ஜூலை 6, 2009
தஞ்சையில் 1000 ஆண்களுக்கு
1033 பெண்கள் இருக்கிறார்களாம்..
இருந்தும் ஏன் அனைவரும்
உன் பின்னால் சுத்துகிறார்கள்...?!
ஆகஸ்ட் 21, 2009
ஒரு பொய்யாவது சொல் பெண்ணே
உன் காதல் நான் தான் என்று...
அந்த சொல்லில் உயிர்வாழ்வேன்....
#அத பொய்ன்னு மட்டும் சொல்லிடாதே...:-)
செப்டம்பர் 24, 2009
நான் பிறந்த பொழுதே எனக்கு விக்னேஷ் என்று பெயர் வைத்து என் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டாள் என் அன்னை. கல்லூரியே அவள் பின்னல் சுற்றும் பொழுது நான் அவள் கண்ணில் கூட பட்டிருக்க மாட்டேன்... அவள் பெயர் வைஷ்ணவி என்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால். நானும் அவளும் அடுத்த அடுத்த ரோல் நம்பர். அவளை முதலில் பார்த்தது electronics லேப்பில் தான். batch த்ரீயா போய் அங்க உட்கார் என்று mam நீட்டிய திசையில் அவள் தனியாக அமர்ந்திருந்தாள்.
கண்டவுடன் காதல் வந்துவிடவில்லை. இவள்ளோ பேர் ஏன் சுத்துகிறார்கள் என்று தான் தோணியது. அவள் அமர்ந்திருந்த ஸ்டூலுக்கு ஒரு ஸ்டூல் தள்ளி தான் அமர்ந்தேன். அடுத்து வந்தான் வைஷாக்.... கண்களில் ஆண்களே பட மாட்டார்கள் போல. நேரே வந்தவன் அவள் அருகே அமர்ந்தான்.... பேச ஆரம்பித்தவன் அடுத்த இரேண்டரை நேரம் நிறுத்தவே இல்லை. இவன் இருக்கும் பொழுது என்னால் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசி இருக்க முடியாது. இருந்தும் கடவுள் என் காதல் கட்டங்களை நகர்த்தினார்.
நான் படிப்பில் கொஞ்சம் மட்டம்.. ஆனால் என் குரூப்பில் இருக்கும் மீதி இருவரும் என்னை விட மகா மட்டம்...ஹி...ஹீ... அதனால் லேப் செய்ய வேண்டியது என் பொறுப்பு.... அவளுக்கு சொல்லி தர வேண்டியதும் என் பொறுப்பு. முதலில் அவள் தான் கேட்பாள் "எப்படி விக்னேஷ் " என்று... ஆரம்பத்தில் ஒரு சேவையாக செய்த நான்... பின்னாளில் ஒரு கடமையாக செய்ய ஆரம்பித்தேன்... அவள் கேட்காவிட்டாலும் நானாக சொல்லி கொடுக்க ஆரம்பித்தேன்.. அப்படியே கற்று கொள்ளவும் ஆரம்பித்தேன் காதலை.
கொஞ்சம் கொஞ்சம்மாக வைஷாக்கை ஓவர்டேக் செய்த நான் இப்பொழுதெல்லாம் அவனை பேச கூட விடுவதில்லை... நான் ஆவலுடன் பேசி கொண்டிருக்கையில் அவன் டவுட் என்கிற பேரில் disturb செய்வான்.. அது ஏனோ என் காதில் விழுவதில்லை.
உன்னிடம் கற்றுக் கொள்ள
வேண்டிய காதல் நிறைய இருக்கிறது
தவறாமல் வா கல்லூரிக்கு...!!!
ஜனவரி 18, 2010
உன் பெயரென்ன மின்சாரமா
யார் உச்சரித்தாலும் ஷாக் அடிக்கிறதே எனக்கு.
பிபரவரி 14, 20110
ஆடைகளை அழகாக்க பிறந்தவள் நீ...!!!
மார்ச் 28, 2010
சொல்லாத காதல் கடவுளை சேராது என்பார்கள்... என் காதலை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. I love you என்ற மூன்று வார்த்தைகள் என் காதலை முழுதாக பிரதிபலிக்க வில்லை. ஏன் தீந்தமிழில் கூட என் காதலை முழுதாக தெரிவிக்க முடியவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அன்று மதியமே அணைத்து வகுப்புகளும் முடிந்து விட்டன. அவள் தஞ்சைக்கு பஸ் ஏறினாள். அதை கடையில் இருந்து பார்த்துகொண்டிருந்த நான்... வேகமாக ஓடி ஏறினேன். அவள் முன் சீட்டில் அமர்ந்திருந்தாள்.. என்னை கண்டதும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு திரும்பி கொண்டாள். என்னுடன் ஏறிய மற்ற இரண்டு பசங்க... அவள் அருகில் இருந்த சீட்டில் போய் அமர்ந்துகொண்டு... அவளை பார்த்து "நீங்க வந்தா மட்டும் போதும்..." என்றனர்.
காதல் ஒரு மதம் என்றால்
அவள் எனக்கு தெய்வம்
அவளையே அசிங்க படுத்தினால்....?! நான் வேகமாக அவர்களை நோக்கி நடந்தேன்... அதற்குள் ஒருவன் செல் போனை எடுத்து அவளை படம் பிடித்தான்.... செல் போனை பிடுங்கி வெளியில் வீசி விட்டேன்.
இருவரும் சேர்ந்து அடிக்க தொடங்விட்டனர்.... நானும் அடித்தேன்.. இருந்தும் அடி வாங்கியது தான் அதிகம்...பஸ் நின்றுவிட்டது..... "வாடா #@#@# நாளைக்கு வருவேல செத்த.." என்று மேலும் கத்திக்கொண்டே இருவரும் இறங்கி போனை எடுக்க ஓடினார்கள். நான் அவளை பார்த்துக்கொண்டே பின்னல் போய் அமர்ந்துகொண்டேன்.... பஸ் கிளம்பியது.
உடம்பு வலித்தது அதை விட வலித்தது மனது... பேருந்து நிலையத்தில் இறங்கி வேகமாக நடந்தேன்... கூபிட்டாள்... நடையை தொடர்ந்தேன்.... ஓடி வந்தாள்... அவள் பேச ஆரம்பிப்பதற்குள் கத்த ஆரம்பித்து விட்டேன்... " உன்ன யாரு தனியா வர சொன்னது...." அவள் ஏதோ பேச ஆரம்பித்தாள் 'அந்த iswariyaa எங்க போனா... ஒரும நேரம் வெயிட் பன்னா காலேஜ் பஸ்லையே வந்துருக்கலாம்ல...இப்போ பாரு... லூசு.. இதெல்லாம் தேவையா...." கோபத்தை முடியவில்லை.. தொண்டை அடைத்தது.... கண்களில் கண்ணீர் வழிந்தது..... கண்களை தொடைத்து கொண்டு நகர்ந்துவிட்டேன்.
தமிழால் கூற முடியாத
என் காதலை....
பறை சாற்றியது கண்ணில்
பூத்த கண்ணீர்...!!!
அதன் பிறகு டைரியில் கவிதையாக எதுவும் எழுதப்படவில்லை.. பக்கங்களை முழுவது கட்டுரை போல் சமூகத்தை திட்டியும்..... ஏன் காதலை எதிர்கிறார்கள் என்றும் பல பக்கங்கள் எழுதப்படிருந்தது.....
ஒருத்தியை காதலித்த என்னை
ஏன் யாரோ ஒருவனை காதலித்த
ஒருத்தியுடன் வாழ சொல்கிறீர்கள்...?
கதை எங்கோ தவறாக போவதை உணர்ந்த நான்... வேகமாக பக்கங்களை புரட்டினேன்.. அப்பொழுது நான் அமர்ந்திருந்த இடத்தில ஒரு பரபரப்பு ஏற்ப்பட்டது.... பலர் அருவியை நோக்கி ஓடி கொண்டிருந்தனர்.... எங்கிருந்தோ வந்த ஆம்புலன்ஸ் வேகமாக கிராஸ் செய்தது..... என்ன வென்று ஒருவனிடம் விசாரிக்கையில் "யாரோ ஒருத்தே மப்புல மேல இருந்து கீழ குதிச்சுட்டானாம்...." என்றார்.
தொடரும்.......
No comments:
Post a Comment