சிறுகதை

Tuesday, September 17, 2013

பொக்கிஷம்-2

அந்த டைரி ஜனவரி ஒன்றில் இருந்து எழுதப்பட்டு இருந்தாலும் ஒவ்வொரு குறிப்பிற்கும் வெவ்வேறு தேதி எழுதப்படிருந்தது... pen கலரும் அவ்வப்போது மாறி இருந்தது.... நான் பக்ககங்களை திருப்பி மேலும் படிக்க ஆரம்பித்தேன்....
மே 5, 2009
இன்று முதல் 23 நாளைக்கு விடுமுறை.. யாரை கேட்டு லீவ் விடுகிறார்கள்.... பலர் பொழுதுபோக்க கல்லூரி வருவார்கள்.. பலர் சைட் அடிக்க... சிலர் படிக்க.. நான் ஒரு லட்சியத்தோடு கல்லூரி வருகிறவன்... short term goal... ஒரு நாள் ஒரு வார்த்தை... long term.. கல்யாணம்.... ஒரு நாளில் ஒரு வார்த்தையாவது அவளிடம் பேசிவிடவேண்டும்...அது நீண்ட நெடிய கடலையாக இருக்கலாம்.. சின்ன ஹாய் பாய் ஆகா கூட இருக்காலாம்... ஆனா பேசி இருக்கணும்....சில பல நாட்களில் ஒரு நாள் ஒரு வார்த்தை திட்டம் செயல் படுத்த முடியாத அரசு திட்டம் போல் படுத்து விடும்.. அப்போது படுத்தி எடுக்கப்படுபவர்கள் என் நண்பர்களே...இன்று அது போன்ற ஒரு துரதிர்ஷ்டமான நாள்...இன்று அவளுடன் பேச முடியவில்லை.
இன்று முடியாவிட்டால் இன்னும் 23 நாட்கள் அவளுடன் பேச முடியாது....எனக்கு ஒன்றும் பேராசை எல்லாம் கிடையாது... "உன்ன விட்டு போகவே மனசு இல்ல விக்கி.. என் கூடவே வந்துடுன்னு" அவ சொல்ல வேணாம்.. ஏன் ஒரு பாய் கூட முழுதாக சொல்ல வேண்டாம்.... "பா" என்று சொன்னாலே போதும் எனக்கு.. அது போதும் என் காதலுக்கு.
நான் காதலிக்க மட்டுமே கல்லூரி வருகிறவன்.... அவளை பார்க்காமல்.... காதலிக்காமல்.... எப்படி நான் உயிர் வாழ போகிறேன் என்றே தெரியவில்லை. இன்று அவளுடன் ஒரு வார்த்தையாவது பேசிவிட வேண்டும்... எப்படியாவது போன் நம்பர் வாங்கிவிட வேண்டும்.... 5.10 க்கு கல்லூரி பேருந்து கிளம்பும்.. மணி தற்போது 5.
இனி பர்தா போட்டு வா
நான் மற்றும் நாங்கள்
படும் பாடு போதும்.
அவள் பேருந்தை சுற்றி என்னை போன்று அவளை பார்க்கும் பலர் ஒருத்தரை ஒருத்தர் முறைத்துக்கொண்டு என்னையும் முறைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். இத்தனை பேருக்கு மத்தியில் நானும் ஒருவனாய் நிற்க ஈகோ தடுத்து... அதுவும் இல்லாமல் பத்தோடு பதின்நோன்நாக அவள் நினைத்து விட்டால். இனி அவளுடன் பேச முடியும் என்று நம்பிக்கை இழந்து... கொஞ்சம் தள்ளி இருந்த stone பெஞ்சில் அமர்ந்தேன்.
உலகிற்கு காதலை பரப்ப வந்த
காதல் பரப்பு செயளாலரா நீ...?!
உன் கண்களை கண்டதும் அனைவருக்கும்
பற்றிக் கொள்கிறதே காதல் தீ...!!!
புற உலகை மறந்து.. என் உலகை...அவளை நினைத்துக்கொண்டே அமர்ந்திருந்தேன்... தீடீரென்று தேன் சுனாமி அடித்தது... என் பெயர் என்ன அவ்வளவு அழகா.. அவள் கூப்பிடும் பொழுது தோன்றியது...
"விக்னேஷ்...விக்னேஷ்...."
நிமிர்ந்து பார்த்தேன்...கண்களை விரித்து... கையை ஆட்டி.. சத்தம் வராமல் உதடுகளை மட்டும் அசைத்து கூபிட்டாள்...தண்ணீரில் அடித்து செல்லும் பூ போல அவளிடம் சென்றேன்...
"உன்கிட்ட டிஜிட்டல் புக் இருக்கா..?"
"எ..ஏன்..."
"ப்ச்ச்ச்...அரியர்ஸ் பா...."
"என்ன வைஷு...ஆல் கிளியர்ன்னு சொன்ன..."
கண்ணை சிமிட்டி... "அப்படி தான் சொல்லுவோம்..."
"ஹோ...ஹோ... எத்தனை..?"
"4... புக் இருக்கா இல்லையா..."
"இருக்கு இருக்கு.... எப்போ வாங்கிகிற...?"
" நாளைக்கு வாங்கிக்கலாமுன்னு நெனச்சேன்..." என்று அவள் இழுக்கும் பொழுதே.
"சரி..." என்றவுடன்
"பஸ்சுக்கு டைம் ஆச்சு.." என்று பறந்து விட்டாள்.
நாளைக்கு ஒரு நாள்.. 4 பரீட்சைக்கு 4 நாள்... 4+1... 5 நாள்... அப்புறம் அடுத்த மூணு பரீட்சை புக்குக்கு 3 நாள்.. மொத்தம் 8 நாள்....ட்ரைன் டிக்கெட் கான்செல்....பறந்தேன்... காதலென்னும் கப்பல் ஏறி.. வானில் பறந்தேன்..!!!!
மே 24, 2009
உன் அப்பன் உன்னை
கல்லூரிக்கு படிக்க அனுப்பவில்லை
என்னை போன்றவர்களை
படிக்கவிடாமல் தடுக்க அனுப்புகிறான்.
(அது தெரிந்து தான் நீயும் படிப்பது இல்லையோ..!!!)
தொடரும்...

No comments: