சிறுகதை

Monday, September 23, 2013

பொக்கிஷம்4- என் காதலின் மரணசாசனம்


தை எங்கோ தவறாக போவதை உணர்ந்த நான்... வேகமாக பக்கங்களை புரட்டினேன்.. அப்பொழுது நான் அமர்ந்திருந்த இடத்தில ஒரு பரபரப்பு ஏற்ப்பட்டது.... பலர் அருவியை நோக்கி ஓடி கொண்டிருந்தனர்.... எங்கிருந்தோ வந்த ஆம்புலன்ஸ் வேகமாக கிராஸ் செய்தது..... என்ன வென்று ஒருவனிடம் விசாரிக்கையில் "யாரோ ஒருத்தே மப்புல மேல இருந்து கீழ குதிச்சுட்டானாம்...." என்றார்.

ஒரு கணம் விக்கியா இருக்குமோ என்று மனம் திடிகிட்டது... அது ஏனோ அறியாதவர்களுக்கு விபரீதம் ஏற்படும் பொழுது பட படபடக்காத மனது.. சிறிது பழக்கப்பட்டவர்களுக்கு ஏதோனும்  நொந்து நூட்லஸ் ஆகி விடுகிறது. ரயில் சிநேகிதம் போல் கடந்த 20-25 நிமிடங்களில் என்னுடன் ஒற்றையாக உரையாடிக்கொண்டிருந்த விக்கியாக அது இருந்து விடக்கூடாது என்று மனது வழியில் வந்த பெயர் தெரியாத கடவுளிடம் வேண்டிக்கொண்டது.

நான் இந்த டைரி எடுத்த இடத்திற்கு வெகு அருகில் கும்பல் கூடி இருந்தது..... கன்னடத்தில் சிலர் பேசிக்கொண்டிருந்தனர்... தமிழும் அதிகம் புழக்கம்....

"போட்டோவுக்கு போஸ் குடுக்குறேன்னு கம்பி தாண்டி வந்து வழுக்கி உளுந்த்ருப்பான் ..."

"suicideபா..."

"யாரவது தெரிஞ்சவங்க இருக்கீங்கல்லா....?"

"செம்ம சரக்கு.... சின்ன புள்ளயா தெரியுது....'

போன்ற  குரல்கள்.... வரையப்படாத எல்லை கோட்டை தாண்டாமல் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்கள்..... சிலர் செல் போன்னில் புகை படம் எடுதுகொண்டிருந்தனர்...
"யாரு முதல்ல பாத்தா..?" என்ற கேள்விக்கு பதில் இல்லை.
டேய் நீதானே என்று ஒருவன் நீட்டிய கை ... தட்டிவிடப்படது...
ஆம்புலன்ஸ்க்கு உள்ளிருந்து பல கருவிகளை எடுத்து முதலுதவி அளித்துக்கொண்டிருந்தார்கள்.... சில நிமிடங்களில் அவன்.. அவன் என்கிற மதிப்பை இழந்து "அதை வண்டியில் ஏத்துங்கப்பா...." என்றாகிவிட்டது.

என்னையும் அறியாமல் கண்கள் அஞ்சலி செலுத்தியது.... இது விக்கியாக இருக்ககூடாது  என்று மனம் இன்னும் மன்றாடியது..... டைரியின் கடைசி பக்கத்தை படித்தால் தெரிந்துவிடும்.... 
கடைசி பக்கத்தின் தலைப்பே என்னை உடைத்துவிட்டது.....

"என் காதலின் மரண சாசனம்...!!!

நானும் நீயும் காதலித்துக் கொண்டிருந்த சமயம்.... நீ கேட்டாய் நீ எப்படி தைரியமாய் என் அப்பாவிடம் வந்து பெண் கேட்ப்பாய் நீ தான் சரியான பயந்தாங்குளி ஆயிற்றே என்று... அதற்கு நான் சொன்னேன் உன் கண்களை காணத்தான் எனக்கு பயம்... அந்த கண்களை தினம் கண்டு அஞ்ச.... தைரியமாய் நான் யாருடனும் போரிட தயார் என்று....!!

நான் என் தைரியத்தை நிரூபித்தேன்.. ஆனால் நீ....?!

திடிரென ஒரு நாள் இனி நான் சிக்கன் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாய்.... ஏன் என்று கேட்டதற்கு சொல்லாமல் வெட்கபாட்டாய் ... உன்னை வற்புறுத்தி கேட்டபொழுது சொன்னாய் பிடித்த ஏதாவது ஒன்றை விட்டால் தான் பிடித்த மற்றொன்று கிடைக்கும்... சிக்கன்ன விட்டு உன்ன கேட்ருக்கேன் சாமி கிட்ட என்று.

என்னை விட அதிகம் கதலிக்கிறாயோ என்று பெருமிதம் கொண்டேன். ஆனால் அப்பொழுது தெரியவில்லை உன் பெற்றோருக்காக என்னை விட்டு விடுவாய் என்று. 

யாருமில்ல சாலையில் நீயும் நானும் நடைபலகையில் கேட்டேன்... நான் உன்ன விட சீக்கிரம் செத்து... கேட்பதற்குள் வாயைமூடி கண்ணீரை பதில் அளித்தாய். விடாமல் கேட்டேன் த்துட்டா..? நீ கோபமாய் என்னை அடிக்க வந்தாய்... உன்னை தடுத்து நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் என்றேன். அழுது கொண்டே ஓடிவிட்டாய். 

நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்... இன்று உனக்கு கல்யாணம்... !!!


மனிதர்கள் அழிப்பது காடுகளையும் 

விலங்குகளையும் மட்டும்மல்ல...
மனிதர்களையும் தான்...!!!

படித்து முடித்த பொழுது... ஆம்புலன்ஸ் சென்றிருந்தது.. கூட்டம் கலைந்து அவரவர் வேலையை பார்க்க சென்று இருந்தனர்.... நாய்கள் சிந்தியிருந்த ரத்த திட்டுக்களை மோப்பம் இட்டுக்கொண்டிருந்தன. இன்னும் ஏன் மனது அது விக்கியாக இருக்க கூடாது என்று வேண்டிக்கொண்டது. 

No comments: