காலேஜ் முடித்து வேலைக்கு வந்துவிட்டு காலேஜை நினைத்து ஏங்குபவரா நீங்கள்..... அது போல் இங்கு ரெண்டு வருடம் கழித்து ilpயை நினைத்து ஏங்குபவன் நான்...!!! ILPஇல் போட்ட ஆட்டம் போல் எங்கும் போட முடியாது.... அங்கு கிடைத்த நண்பர்கள் கூட்டம் போல் மீண்டும் கிடைக்காது....!!! அடுத்த ப்ராஜெக்ட் போய் விட்டால் அப்பொழுது வந்திருக்குற ILP பாட்சை பார்த்து பெருமூச்சு விட்டு கொள்வது தான் நம்மால் முடிகிற ஒரே விசயம்.. அண்ணே அண்ணேன்னு சொல்லியே ஆட்டய விட்டு வெளியேத்திடுவானுங்க....!!!
அப்படி வெளியேற்ற பட்ட அண்ணன்களில் நானும் ஒருவன்...!!!
"இங்க பாருமா பிரதர்னு எல்லாம் கூப்பிடாதே மனசு வலிக்குது" என்று ஆர்யா ஒரு நஸ்ரியாவிடம் ஒரு முறை கூறுவதை நான் பல நஸ்ரியாவிடம் பல முறை கூற வேண்டிவரும் . Experience கூட கூட தொப்ப சைஸ்சும் கூடிகிட்டே போகுது.... இன்னும் வருடங்கள் போனால் தயவு செஞ்சு அண்ணன் ஆவது கூப்புடுங்க அங்கிள்ன்னு கூப்டாதீங்கன்னு கெஞ்சன்னும் போல.....யாரா இருந்தாலும் பேர சொல்லி கூப்பிடனும்ங்கற corporate கலாசாரத்தினை கொண்டுவந்தவர் என்னை போல் பாதிக்கப்பட்டவராக தான் இருக்க வேண்டும் ...!!!
இப்படி தனிமை படுதபட்டதின் காரணமாக சில பல நாட்காளாக என் பழைய பொழுதுபோக்கான புகைப்படம் பிடித்தலை தூசி தட்டி எடுத்தேன்.... பெங்களுரு உள்ளே எடுத்தால் ஆண்களும் பெண்களும் புகை பிடிப்பதை மட்டுமே அதிகம் புகைப்படம் எடுக்க வேண்டிவரும். நானாக தனியாக நந்தி ஹில்ஸ் சென்று இந்த வாரம் கிளிகெல்லாம் என்று ஆசை. பஸ் ஏறி ஒன்றரை மணி நேர தூக்கத்திற்கு பின் வந்தது நந்தி ஹில்ஸ்.தனியாக சென்றால் தான் நம்மால் நிம்மதியாக போட்டோ எடுக்க முடியும் இல்லை என்றால் கூட வந்தவர்களை போட்டோ எடுத்தே பொழுது சாய்ந்துவிடும்.
பஸ் ஸ்டாப்பில் இருந்து கொஞ்ச தூரம் காட்டுக்குள் நடந்தால் ஏதோ ஒரு பெயர் சொல்லி ஒரு அருவி வரும் ஆனால் சீசன் டைம் இல்லாததால யாரும் இருக்க மாட்டார்கள் போக வேண்டாம் என்றார்கள்... நாம யார் சொல்லி எப்போ கேட்ருக்கோம்... போனேன்... பேய் பூதம் என்று ஒருவர் டீ கடையில் பேசி பயமுறுத்த பார்த்தார்..... இருந்தும் ட்ரெக்கிங்-ஐ தொடர்ந்தோன்.... சில கிலோ மீட்டர் மலை ஏறின பிறகு காடு மிக அடர்த்தியாக இருந்தது....சமீபத்தில் அருவி விழும் சத்தம் கேட்டது..... அதை நோக்கி நடந்த பொழுது.... மரத்தின் மேல் ஒரு அழகான பெயர் தெரியாத பறவை.... காமெராவை எடுத்து ஜூம் பண்ணி போகஸ் செய்தேன்.. அதிர்ஷ்டவசமாக பறவை பறக்கவில்லை.... கிளிக் செய்யும் அந்த நொடி.... மரங்கலிருந்து ஏதோ ஒன்றுஅதன் மீது விழுந்து அதை தள்ளிவிட்டது..... தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டேன்.... என்ன விழுந்தது என்று அருகில் சென்று பார்த்தால் ஒரு 2009-ம் வருட டைரி...!!!
இப்படி தனிமை படுதபட்டதின் காரணமாக சில பல நாட்காளாக என் பழைய பொழுதுபோக்கான புகைப்படம் பிடித்தலை தூசி தட்டி எடுத்தேன்.... பெங்களுரு உள்ளே எடுத்தால் ஆண்களும் பெண்களும் புகை பிடிப்பதை மட்டுமே அதிகம் புகைப்படம் எடுக்க வேண்டிவரும். நானாக தனியாக நந்தி ஹில்ஸ் சென்று இந்த வாரம் கிளிகெல்லாம் என்று ஆசை. பஸ் ஏறி ஒன்றரை மணி நேர தூக்கத்திற்கு பின் வந்தது நந்தி ஹில்ஸ்.தனியாக சென்றால் தான் நம்மால் நிம்மதியாக போட்டோ எடுக்க முடியும் இல்லை என்றால் கூட வந்தவர்களை போட்டோ எடுத்தே பொழுது சாய்ந்துவிடும்.
பஸ் ஸ்டாப்பில் இருந்து கொஞ்ச தூரம் காட்டுக்குள் நடந்தால் ஏதோ ஒரு பெயர் சொல்லி ஒரு அருவி வரும் ஆனால் சீசன் டைம் இல்லாததால யாரும் இருக்க மாட்டார்கள் போக வேண்டாம் என்றார்கள்... நாம யார் சொல்லி எப்போ கேட்ருக்கோம்... போனேன்... பேய் பூதம் என்று ஒருவர் டீ கடையில் பேசி பயமுறுத்த பார்த்தார்..... இருந்தும் ட்ரெக்கிங்-ஐ தொடர்ந்தோன்.... சில கிலோ மீட்டர் மலை ஏறின பிறகு காடு மிக அடர்த்தியாக இருந்தது....சமீபத்தில் அருவி விழும் சத்தம் கேட்டது..... அதை நோக்கி நடந்த பொழுது.... மரத்தின் மேல் ஒரு அழகான பெயர் தெரியாத பறவை.... காமெராவை எடுத்து ஜூம் பண்ணி போகஸ் செய்தேன்.. அதிர்ஷ்டவசமாக பறவை பறக்கவில்லை.... கிளிக் செய்யும் அந்த நொடி.... மரங்கலிருந்து ஏதோ ஒன்றுஅதன் மீது விழுந்து அதை தள்ளிவிட்டது..... தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டேன்.... என்ன விழுந்தது என்று அருகில் சென்று பார்த்தால் ஒரு 2009-ம் வருட டைரி...!!!
இந்த காட்டுக்குள்ள எப்பிடி டைரி என்று மனதிற்குள் கூறிக்கொண்டே அதை எடுத்து புரட்டினேன் சில பக்கங்கள் எழுத பட்டும் சில பக்கங்கள் எழுத படாமலும் இருந்தது... மார்ச் 28க்கு பிறகு ஒன்றும் எழுதவில்லை...!!!
முதல் பக்கம் முக்கிய நாட்கள் என்று வரும் பக்கத்தில் "பொக்கிஷம்" என்று தலைப்பிடப்பட்டு எழுத பட்டிருந்தது....
"இதை யாரும் படிக்க வேண்டாம்... படித்தால் ரத்தம் கக்கி சாவீர்கள்..... இல்லை இல்லை லாரியில் அடிபட்டு சாவீர்கள்" என்று
டைரியை மூடி எரிந்து விட்டேன்..... தொடர வேண்டாம் திரும்பி போய் விடுவோம் என்று தோணியது... இருந்தும் இது ஒரு சாதாரண டைரி... கையெழுத்து சாதாரண மனிதனுடைய கையெழுத்து தான்... என்ன தான் இருக்கும் என்று பாக்க ஆசையாக இருந்தது..... Curiosity kills.... அந்த டைரியை எடுத்துக்கொண்டு வேக வேகமாக ஆள் நடமாட்டம் இருந்த ஏரியாவுக்கு ஓடி வந்தேன்..... காமெராவை பக்கத்தில் வைத்துவிட்டு அந்த டைரி இன் பக்கங்களை புரட்டினேன்....
"இதை யாரும் படிக்க வேண்டாம்... படித்தால் ரத்தம் கக்கி சாவீர்கள்..... இல்லை இல்லை லாரியில் அடிபட்டு சாவீர்கள்..... இத்தனையும் மீறி படிகிறீர்களா.... படியுங்கள் படித்துத் தொலையுங்கள்... யாரும் படிக்காமல் இருபதற்கு ஏன் எழுத வேண்டும்.... படியுங்கள் ஆனால் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.
நான் ஒவ்வொரு முறை ஊருக்கு பாட்டியை பார்க்க போகும் பொழுதும் சின்ன வயதில் நான் செய்த குறும்புகளை சொல்லி சிரிப்பார்கள்..... நானும் ரசிப்பேன்... மகிழ்வேன்.... இப்படியெல்லாமா செய்தோம் என்று எண்ணுவேன்....அதே நேரம் இத்தனை சுவையான நிகழ்சிகளை எப்படி மறந்தேன் என்று வருந்தவும் செய்வேன். அது போல் தற்போது என் வாழ்வில் நடக்கும் அதிசயங்களையும் ஆனந்தமான நிகழ்வுகளையும் காலத்தின் ஓட்டத்தில் பலி கொடுக்க விரும்பவில்லை... என் வாழ்வின் இறுதி மூச்சு வரை என்னுடன் இருக்க வேண்டும் என ஆசை படுகிறேன்.
அம்மாவோ அப்பாவோ இல்லை கோகுலோ இதை படித்துக்கொண்டிருந்தால் படித்தததை பற்றி என்னிடம் பேச வேண்டாம்.... வேறு யாரும் இதை படித்கொண்டிருந்தால் யாரிடமும் இதை பற்றி சொல்ல வேண்டாம்.... இதைப் படிப்பது நீயாக இருந்தால்.....?!"
இன்னும் பக்கங்கள் தொடரும்.....
No comments:
Post a Comment