத்து விடும்.. அப்போது படுத்தி எடுக்கப்படுபவர்கள் என் நண்பர்களே...இன்று அது போன்ற ஒரு துரதிர்ஷ்டமான நாள்...இன்று அவளுடன் பேச முடியவில்லை.
இன்று முடியாவிட்டால் இன்னும் 23 நாட்கள் அவளுடன் பேச முடியாது....எனக்கு ஒன்றும் பேராசை எல்லாம் கிடையாது... "உன்ன விட்டு போகவே மனசு இல்ல விக்கி.. என் கூடவே வந்துடுன்னு" அவ சொல்ல வேணாம்.. ஏன் ஒரு பாய் கூட முழுதாக சொல்ல வேண்டாம்.... "பா" என்று சொன்னாலே போதும் எனக்கு.. அது போதும் என் காதலுக்கு.
நான் காதலிக்க மட்டுமே கல்லூரி வருகிறவன்.... அவளை பார்க்காமல்.... காதலிக்காமல்.... எப்படி நான் உயிர் வாழ போகிறேன் என்றே தெரியவில்லை. இன்று அவளுடன் ஒரு வார்த்தையாவது பேசிவிட வேண்டும்... எப்படியாவது போன் நம்பர் வாங்கிவிட வேண்டும்.... 5.10 க்கு கல்லூரி பேருந்து கிளம்பும்.. மணி தற்போது 5.
இனி பர்தா போட்டு வா
நான் மற்றும் நாங்கள்
படும் பாடு போதும்.
அவள் பேருந்தை சுற்றி என்னை போன்று அவளை பார்க்கும் பலர் ஒருத்தரை ஒருத்தர் முறைத்துக்கொண்டு என்னையும் முறைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். இத்தனை பேருக்கு மத்தியில் நானும் ஒருவனாய் நிற்க ஈகோ தடுத்து... அதுவும் இல்லாமல் பத்தோடு பதின்நோன்நாக அவள் நினைத்து விட்டால். இனி அவளுடன் பேச முடியும் என்று நம்பிக்கை இழந்து... கொஞ்சம் தள்ளி இருந்த stone பெஞ்சில் அமர்ந்தேன்.
உலகிற்கு காதலை பரப்ப வந்த
காதல் பரப்பு செயளாலரா நீ...?!
உன் கண்களை கண்டதும் அனைவருக்கும்
பற்றிக் கொள்கிறதே காதல் தீ...!!!
புற உலகை மறந்து.. என் உலகை...அவளை நினைத்துக்கொண்டே அமர்ந்திருந்தேன்... தீடீரென்று தேன் சுனாமி அடித்தது... என் பெயர் என்ன அவ்வளவு அழகா.. அவள் கூப்பிடும் பொழுது தோன்றியது...
"விக்னேஷ்...விக்னேஷ்...."
நிமிர்ந்து பார்த்தேன்...கண்களை விரித்து... கையை ஆட்டி.. சத்தம் வராமல் உதடுகளை மட்டும் அசைத்து கூபிட்டாள்...தண்ணீரில் அடித்து செல்லும் பூ போல அவளிடம் சென்றேன்...
"உன்கிட்ட டிஜிட்டல் புக் இருக்கா..?"
"எ..ஏன்..."
"ப்ச்ச்ச்...அரியர்ஸ் பா...."
"என்ன வைஷு...ஆல் கிளியர்ன்னு சொன்ன..."
கண்ணை சிமிட்டி... "அப்படி தான் சொல்லுவோம்..."
"ஹோ...ஹோ... எத்தனை..?"
"4... புக் இருக்கா இல்லையா..."
"இருக்கு இருக்கு.... எப்போ வாங்கிகிற...?"
" நாளைக்கு வாங்கிக்கலாமுன்னு நெனச்சேன்..." என்று அவள் இழுக்கும் பொழுதே.
"சரி..." என்றவுடன்
"பஸ்சுக்கு டைம் ஆச்சு.." என்று பறந்து விட்டாள்.
நாளைக்கு ஒரு நாள்.. 4 பரீட்சைக்கு 4 நாள்... 4+1... 5 நாள்... அப்புறம் அடுத்த மூணு பரீட்சை புக்குக்கு 3 நாள்.. மொத்தம் 8 நாள்....ட்ரைன் டிக்கெட் கான்செல்....பறந்தேன்... காதலென்னும் கப்பல் ஏறி.. வானில் பறந்தேன்..!!!!
மே 24, 2009
உன் அப்பன் உன்னை
கல்லூரிக்கு படிக்க அனுப்பவில்லை
என்னை போன்றவர்களை
படிக்கவிடாமல் தடுக்க அனுப்புகிறான்.
(அது தெரிந்து தான் நீயும் படிப்பது இல்லையோ..!!!)
தொடரும்...

பொக்கிஷம் 1

காலேஜ் முடித்து வேலைக்கு வந்துவிட்டு காலேஜை நினைத்து ஏங்குபவரா நீங்கள்..... அது போல் இங்கு ரெண்டு வருடம் கழித்து ilpயை நினைத்து ஏங்குபவன் நான்...!!! ILPஇல் போட்ட ஆட்டம் போல் எங்கும் போட முடியாது.... அங்கு கிடைத்த நண்பர்கள் கூட்டம் போல் மீண்டும் கிடைக்காது....!!! அடுத்த ப்ராஜெக்ட் போய் விட்டால் அப்பொழுது வந்திருக்குற ILP பாட்சை பார்த்து பெருமூச்சு விட்டு கொள்வது தான் நம்மால் முடிகிற ஒரே விசயம்.. அண்ணே அண்ணேன்னு சொல்லியே ஆட்டய விட்டு வெளியேத்திடுவானுங்க....!!!

அப்படி வெளியேற்ற பட்ட அண்ணன்களில் நானும் ஒருவன்...!!!
"இங்க பாருமா பிரதர்னு எல்லாம் கூப்பிடாதே மனசு வலிக்குது" என்று ஆர்யா ஒரு நஸ்ரியாவிடம் ஒரு முறை கூறுவதை நான் பல நஸ்ரியாவிடம் பல முறை கூற வேண்டிவரும் . Experience கூட கூட தொப்ப சைஸ்சும் கூடிகிட்டே போகுது.... இன்னும் வருடங்கள் போனால் தயவு செஞ்சு அண்ணன் ஆவது கூப்புடுங்க அங்கிள்ன்னு கூப்டாதீங்கன்னு கெஞ்சன்னும் போல.....யாரா இருந்தாலும் பேர சொல்லி கூப்பிடனும்ங்கற corporate கலாசாரத்தினை கொண்டுவந்தவர் என்னை போல் பாதிக்கப்பட்டவராக தான் இருக்க வேண்டும் ...!!!

இப்படி தனிமை படுதபட்டதின் காரணமாக சில பல நாட்காளாக என் பழைய பொழுதுபோக்கான புகைப்படம் பிடித்தலை தூசி தட்டி எடுத்தேன்.... பெங்களுரு உள்ளே எடுத்தால் ஆண்களும் பெண்களும் புகை பிடிப்பதை மட்டுமே அதிகம் புகைப்படம் எடுக்க வேண்டிவரும். நானாக தனியாக நந்தி ஹில்ஸ் சென்று இந்த வாரம் கிளிகெல்லாம் என்று ஆசை. பஸ் ஏறி ஒன்றரை மணி நேர தூக்கத்திற்கு பின் வந்தது நந்தி ஹில்ஸ்.தனியாக சென்றால் தான் நம்மால் நிம்மதியாக போட்டோ எடுக்க முடியும் இல்லை என்றால் கூட வந்தவர்களை போட்டோ எடுத்தே பொழுது சாய்ந்துவிடும்.

பஸ் ஸ்டாப்பில் இருந்து கொஞ்ச தூரம் காட்டுக்குள் நடந்தால் ஏதோ ஒரு பெயர் சொல்லி ஒரு அருவி வரும் ஆனால் சீசன் டைம் இல்லாததால யாரும் இருக்க மாட்டார்கள் போக வேண்டாம் என்றார்கள்... நாம யார் சொல்லி எப்போ கேட்ருக்கோம்... போனேன்... பேய் பூதம் என்று ஒருவர் டீ கடையில் பேசி பயமுறுத்த பார்த்தார்..... இருந்தும் ட்ரெக்கிங்-ஐ தொடர்ந்தோன்.... சில கிலோ மீட்டர் மலை ஏறின பிறகு காடு மிக அடர்த்தியாக இருந்தது....சமீபத்தில் அருவி விழும் சத்தம் கேட்டது..... அதை நோக்கி நடந்த பொழுது.... மரத்தின் மேல் ஒரு அழகான பெயர் தெரியாத பறவை.... காமெராவை எடுத்து ஜூம் பண்ணி போகஸ் செய்தேன்.. அதிர்ஷ்டவசமாக பறவை பறக்கவில்லை.... கிளிக் செய்யும் அந்த நொடி.... மரங்கலிருந்து ஏதோ ஒன்றுஅதன் மீது விழுந்து அதை தள்ளிவிட்டது..... தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டேன்.... என்ன விழுந்தது என்று அருகில் சென்று பார்த்தால் ஒரு 2009-ம் வருட டைரி...!!!

இந்த காட்டுக்குள்ள எப்பிடி டைரி என்று மனதிற்குள் கூறிக்கொண்டே அதை எடுத்து புரட்டினேன் சில பக்கங்கள் எழுத பட்டும் சில பக்கங்கள் எழுத படாமலும் இருந்தது... மார்ச் 28க்கு பிறகு ஒன்றும் எழுதவில்லை...!!!

முதல் பக்கம் முக்கிய நாட்கள் என்று வரும் பக்கத்தில் "பொக்கிஷம்" என்று தலைப்பிடப்பட்டு எழுத பட்டிருந்தது....
"இதை யாரும் படிக்க வேண்டாம்... படித்தால் ரத்தம் கக்கி சாவீர்கள்..... இல்லை இல்லை லாரியில் அடிபட்டு சாவீர்கள்" என்று

டைரியை மூடி எரிந்து விட்டேன்..... தொடர வேண்டாம் திரும்பி போய் விடுவோம் என்று தோணியது... இருந்தும் இது ஒரு சாதாரண டைரி... கையெழுத்து சாதாரண மனிதனுடைய கையெழுத்து தான்... என்ன தான் இருக்கும் என்று பாக்க ஆசையாக இருந்தது..... Curiosity kills.... அந்த டைரியை எடுத்துக்கொண்டு வேக வேகமாக ஆள் நடமாட்டம் இருந்த ஏரியாவுக்கு ஓடி வந்தேன்..... காமெராவை பக்கத்தில் வைத்துவிட்டு அந்த டைரி இன் பக்கங்களை புரட்டினேன்....

"இதை யாரும் படிக்க வேண்டாம்... படித்தால் ரத்தம் கக்கி சாவீர்கள்..... இல்லை இல்லை லாரியில் அடிபட்டு சாவீர்கள்..... இத்தனையும் மீறி படிகிறீர்களா.... படியுங்கள் படித்துத் தொலையுங்கள்... யாரும் படிக்காமல் இருபதற்கு ஏன் எழுத வேண்டும்.... படியுங்கள் ஆனால் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.

நான் ஒவ்வொரு முறை ஊருக்கு பாட்டியை பார்க்க போகும் பொழுதும் சின்ன வயதில் நான் செய்த குறும்புகளை சொல்லி சிரிப்பார்கள்..... நானும் ரசிப்பேன்... மகிழ்வேன்.... இப்படியெல்லாமா செய்தோம் என்று எண்ணுவேன்....அதே நேரம் இத்தனை சுவையான நிகழ்சிகளை எப்படி மறந்தேன் என்று வருந்தவும் செய்வேன். அது போல் தற்போது என் வாழ்வில் நடக்கும் அதிசயங்களையும் ஆனந்தமான நிகழ்வுகளையும் காலத்தின் ஓட்டத்தில் பலி கொடுக்க விரும்பவில்லை... என் வாழ்வின் இறுதி மூச்சு வரை என்னுடன் இருக்க வேண்டும் என ஆசை படுகிறேன்.

அம்மாவோ அப்பாவோ இல்லை கோகுலோ இதை படித்துக்கொண்டிருந்தால் படித்தததை பற்றி என்னிடம் பேச வேண்டாம்.... வேறு யாரும் இதை படித்கொண்டிருந்தால் யாரிடமும் இதை பற்றி சொல்ல வேண்டாம்.... இதைப் படிப்பது நீயாக இருந்தால்.....?!
"

இன்னும் பக்கங்கள் தொடரும்.....

Thursday, September 5, 2013

கிராமம்

கலைஞர் எழுதின பொன்னர் ஷங்கர் படிச்சிருகீங்களா... அதுல மணியங்குறிச்சின்னு ஒரு ஊரு வருமே.. அது தான் என் கிராமம்.... பல வருடங்கள் கழித்து அங்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது..... பாழடைந்த மீனாக்க்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் பாழடைந்திருந்தது..... ஆயிரம் காலத்து கோவில்... சிலர் தங்கள் அழகை மேக் அப் போட்டு குறைத்து கொள்வதுபோல்... இவர்கள் அந்த செங்கற் கோவிலுக்கு சிமெண்ட் பூசி பெயிண்ட் அடித்து அதன் பழமையை கெடுத்து விட்டனர்....!!!

பாண்டியர்களின் எல்லையாக இந்த ஊர் இருந்துள்ளதாக ஒரு வழக்கு.... ஒரு பாண்டியமன்னன் மதுரையில் உள்ளது போலவே அவனது எல்லையிலும் ஒரு கோவில் இருக்க வேண்டுமென விரும்பி.. மதுரை மீனாக்க்ஷி அம்மன் கோவில் போலவே இக்கோவிலையும் எழுப்பி உள்ளான். கோவில் மட்டும்மல்ல ஊரே மாறி போயிருந்தது....ரயில்வே track போல டயர் போன தடங்களை தவிர மீதி இடத்தில புல்  முளைத்திருக்கும் ரோடு இப்பொழுது சர்காரின் ஏதோ ஒரு திட்டத்தால் concrete சாலையாக மாறிவிட்டது.... எல்லாம் முதல்வரின் படம் போட்ட மச்சு வீடுகளாக உருமாறிவிட்டது.... நாட்டாமை வீட்டு பக்கத்தில் இருக்கும் மாட்டு தொழுவதை காணவில்லை.... ஓடி ஆடி விளையாண்ட பொது திண்ணைகள் பாழடைந்து கிடந்தன.... முன்பெல்லாம் போஸ்ட் மாஸ்டர்  டிவி இருக்கும்... சாயும் பொழுதில் வீட்டில் ஊரே இருக்கும் டிவி பார்க்க...இப்போது வீட்டுக்கு வீடு கலைஞர் டிவி .... சோடியம் வேப்பர் லாம்ப்.... 2  நேரத்திற்கு ஒரு வரும் பஸ்....என  எல்லாத்தையும் மாற்றி இருந்த காலம் எனக்கு அங்கு மிகவும் பிடித்த குறிஞ்சி இளைஞர்குழுவையும் விட்டுவைக்கவில்லை.

நான் ஊருக்கு வருவதற்கு மிக பெரிய ஈர்ப்பாக இருந்தது இந்த இளைஞர் குழு தான்....அப்பொழுதெல்லாம் பொங்கல் தினத்தன்று 4 நாட்களும் திருவிழா போல் கொண்டாடுவார்கள்..... சைக்கிளில் செட் கட்டி அப்பொழுது வந்த சலக்கு சலக்கு ஜரிக சேல சலக்கு சலக்கு போன்ற பாடல்களை போட்டுகொண்டு...  ஊர் ஊராக நோட்டீசுகளை கொடுப்பார்கள்... மணப்பாறையில் இருந்த எங்களுக்கு ஒரு நோட்டீஸ் வரும்.... பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓட்டப்பந்தயம்.. யானைக்கு வால் வரையுறது.... மாடுகளுக்கு கொம்புல பெயிண்ட் அடிச்சு ஓடவிடுவாங்க...அப்புறம் மியூசிக் chair அதுவும் ஸ்பெஷலா தாத்தா பாட்டிங்களுக்கு..... இதுல ரொம்ப famous ஆனது கயிறுல பானைய கட்டி அடிக்கவிட்றது ... ஒரு ஆளுக்கு 5 ரூபா.... கண்ணக்கட்டி சுதிவிற்றுவாங்க.... கலந்துகுறவங்க பாதிபேரு சுத்திவிட்டதில் குழம்பிபோயி பான இருக்குற சைடுக்கு பதிலா கும்பல் இருக்குற சைடு வந்து.. கும்பளுக்குள்ள சிலம்பம் விளையாடிகிட்டு இருப்பாங்க.... கலந்துகரதுல பாதி கிழம்... கண்ண கட்டாம விட்டாலே பானைய அடிக்காம நம்ம மண்ட உடைக்க ட்ரை பண்ணுங்க...!!!!

பாட்டுப்போட்டி அதே விட கலகல.... அதுதான் நம்ம ஏரியாவும் கூட... நெறய பேரு திருக்குறள் அதுவும் சொல்லிவச்சாபுல அகர முதல பாடுவானுங்க.. சிலர் பாரதி.. சிலர் சினிமா பாட்டு... எனக்கு  ஒரு கொள்ளு தாத்தா இருக்காரு  எங்க அம்மாவோட தாத்தா.....செரியான ஜொள்ளு தாத்தா போல... ஊர்ல எகித்தாபுள்ள வர பாதி பாட்டிய எங்க அம்மா இது உனக்கு பாட்டி... இது உனக்கு பாட்டின்னு சொல்லிகிட்டே வருவாங்க.... ஊர்ல பாதி வளசிட்டாறு போல...!!!

அந்த தாத்த எனக்கு பாட்டுப்போட்டியில பாட சொல்லி ஒரு பாட்டு சொல்லி தந்தாரு...... எனக்கு அந்த பாட்டு ஒண்ணுமே புரியல....பாட்டிய பத்திடா.... அவ்வையார் பாட்டி எழுதினதுன்னு சொன்னாரு.... அந்த பாட்டுப்போடிக்கு என் அம்மாவும் முன்று பேரில் ஒரு ஜட்ஜ்.... மேடயில ஏறி நான் அந்த பாட்ட பாடினேன்.... "எதுக்கு பொண்டாட்டி.... என்ன சுத்தி வப்பாட்டி... எக்க சக்கம் ஆகி போச்சு கணக்கு......பள்ளி கூடம் போகயில....". அம்மா ஓடிவந்து மைக்க புடிங்கிட்டாங்க. எல்லாரும் என்ன பாத்தோன முதல்ல கேக்குறது "எங்க அந்த பாட்ட பாடு...!!!"

15 வருடத்திற்கு முன் குளத்தங்கரை பிள்ளையார் கோவில் அருகே  வைத்த உறுப்பினர் பெயர் தாங்கிய  தகர போர்டு துறு பிடித்து காற்றில் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது...!!!! ஆம்... இந்த இளைஞர் அணி இப்பொழுது அரசியல் கட்சியின் இளைஞர் அணி போல கிழ போல்டுகளை இளைஞர்களாக கொண்டு இயங்கி கொண்டிருந்தது..!!! ஏன் என்றால் இளைஞர்கள் ஊரில் இல்லையாம்.... எல்லாம் வெளி ஊரு வெளி நாடுன்னு போய்ட்டாங்க... கோவில்ல சாமி தூக்க.. திருவிழாவுல தேர் இழுக்க கூட ஆள் இல்ல.. காசு குடுத்து சிலாம்பாட்டியில் இருந்து தான் குப்புட்றோம் என்ற பொழுது சுருக்கென்றது....!!! ஊரே முதியோர் இல்லம் போல் மாறிவிட்டது...!!!

"ஒரேடியா இங்க வாங்கன்னு சொல்லல திருவிழாவுக்கு வரலாம்ல.... விசேஷம் கல்யாணம்னா நம்மூர்ல நடத்தலாம்ல...." என்றார் தாத்தா.
அவர் எங்கள் வீட்ற்கு வந்தாலும் இரண்டு நாளிற்கு மீள் தங்க மாட்டார்.. ஊருக்கு போகணும்.. ஊருக்கு போகணும் என்று தவிப்பார்..... இது போன்று மண்ணை நேசிப்பவர்கள் அவர்களோடு சரி என்று தான் நெனைக்கிறான். இப்பொழுது இவர்களால் முதியோர் இல்லமாக இருக்கும் கிராமங்கள் இன்னும் சில தலைமுறைகளில் அனாதரவாக ஆகிவிடக்கூடாது....!!!

கிளம்புபோது பொது "போய்ட்டு வரேன் தாத்தா" என்றேன்
" அடுத்த பொங்கலுக்கு வரியா..." எனக்கேட்டார்
"கண்டிப்பா தாத்தா" என்றபொழுது இல்லாமல் சிரித்து வழியனிப்பினார் நான் சொல்லவில்லை அடுத்த வாரம் நான் வெளிநாடு செல்வதை.

பி.கு : குறிஞ்சி இளைஞர் குழுவின் நிரந்தர தலைவருக்கு குழு ஆரம்பித்த பிறகு தான் திருமணம் நடந்தது... அவர் மனைவின் பெயர் குறிஞ்சி...!!!
(எப்படி எல்லாம் ரூட் விட்டுருக்காங்க .பாருங்க..!!!!)